Tirunelveli

News August 21, 2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் அறிவிப்பு

image

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘’உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேரன்மகாதேவி வட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஆக.21) காலை 9.00 மணி முதல் நாளை (ஆக.22) காலை 9 மணி வரை ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆய்வின்போது பல்வேறு துறை அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 20, 2024

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மாற்றம்

image

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த முத்துசாமி இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நெல்லைக்கு புதிய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக சிவகுமார் என்பவரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் ஓரிரு நாட்களில் பொறுப்பேற்க உள்ளார்.பணி மாற்றம் செய்யப்பட்ட முதன்மை கல்வி அதிகாரி முத்துசாமிக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள், பணியாளர்கள், ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News August 20, 2024

நெல்லையில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

image

நெல்லையில் பணியின் போது மரத்திலிருந்து தவறி விழுந்து இறந்த தூய்மைப் பணியாளர் பாலசுப்பிரமணியன் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. இந்த பணம் போதாது என்றும், மேலும் ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தூய்மை பணியாளர்கள் 1000 பேர் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவு எட்டவில்லை என்றால் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

News August 20, 2024

டெல்லியில் மரியாதை செலுத்திய நெல்லை எம்பி

image

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80 ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் ராஜ்கோட்டில் வீர் பூமியில் உள்ள முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி சமாதியில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை பாராளுமன்ற எம்பி ராபர்ட் ப்ரூஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார் .

News August 20, 2024

நெல்லை தபால்துறை வேலைக்கான MERIT லிஸ்ட்

image

திருநெல்வேலி தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் MERIT பட்டியல் வெளியாகியிருக்கிறது. திருநெல்வேலி தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 89 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளாமானோர் விண்ணப்பித்திருந்தனர். <>தேர்வானவர்கள் விவரங்கள்<<>>.

News August 20, 2024

தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

image

பாளை., சாந்தி நகர் வரிவசூல் மையத்தில் மரக்கிளையை வெட்டியபோது அன்னை இந்திரா சுய உதவி குழு தூய்மை பணியாளர் பாலசுப்பிரமணியன்(24) என்பவர் தவறி விழுந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கு நேற்று(ஆக.,19) இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்ச ம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

News August 20, 2024

கணவன் இறந்த துக்கத்தால் மனைவி தற்கொலை

image

குற்றாலத்தை சேர்ந்தவர் மணிமாறன்(27). இவரும், நெல்லை ராமாயன்பட்டியை சேர்ந்த துர்கா தேவி(23) என்பவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் மணிமாறன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 16ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, கணவன் இறந்த தூக்கம் தாளாமல் நேற்று முன்தினம்(ஆக.,18) துர்கா தேவியும் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.

News August 20, 2024

நெல்லையில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்

image

நெல்லை மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் & குடும்ப ஓய்வூதியர்களின் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கருவூல அலுவலர் சாரா மார்கரெட் தலைமையில் இன்று(ஆக.,20) கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட கருவூல அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் யுனைடெட் இந்தியா இன்சுரன்ஸ் கம்பெனி, மெடி அசிஸ்டன்ட் அலுவலர்கள் பங்கேற்கின்றனர் என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். SHARE IT.

News August 20, 2024

பாளையில் 5 டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

image

பாளை கோர்ட் அருகில் உள்ள விடுதலை போராட்ட வீரர் ஒண்டி வீரன் மணிமண்டபம் அருகில் உள்ள 5 டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் நெல்லை போலீஸ் உதவி கமிஷனர் பரிந்துரையின்படி நாளை (ஆக 20ம் தேதி) ஒரு நாள் மட்டும் மூடப்பட வேண்டும் என கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 20, 2024

கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் இன்று (ஆக.19) மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் குலவணிகர்புரம் ரயில்வே கடவு எண் 4க்கு பதிலாக ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்கு 14 புல எண்களின் நில உரிமையாளர்களிடமிருந்து 1552 சதுர மீட்டர் நிலங்களை ரூ.7.96 கோடி மதிப்பீட்டில் தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் கையகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

error: Content is protected !!