Tirunelveli

News December 22, 2024

தமிழ்நாடு அரசு முயற்சி – கலெக்டர் விளக்கம்

image

நெல்லையில் கொட்டப்பட்டுள்ள கேரளா மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே எடுத்து செல்லும் நடவடிக்கை இன்று(டிச.22) நடைபெற்று வருகின்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். அதில் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சியால் கேரளா மருத்துவக் கழிவுகள் முழுமையாக எடுத்து செல்லப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

News December 22, 2024

பாப்பாக்குடி அருகே கபடி போட்டி 

image

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகிலுள்ள ஆழ்வார் துலுக்கப்பட்டியில் இன்று (டிச.22) கபடி போட்டி நடைபெற்றது. இந்த கபடி போட்டியை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன், பாப்பாக்குடி ஒன்றிய திமுக செயலாளர் மாரி வண்ணமுத்து, மாவட்ட கவுன்சிலர் சுதா சின்னத்தம்பி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

News December 22, 2024

வள்ளியூர் புறவழிச்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து

image

வள்ளியூர் புறவழிச் சாலையில் குளிர் சாதன ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் உட்பட இரண்டு பேர் படுகாயமடைந்தனர். பத்திற்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் தப்பினர். சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற பேருந்து டயர் வெடித்தத்தில் சாலையோரத்தில் இருந்த மரத்தை இடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஏர்வாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 22, 2024

நெல்லை கொலை; கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

image

கீழநத்தம் மேலூரை சேர்ந்த மாயாண்டி(25) என்பவர் நேற்று முன்தினம்(டிச.20) நீதிமன்றம் அருகே கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கைதான கீழநத்தம் வடக்கூர் மனோராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரது வாக்குமூலத்தில், தனது சகோதரனை கொலை செய்ததால் பழிக்கு பழியாக நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார் என போலீசார் கூறினர்.

News December 22, 2024

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டால் நடவடிக்கை

image

சமூக வலைதளங்களை நெல்லை மாவட்ட போலீசார் கண்காணித்து வருகின்றனர். பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுவருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். போலீசார் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

News December 22, 2024

நெல்லையில் ஒரே நாள் இரவில் 110 ரவுடிகளை பிடித்து விசாரணை

image

நெல்லை மாவட்டத்தில் பழிக்கு பழியாக கொலை சம்பவம் நடைபெற்று வருவதால் இதன் எதிரொலியாக மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா SP சிலம்பரசன் உத்தரவின் பேரில் ஆய்வாளர்கள் தலைமையில் 200 போலீசார் ரவுடிகளின் வீடுகள் உட்பட பல்வேறு பகுதிகளிலும் வாகனங்களையும் சோதனை நடத்தினர். இதில் 110 ரவுடிகளை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மாநகரத்தில் 30 வழக்குகள்,மாவட்டத்தில் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

News December 22, 2024

விருந்தில் கலந்து கொண்ட M.P.க்கள்

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூரில்,இன்று [டிச.21] மாலையில், தனியார் உணவு விடுதி நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநெல்வேலி ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி விஜய் வசந்த், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் மோகன் குமார ராஜா, தமிழ்ச்செல்வன், வள்ளியூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் பொன்பாண்டி உட்பட, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

News December 21, 2024

நெல்லை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள்

image

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களைத் தடுக்க நாள்தோறும் போலீசார் உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று(டிச.21) இரவு வந்து அதிகாரிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவில் ஏதேனும் காவல் உதவி தேவைப்பட்டால் இவர்களை அணுகலாம்.

News December 21, 2024

நெல்லையில் செல்போனில் மூழ்கும் போலீசார் – நீதிமன்றம் கருத்து

image

நெல்லை நீதிமன்றம் முன்பு நேற்று(டிச.20) மாயாண்டி என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த கொலை வழக்கில் பணியில் இருக்கும் காவல்துறையினர் பணியை விட தங்களது செல்போனில் மூழ்கிக் கிடப்பதால் தான் இவ்வாறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன என சென்னை உயர்நீதிமன்றம் இன்று கருத்து தெரிவித்துள்ளது.

News December 21, 2024

சட்ட கல்லூரி மாணவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

image

சேரன்மகாதேவியில் குடும்ப சண்டையில் சட்டக் கல்லூரி மாணவன் மணிகண்டனை நேற்று அவரது உறவினர் மாயாண்டி என்பவர் வெட்டினார். பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மணிகண்டன் நேற்று மாலை உயிரிழந்தார். குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை பெற மாட்டோம் என உறவினர் கூறி வந்த நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக முடிவு ஏற்பட்டதால் மணிகண்டன் உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.

error: Content is protected !!