Tirunelveli

News August 16, 2024

நெல்லையில் 128 தனியார் மருத்துவமனைகள் இயங்காது

image

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் மானபங்கம் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தியும் நெல்லை மாவட்ட தனியார் மருத்துவமனைகள் நாளை ஆகஸ்ட் 17 காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் இயங்காது. அவசர மருத்துவ சேவை மட்டும் நடைபெறும் என இந்திய மருத்துவச் சங்க நெல்லை மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

News August 16, 2024

திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயில் நாளை ரத்து

image

திருநெல்வேலி – சென்னை இடையே இயக்கப்படும் அதிவிரைவு ‘வந்தே பாரத்’ ரயில் சேவை நாளையும் (ஆக.17) ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இண்டர்லாக் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வந்தே பாரத் ரயில் ஏற்கனவே இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளையும் ( (ஆக.17) ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News August 16, 2024

நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இன்று(ஆக.,16) 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி, தென்காசி, நெல்லை, குமரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதனால் வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.

News August 16, 2024

நெல்லையில் இணையத்தை கலக்கும் 1947 பத்திரிக்கை

image

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் 1947 ஆம் ஆண்டு முதல் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதாகவும், அப்போது பஞ்., கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டதாகவும் உள்ளிட்ட குறிப்புகள் அடங்கிய பத்திரிக்கை ஒன்று இன்று(ஆக.,16) காலை முதல் நெல்லை மாவட்டத்தில் வைரலாகி வருகின்றது. அந்த நாள் ஞாபகம் வந்ததே எனக்கூறி இந்த படம் இணையத்தை கலக்கி வருகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

News August 16, 2024

132 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் உதவி ஆணையர்

image

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் முருகப் பிரசன்னா நேற்று(ஆக.,15) விடுத்துள்ள செய்தி குறிப்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் ஆகியவை விடுமுறை அளிக்காத அல்லது மாற்று விடுமுறை அளிக்காத 132 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

News August 16, 2024

வள்ளியூர் அருகே கோர விபத்து

image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஏர்வாடி பாலத்தில் இன்று(ஆக.,16) அதிகாலை, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், காரின் முன் பகுதி அப்பளம்போல் நொருங்கியது. காரில் இருந்த பணகுடியை சேர்ந்த பெண் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

News August 15, 2024

அம்பை எம்எல்ஏ வீட்டில் புகுந்து மர்ம நபர்?

image

அம்பை சட்டமன்ற உறுப்பினராக உள்ள அதிமுகவை சேர்ந்த இசக்கி சுப்பையாவின் வீடு சென்னை அசோக் நகரில் உள்ளது. குடும்பத்துடன் அவர் அந்தமானுக்கு சுற்றுலா சென்ற நிலையில், ஆக.,12 ஆம் தேதி மாலை அவரது வீட்டில் மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து அங்குமிங்கும் சுற்றியுள்ளார். இது குறித்து அவரது மகன் இசக்கி துரை 13 ஆம் தேதி கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

News August 14, 2024

நாளை நெல்லையில் டாஸ்மாக் கடைகள் மூடல்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் மதுபான கடைகள் உரிமங்கள் அவற்றுடன் இணைந்த மதுபான கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை 15ம் தேதி மூடப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று அறிவித்துள்ளார். அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News August 14, 2024

ஆம்னி பஸ் கட்டணம் கிடுகிடு உயர்வு – நெல்லை பயணிகள் அதிர்ச்சி

image

சுதந்திர தினம் மற்றும் சனி ஞாயிறு தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல பயணிகள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னையில் இருந்து நெல்லைக்கு புறப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 2700 ரூபாய் வரை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News August 14, 2024

நெல்லையில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(ஆக.14) 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.

error: Content is protected !!