India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேரன்மகாதேவியில் குடும்ப சண்டையில் சட்டக் கல்லூரி மாணவன் மணிகண்டனை நேற்று அவரது உறவினர் மாயாண்டி என்பவர் வெட்டினார். பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மணிகண்டன் நேற்று மாலை உயிரிழந்தார். குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை பெற மாட்டோம் என உறவினர் கூறி வந்த நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக முடிவு ஏற்பட்டதால் மணிகண்டன் உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.

மார்கழி மாதத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நவ கைலாய கோயில்களுக்கு நாளை(டிச.22) சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை 6.30 மணி முதல் புதிய பஸ் நிலையத்திலிருந்து இந்த சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பதிவு வசதி உள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று(டிச.20) மாலை தொடங்கி இரவு வரை பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கொடுமுடியாறு அணைப்பகுதியில் 75 மி.மீ மழை பதிவானது. ஊத்து 67மி.மீ, நாலு முக்கு 48மி.மீ, காக்காச்சி 42மி.மீ, மாஞ்சோலை 18மி.மீ, சேரன்மகாதேவி 12மி.மீ மழை களக்காடு 11.80 மி.மீ மழை பதிவானது.

நெல்லை மாவட்டத்தில் மழை குறைவாக பெய்த நிலையிலும் மாவட்டம் முழுவதும் 11,827 ஹெக்டேர் பயிர் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் விசார பருவத்தில் 94.10 ஹெக்டேர் பரப்பில் நெற் பயிருக்கும், 6,714 ஹெக்டேர் உளுந்து பயிருக்கும், 265 ஹெக்டேர் மக்காச்சோள பயிருக்கும் இதுவரை பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என நெல்லையில் நேற்று (டிச.20) வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியில் மணிகண்டன் என்ற சட்டக்கல்லூரி மாணவர் நேற்று(டிச.20) படுகொலை செய்யப்பட்டார். விசாரணையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிவராமன் என்பவரது கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக 4 பேர் கொண்ட கும்பல் மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகள் 4 பேரையும் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் இன்று(டிச.21) தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கிரையோஜெனிக் இன்ஜினில் சோதனை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரோ மையத்தில் மனிதனை விண்ணிற்கு அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்திற்கான சிஇ 20 கிரையொஜெனிக் இன்ஜின் பரிசோதனை 200வினாடிகள் நேற்று(டிச.20) வெற்றிகரமாக நடத்தப்பட்டது. திருவனந்தபுரம் ககன்யான் திட்ட இயக்குனர் மோகன் காணொளி காட்சி மூலம் கண்டறிந்தார்.

நெல்லை மாவட்டத்தில் முக்கிய குளங்கள் தூர்வாரும் பட்டியலை என்னிடம் கொடுங்கள். அதற்கு உடனடியாக நிதி பெற்றுத் தர நான் தயாராக இருக்கிறேன். அவசரமாக உடனடியாக தூர் வாரும் குளங்களின் பட்டியலை அறிக்கையாக தருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என கலெக்டர் கார்த்திகேயன் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உத்தரவு பிறப்பித்தார்.

பாளையங்கோட்டை நீதிமன்றம் முன்பு வாலிபர் ஒருவர் நேற்று(டிச.20) வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஷ்குமார் மீனா இந்த சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேடிக்கை பார்த்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா கூறுகையில், கொலை செய்யப்பட்ட மாயாண்டி கொலை வழக்கு உள்பட சிறு வழக்குகளில் தொடர்பு உடையவர். கொலை வழக்கு தொடர்பு உடைய நபர்களை கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்வது வழக்கம். இதனால் பல குற்ற சம்பவங்களை போலீசார் தடுத்துள்ளனர். மாயாண்டி கொலை சம்பவத்தில் பாதுகாப்பு பணி போலீசார் வேடிக்கை பார்த்தனரா? என விசாரணை நடத்தப்படும் என்றார்.

வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் நேரம் மாற்றப்படுகிறது. நெல்லையிலிருந்து இரவு 8.05 மணிக்கு பதிலாக இரவு 8.40 மணிக்கு புறப்படும். இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு பதிலாக இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு நெல்லை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணி போர் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Sorry, no posts matched your criteria.