Tirunelveli

News September 2, 2024

நெல்லைக்கு புதிய துணை ஆணையர் நியமனம்

image

திருநெல்வேலி மாநகரத்தின் கிழக்கு காவல் துணை ஆணையராக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் இன்று(செப்.,2) ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் புதிய துணை ஆணையாளர் விஜயகுமாருக்கு சக காவலர்கள் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வின்போது காவலர்கள் உடன் இருந்தனர்.

News September 2, 2024

நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம்

image

திருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி கோயிலில் நடைபெறும் வருடாந்திர விழாவில் ஆவணி மூலத் திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த விழா இன்று(செப்.,2) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து கோயில் கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாரதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News September 2, 2024

பாளையங்கோட்டை: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

image

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள குறிப்பன்குளம் வெடிமருந்து தயாரிப்பு ஆலையில் நேற்று(ஆக.,31) முன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தில் பணியில் இருந்த 4 தொழிலாளிகள் சிக்கிக்கொண்டனர். இதில் கண்ணன், விஜய் ஆகிய இரு தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், படுகாயமடைந்து சிகிச்சைக்காக பாளை., அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் செல்வம் என்பவரும் நேற்று இரவு(செப்.,1) உயிரிழந்தார்.

News September 2, 2024

திருநெல்வேலி எம்பியின் இன்றைய நிகழ்ச்சி நிரல்

image

திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் தினம்தோறும் பல்வேறு அரசு நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் இன்று அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாலை 4 மணிக்கு மாவட்ட ஊராட்சி அலுவலக கட்டிட திறப்பு விழா மற்றும் மாலை 4.30 மணிக்கு மகிளா காங்கிரஸ் பேரணியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்‌.

News September 2, 2024

நெல்லையப்பர் கோவிலில் இன்று கொடியேற்றம்

image

நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் வருடாந்திர விழாவில் ஆவணி மூலத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழா இன்று (செப்டம்பர் 2) காலை 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான கரூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சியளிக்கும் வைபவம் அம்பலவான சுவாமி கோயிலில் வரும் 12-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறும் என கோயில் நிர்வாக அலுவலர் ஐயர் சிவமணி தெரிவித்துள்ளார்.

News September 1, 2024

நெல்லை மாவட்ட வெப்பநிலை

image

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் 3 தினங்களாக காற்றின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. திசையன்விளை மற்றும் பாளையங்கோட்டை வட்டாரத்தில் வெப்பத் தாக்கம் இன்று பகலில் வெகுவாக குறைந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் அதிகபட்சமாக 94 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. ச

News September 1, 2024

நடைபயணத்தை துவக்கி வைத்த திருநெல்வேலி எம்.பி.

image

நாகர்கோவில் மாநகர மகளிர் காங்கிரஸ் சார்பில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி நடைபயணம் இன்று (செப்.1) தொடங்கியது. இதனை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புருஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர். உடன், சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், தமிழ்நாடு மாநில மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையது மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News September 1, 2024

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆலோசனை

image

நாளை (செப். 2) மாலை 3.30 மணி அளவில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர். இதில் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News September 1, 2024

நெல்லைக்கு நாளை வரும் அமைச்சர்கள்

image

திருநெல்வேலியில் நாளை புதுப்பிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நெல்லைக்கு வருகை தர உள்ளனர். மேலும் இதில் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப், முன்னாள் அமைச்சர் மைதீன் கான் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

News September 1, 2024

நெல்லையில் காவல்துறை வாகனங்கள் ஏலம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட கழிவு செய்யப்பட்ட 1 நான்கு சக்கர வாகனம், 7 இருசக்கர வாகனங்கள் வருகின்ற 4ஆம் தேதி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் வாகனத்தை ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் பார்வையிட்டு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!