India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கீழநத்தம் மேலூரை சேர்ந்த மாயாண்டி(25) என்பவர் நேற்று முன்தினம்(டிச.20) நீதிமன்றம் அருகே கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கைதான கீழநத்தம் வடக்கூர் மனோராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரது வாக்குமூலத்தில், தனது சகோதரனை கொலை செய்ததால் பழிக்கு பழியாக நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார் என போலீசார் கூறினர்.

சமூக வலைதளங்களை நெல்லை மாவட்ட போலீசார் கண்காணித்து வருகின்றனர். பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுவருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். போலீசார் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் பழிக்கு பழியாக கொலை சம்பவம் நடைபெற்று வருவதால் இதன் எதிரொலியாக மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா SP சிலம்பரசன் உத்தரவின் பேரில் ஆய்வாளர்கள் தலைமையில் 200 போலீசார் ரவுடிகளின் வீடுகள் உட்பட பல்வேறு பகுதிகளிலும் வாகனங்களையும் சோதனை நடத்தினர். இதில் 110 ரவுடிகளை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மாநகரத்தில் 30 வழக்குகள்,மாவட்டத்தில் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூரில்,இன்று [டிச.21] மாலையில், தனியார் உணவு விடுதி நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநெல்வேலி ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி விஜய் வசந்த், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் மோகன் குமார ராஜா, தமிழ்ச்செல்வன், வள்ளியூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் பொன்பாண்டி உட்பட, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களைத் தடுக்க நாள்தோறும் போலீசார் உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று(டிச.21) இரவு வந்து அதிகாரிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவில் ஏதேனும் காவல் உதவி தேவைப்பட்டால் இவர்களை அணுகலாம்.

நெல்லை நீதிமன்றம் முன்பு நேற்று(டிச.20) மாயாண்டி என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த கொலை வழக்கில் பணியில் இருக்கும் காவல்துறையினர் பணியை விட தங்களது செல்போனில் மூழ்கிக் கிடப்பதால் தான் இவ்வாறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன என சென்னை உயர்நீதிமன்றம் இன்று கருத்து தெரிவித்துள்ளது.

சேரன்மகாதேவியில் குடும்ப சண்டையில் சட்டக் கல்லூரி மாணவன் மணிகண்டனை நேற்று அவரது உறவினர் மாயாண்டி என்பவர் வெட்டினார். பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மணிகண்டன் நேற்று மாலை உயிரிழந்தார். குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை பெற மாட்டோம் என உறவினர் கூறி வந்த நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக முடிவு ஏற்பட்டதால் மணிகண்டன் உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.

மார்கழி மாதத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நவ கைலாய கோயில்களுக்கு நாளை(டிச.22) சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை 6.30 மணி முதல் புதிய பஸ் நிலையத்திலிருந்து இந்த சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பதிவு வசதி உள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று(டிச.20) மாலை தொடங்கி இரவு வரை பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கொடுமுடியாறு அணைப்பகுதியில் 75 மி.மீ மழை பதிவானது. ஊத்து 67மி.மீ, நாலு முக்கு 48மி.மீ, காக்காச்சி 42மி.மீ, மாஞ்சோலை 18மி.மீ, சேரன்மகாதேவி 12மி.மீ மழை களக்காடு 11.80 மி.மீ மழை பதிவானது.

நெல்லை மாவட்டத்தில் மழை குறைவாக பெய்த நிலையிலும் மாவட்டம் முழுவதும் 11,827 ஹெக்டேர் பயிர் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் விசார பருவத்தில் 94.10 ஹெக்டேர் பரப்பில் நெற் பயிருக்கும், 6,714 ஹெக்டேர் உளுந்து பயிருக்கும், 265 ஹெக்டேர் மக்காச்சோள பயிருக்கும் இதுவரை பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என நெல்லையில் நேற்று (டிச.20) வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.