Tirunelveli

News October 5, 2024

10 மாதங்களில் 500 இணையதளம் மோசடி

image

நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் இணையதள மோசடி மூலம் 8 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக வந்த 500 புகார்களில் 200 வங்கி கணக்குகளில் இருந்த ரூபாய் 10.5 கோடியை சைபர் க்ரைம் போலீசார் முடக்கி உள்ளனர். இதில் சுமார் 20 லட்சம் மீட்கப்பட்டு பணத்தை இழந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்றவர்களின் பணத்தை மீட்டுக் கொடுக்கும் பணியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

News October 4, 2024

பிற்படுத்தப்பட்டோர் நல தனி வட்டாட்சியர் பொறுப்பேற்பு

image

திருநெல்வேலி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல தனி வட்டாட்சியர் ஜெயலட்சுமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் இன்று(அக்.04) மாலை பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அந்தத் துறையைச் சேர்ந்த பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவர் நெல்லை தாலுகாவில் தாசில்தாராக ஒரு வருடம் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

News October 4, 2024

முதல்வர் தொடங்கி வைத்த முக்கிய திட்டம்

image

திருப்பணி கரிசல்குளத்தில் இருந்து நெடுங்குளம், மேகமுடையார் குளம் வழியாக சத்திரம் புது குளத்திற்கு வெள்ள நீரை திருப்புவதற்காக ரூ.3.79 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று(அக்.04) காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கினார்.

News October 4, 2024

கொசுப்புழு இருந்தால் இனி அபராதம் நிச்சயம்!

image

அக்டோபர் மற்றும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் உற்பத்தி செய்யும் ஏடிஸ் கொசுக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே சிறிய வீடுகளாக இருந்தாலும் கொசு புழு முட்டை இருப்பது கண்டறியப்பட்டால், குறைந்தபட்சம் ரூ.20 முதல் அபராதம் விதிக்க வேண்டும் என சுகாதார ஆய்வாளர்கள் களப்பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதாக தகவல்.

News October 4, 2024

நெல்லைக்கு தனித்தொகுதி ஒதுக்க கோரிக்கை

image

நெல்லை மாவட்டத்தில் முன்பு சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் என இரு தனித்தொகுதிகள் இருந்தன. நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் நெல்லைக்கு என ஒரு தனி தொகுதி கூட இல்லை. எனவே நெல்லை மாவட்டத்திற்கு ஒரு தனி தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆதிதிராவிட நலக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் குழு உறுப்பினர் ஐயப்பன் நேற்று மனு அளித்தார்.

News October 4, 2024

கல்லூரி பேராசிரியர் கொலை வழக்கில் ஆஜரான ராக்கெட் ராஜா

image

நெல்லை கல்லூரி பேராசிரியரை வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டிக்கொன்ற வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று(அக்.,3) இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ராக்கெட் ராஜா உட்பட 12 பேர் ஆஜராகினர். ஒருவர் ஆஜராகததால் இந்த வழக்கு வருகிற 21 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கால் நீதிமன்ற நுழைவு வாயிலில் தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டனர்.

News October 4, 2024

நெல்லை காங்., எம்.பி.யின் இன்றைய நிகழ்ச்சிகள்

image

நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இன்று(அக்.,4) காலை 7 மணிமுதல் 9.,30 மணி வரை வீரவநல்லூர் பகுதியில் அவர் நன்றி அறிவிப்பு கூட்டங்களில் கலந்துகொள்கிறார். மாலையில் 5 மணி முதல் விக்ரமசிங்கபுரம் பகுதிகளில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்துள்ளனர்.

News October 4, 2024

நெல்லை டாக்டர் ராம்நாடு டீனாக பதவி உயர்வு!

image

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மயக்கவியல் துறை தலைவர் டாக்டர் அமுதா ராணி, ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து டாக்டர் அமுதா ராணிக்கு நெல்லை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் மற்றும் பேராசிரியர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News October 4, 2024

மாட்டு பால் தரம் அதிகரிக்க கலெக்டர் யோசனை!

image

சேரன்மகாதேவி வட்டாரம் நடுக்கல்லூர் பகுதியில் நேற்று(அக்.,3) மாலை நடைபெற்ற தாமிர ஆர்கானிக் உழவர் உற்பத்தியாளர் நிறுவன மதிப்பு கூட்டல் மைய திறப்பு விழாவில் கலெக்டர் கார்த்திகேயன் பேசினார். அவர் பேசுகையில், நிலக்கடலை செடியை ஆடு மாடுகளுக்கு தீவனமாக வழங்கினால் ஊட்டச்சத்து அதிகரித்து மாடுகளில் பாலின் தரம் மற்றும் பாலின் அளவு அதிகரிக்கும் என்றார். SHARE IT.

News October 4, 2024

விண்வெளி வார ஓவியப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு

image

நெல்லை மாவட்ட அறிவியல் மையம், உலக விண்வெளி வார (World Space Week) 2024 கொண்டாட்டத்தை முன்னிட்டு வருகிற 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று 6 முதல் 8 வகுப்பு பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டி ‘எதிர்கால விண்கலம்’ (Future Spacecraft) என்ற தலைப்பில் காலை 10.30 மணிக்கு நடத்த திட்டமிட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் தகுதி உள்ள மாணவ-மாணவிகள் அன்று நேரில் பங்கு கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!