Tirunelveli

News April 2, 2025

21 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு கடைகளில் சோதனை செய்தனர். அதில் சட்டமுறை எடையளவு பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. இதில் 21 நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே வியாபாரிகள் காலாவாதியான பொருட்கள் விற்கக் கூடாது என நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News April 2, 2025

நெல்லை: இரவு ரோந்துப்பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஏப்.1] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சம்பத் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News April 1, 2025

நெல்லை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு

image

பங்குனி உத்திர திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பொதுதேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து நெல்லை ஆட்சியர் சுகுமார் இன்று உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறைக்கு மாற்றாக ஏப்ரல் 26-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க*

News April 1, 2025

அவசர உதவி வாட்ஸ் அப் எண் அறிவிப்பு – கலெக்டர் தகவல்

image

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள், இதர சேவைகள் & அவசரகால உதவிகள் குறித்து பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க செல்போன் அல்லது வாட்ஸ் அப் “வணக்கம் நெல்லை” என்னும் செல்போன் எண் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 97865 66111 எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தீர்வு பெறலாம் என கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்துள்ளார். *எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க*

News April 1, 2025

5 அணைகளுக்கு நீர்வரத்து நின்றது

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் வறண்ட நிலை காணப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு, வடக்கு பச்சையாறு, மணிமுத்தாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய 5 அணைகளுக்கு நீர்வரத்து இன்று (ஏப்.1) முற்றிலும் நின்றது. பாபநாசம் அணைக்கு மட்டும் வினாடிக்கு 154 கன அடி நீர் வருகிறது.

News April 1, 2025

கோபால சுவாமி பங்குனி உத்திர நிகழ்ச்சிகள் அறிவிப்பு

image

பாளையங்கோட்டையில் வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு அழகிய மன்னர் ராஜகோபால சுவாமி திருக்கோயில் விழாக்களில் முக்கிய விழாவான பங்குனி உத்திரத் திருவிழா ஏப்.3 அன்று தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஏப்.13 வரை திருவிழா நடைபெற உள்ளது. அதற்கான நிகழ்ச்சி விபரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. ஏப்.3 அன்று காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. ஏப்.12 அன்று தேரோட்டம் வைபவம் நடைபெற உள்ளது.

News April 1, 2025

கோடையில் உளுந்து சாகுபடி செய்து பயன்பெறலாம்

image

முக்கூடல் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சிவகுருநாதன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் முக்கூடல் சுற்றுவட்டார பகுதியில் 8000 ஏக்கரில் நெல் பயிர்கள் அறுவடை செய்யப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள ஈரப்பதத்தை பயன்படுத்தி உளுந்து சாகுபடி செய்து பயன்பெறலாம். குறுகிய காலத்தில் லாபகரமான விளைச்சல் பெறலாம் என தெரிவித்துள்ளார் .

News April 1, 2025

நெல்லை ஆட்சியர் அலுவகத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

image

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அடுத்த சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நிலையில் திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். ஆட்சியர் அலுவலகத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 1, 2025

நிலுவைத் தொகை ரூ.36 கோடி வழங்க வலியுறுத்தல்

image

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கு  சிறுபான்மையினர் அமைச்சகத்தால் ரூ.68 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டு ரூ.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பாக்கித்தொகை ரூ.36 கோடி இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனை விரைவில் ஒதுக்கீடு செய்யுமாறு நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நேற்று வலியுறுத்தியுள்ளார்.

News April 1, 2025

திருச்செந்தூர் செல்லும் நெல்லை பக்தர்கள் கவனத்திற்கு

image

திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோவிலில் பெருந்திட்டம் வளாகப் பணிகள் நடப்பதால் மார்ச் 31 முதல் பயணியர் விடுதி செல்லும் வழியில் உள்ள தற்காலிக வாகன நிறுத்தம் இடமாற்றம் செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே நெல்லை மக்கள் சரியான பாதையில் சென்று முருகனை தரிசிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!