Tirunelveli

News October 20, 2025

நெல்லை: தீபாவளி மகிழ்ச்சி தொடரும் எண்கள் இதோ!

image

நெல்லை மக்களே, தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு, மின்விளக்குகளால் தீ விபத்து அபாயம் அதிகம். உங்கள் பாதுகாப்பே முதல் முன்னுரிமை. தீயணைப்பு நிலைய எண்கள் திருநெல்வேலி (0462-2330101), பேட்டை (2342003), அம்பை (04634-250399), சேரன்மகாதேவி (260569), கங்கைகொண்டான் (04622-486500) மற்ற பகுதிகளின் எண்களுக்கு இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க.. மகிழ்ச்சியான தீபாவளிக்கு இந்த எண்கள் முக்கியம். SHARE பண்ணுங்க..!

News October 20, 2025

நெல்லை: நவம்பர் 3ம் தேதி வரை தடை உத்தரவு

image

திருநெல்வேலி மாநகரில் இன்று அக்டோபர் 19 நள்ளிரவு 12 மணி முதல் வருகிற நவம்பர் மூன்றாம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவின் படி பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், பேரணி, தர்ணா போன்றவை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த உத்தரவு அமலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

News October 19, 2025

இன்று இரவு மாநகரில் காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (அக்.19) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News October 19, 2025

நெல்லை: ஊராட்சி செயலர் பணி APPLY விபரம்!

image

நெல்லை மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News October 19, 2025

நெல்லை: குடிநீரில் குளோரின் அளவு பரிசோதிப்பு

image

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா உத்தரவின்படி இன்று திருநெல்வேலி மண்டலம் வார்டு 15 பர்வத சிங்க ராஜா தெரு பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கபடும் குடிநீரில் மாநகராட்சி பணியாளர்களால் குளோரின் அளவு பரிசோதிக்கப்பட்டது. தொடர் மழையால் சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் மாநகராட்சியில் இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

News October 19, 2025

நெல்லை: தீபாவளி – மின்வாரியம் முக்கிய அறிவிப்பு

image

நெல்லை மாவட்டம் மின்வாரியம் சார்பில் இன்று வெளியிடபட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குறிப்பாக மின்கம்பங்கள் மின் மாற்றிகள் உள்ள இடங்களில் வானை நோக்கி செல்லும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் மற்ற பட்டாசுகளையும் மின்கம்பங்கள் அருகே வைத்து வெடிக்க கூடாது. இதனால் மின் விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

News October 19, 2025

நெல்லை: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

நெல்லை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு<> கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News October 19, 2025

நெல்லையில் அல்வாவுக்கு நீண்ட “கியூ”

image

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நெல்லையில் அனைத்து வகையான தீபாவளி பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளது. உலகப்புகழ்பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா வாங்குவதற்கு வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நெல்லை ரத வீதியில் நீண்ட வரிசையில் நின்று அல்வா வாங்க மக்கள் காத்திருந்தனர். இதுபோல் அனைத்து இனிப்பு கடைகளிலும் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.

News October 19, 2025

நெல்லை: அக்.25 இளைஞர்களே MISS பண்ணாதீங்க!

image

நெல்லையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை நிறுவனங்கள் பங்கேற்கும் சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி வளாகத்தில் வருகிற 25-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் டாட்டா பவர் சோலார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட காற்றாலை மற்றும் சூரியன் உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்ற 500க்கும் மேற்பட்ட வேலை நாடுகளில் தேர்ந்தெடுக்க பட உள்ளனர்.

News October 19, 2025

சப் கலெக்டர் போல் நடித்து மோசடி; பெண் அதிரடி கைது

image

நெல்லை காரியாகுளம் பகுதியை சேர்ந்த மகிழ்வதனா என்பவரிடம் சத்தியாதேவி (34) என்பவர் தன்னை சப் கலெக்டராக அறிமுகப்படுத்தி, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு ஒப்பந்தத்தை பெற வேண்டி 10 பவுன் நகையை பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். மகிழ்வதனா புகாரில் இன்று மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சத்தியாதேவியை கைது செய்தது.

error: Content is protected !!