Tirunelveli

News August 25, 2024

முதலமைச்சர் கோப்பை போட்டிக்கு விண்ணப்பிக்க தேதி நீடிப்பு

image

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 57 வகைகளில் மண்டலம், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப், அக் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது செப் 2ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டதாக கலெக்டர் கார்த்திகேயன் இன்று தெரிவித்துள்ளார்.

News August 25, 2024

நில ஆக்கிரமிப்பை அறிய “தமிழ் நிலம்” செயலி அறிமுகம்

image

விவசாயிகள், பொதுமக்கள் எதிர்காலத்தில் நில ஆக்கிரமிப்பு எங்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள விஏஓவை தேட வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழ் நிலம் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போன் மூலம் இனி அனைத்து நிலங்களையும் பார்க்க இயலும் இதற்கான பணிகள் 6 மாதங்களில் முடிவடையும் என நெல்லை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News August 25, 2024

நெல்லை வாலிபரிடம் ரூ.10 லட்சம் நூதன மோசடி

image

பாளை சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுரு (32) என்பவர் டெலிகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் லாபம் பெறலாம் என மர்ம நபர் பேசிய வார்த்தையை நம்பி ரூ.10 லட்சத்தை மர்ம நபரின் கூகுள் பேவிற்கு செலுத்தியுள்ளார். ஆனால் அதற்கான கூடுதல் பணம் செல்வகுருவிற்கு வந்து சேரவில்லை. இதுகுறித்து நெல்லை சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News August 25, 2024

நெல்லையில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்

image

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வேய்ந்தான் குளத்தில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் அங்கு இரைத்தேடி ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் முகாமிட்டுள்ளன. பறவைகளுக்கு மட்டுமின்றி இந்த பகுதி மக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக இந்த குளம் திகழ்கிறது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பறவைகள் இரைத்தேடி முகாமிட்டுள்ளன. இதனை பொதுமக்கள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

News August 24, 2024

மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாம் – ஆட்சியர் அறிக்கை

image

நெல்லை மாவட்ட நிர்வாகம் & மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாம் வருகின்ற 28, 29, 3, 4, 5, 10, 11, 12 ஆகிய நாட்களில் நடக்கிறது. இதில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்று மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கயுள்ளது. விவரங்களுக்கு 0462-2986989 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தெரிவித்துள்ளார்.

News August 24, 2024

வேளாங்கண்ணி சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்யலாம்!

image

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கியமாக ஆலய திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வருகிற 27 ஆம் தேதி முதல் செப்.,10 ஆம் தேதி வரை நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சிறப்பு SETC பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் பயணிக்க விருப்பம் உள்ளவர்கள் www.tnstc.in இணையதளம் மற்றும் TNSTC வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 24, 2024

பாளை., அருகே போனில் அச்சுறுத்தி ரூ.9.70 லட்சம் மோசடி

image

பாளை., பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் மணிபாரதி(30). இவரிடம் கடந்த மாதம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய நபர், சட்ட விரோத கொரியர் பார்சல் வந்துள்ளதாகவும், இதிலிருந்து விடுபட ரூ.9.70 லட்சம் தர வேண்டும் என்றும் கூறி வங்கி மூலம் பணத்தைப் பெற்றுள்ளார். இதை நம்பி ஏமாற்றமடைந்த மணிபாரதி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகிறார்.

News August 24, 2024

திருநெல்வேலி – எழும்பூர் வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு

image

திருநெல்வேலி – சென்னை எழும்பூருக்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படுகிறது. மொத்தம் 6 ரயில் சேவைகளை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் விழுப்புரம், மயிலாடுதுறை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. SHARE IT.

News August 24, 2024

நாங்குநேரி மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் “சீட்”

image

நாங்குநேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி அகிலா நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயில இடம் கிடைத்துள்ளது. இவர் 521 மதிப்பெண் நீட் தேர்வில் எடுத்துள்ளார். இவரது பெற்றோர் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அகிலாவிற்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததற்காக சி இ ஓ சிவக்குமார், நீட் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் பாராட்டினர்.

News August 24, 2024

புத்தாக்க பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

image

நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் உள்ள புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மண்டல அலுவலகத்தில் தொழில் முனைவோர், தொழில் முனைய விரும்புவோருக்கான புத்தொழில் புத்தக பயிற்சி முகாம் நடைபெற்றது. இதை முன்னிட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேற்று (ஆக. 23) சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நெல்லை மாவட்ட நிர்வாகம் அமெரிக்க தூதரகம் புத்தாக்க இயக்ககம் இணைந்து பயிற்சி அளித்தது.

error: Content is protected !!