India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று இரவு காவல் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சேரன்மகாதேவி சரகத்தில் முன்னீா்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் காவல் பணியில் ஈடுபடுவார். அவரது கைபேசி தொடர்பு எண் 83000 71556. இதுபோல் நெல்லை ஊடகம் நெல்லை, ஊரகம், நாங்குநேரி வள்ளியூர், அம்பை, ஆகிய பகுதிகளுக்கும் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் காருக்குறிச்சியில் குலசேகரநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு கிழக்கு நோக்கி குலசேகரநாதபுரம் தெற்கு நோக்கி சிவகாமி அம்மனும் அருள் புரிகின்றனர். இந்த ஆலயத்தில் வழிபட்டால் தோஷம் நீங்கி திருமண வாழக்கை அமையும். குழந்தை இல்லாதவர்கள் வேண்டினால் குழந்தை பாக்கியமும், கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்த தம்பதியினர் வேண்டினால் பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *SHARE IT*
மாவட்ட நல்வாழ்வு சங்கம் மூலமாக நெல்லை மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 12 நகர் நல மையங்களில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க நாளை (மார்-24) கடைசி தேதி.11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் இப்பணிகள் நிரப்பப்பட உள்ளன. 12 மருத்துவ அலுவலர்கள், 12 நர்சுகள், 12 ஊழியர்கள் பணிக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். ரூ8500 முதல் 60,000 வரை சம்பளம். விண்ணப்பிக்க இங்கே <
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு சிறப்பு காவல்படை (TNUSRF) 9-ம் அணியின் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் இன்று பாபநாசம் தாமிரபரணி ஆற்றின் கரைகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கை தளவாய் கமாண்டன்ட் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை கமாண்டன்ட் உள்பட பலர் பங்கேற்றனர்.
நெல்லை டவுனில் முன்னாள் காவலர் ஜாகிர் உசேன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே அக்பர்ஷா, கார்த்திக் என இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அதனை தொடர்ந்து முகமது தவ்பிக் என்ற கிருஷ்ணமூர்த்தி போலீஸாரால் சுட்டு பிடிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து நேற்று +1 மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று பீர் முகமது என்பவர் கொலைக்கு உதவியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் முருகன் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் வசதியை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அற்புதமான வாய்ப்பை வணிக ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அஞ்சல் அலுவலக வணிக பிரிவை தொடர்பு கொள்ளலாம்.
கங்கைகொண்டான் அருகே வடக்கு செழியநல்லூரில் அருள்மிகு சயன வனதுர்கை, வைஷ்ணவி துர்கை அம்பாள் கோயில் உள்ளது. இங்கு கிழக்கு நோக்கி சயனக் கோலத்தில் 8 கரங்களுடன் பெண் குழந்தையை அணைத்தபடி துர்கை, அருகில் நாகராஜ பரிவார தேவதைகள் காட்சியளிக்கின்றனர். திருமண தடைகள் நீங்க வைஷ்ணவி துர்கைக்குப் பச்சை நிறப் பட்டுடன் மல்லிகை பூ மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றிவைத்து, சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து வழிபட வேண்டும்.
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று(மார்ச்.23) காலை 11 மணிக்குள் திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையாக குடை எடுத்து செல்வது நல்லது.
பீகாரை சேர்ந்தவர் சர்பரேக் ஆலம் (20). இவர் பழவூர் அருகே உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (மார்ச்.22) குவாரிக்கு புதிய இயந்திரம் வந்துள்ளது. இதனை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்ததில் சர்ப்ரேக் ஆலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்துப்பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்களை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரதாபன், திருநெல்வேலி ஊரகம் ஆய்வாளர் வேல்கனி, நாங்குநேரி ஆய்வாளர் கண்ணன், வள்ளியூர் ஆய்வாளர் ராஜாராம், சேரன்மாதேவி ஆய்வாளர் ஜெயசீலன், அம்பை ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோரை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.