India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குலசேகரபட்டினம் தசரா பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் நெல்லை வழியாக திருச்செந்தூர் மற்றும் குலசைக்கு செல்கின்றனர். இதனால் இந்த வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து இன்று(அக்.,5) அதிகாலை முதல் குலசேகரப்பட்டினத்திற்கு நெல்லை புதிய பஸ் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. SHARE IT.
நெல்லை காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலக தலைமை காவலர் முருகராஜ்(41), V.K.புதூர் பகுதியை சேர்ந்த வளர்மதி என்பவருடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளர்மதி, மதுரையில் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றுகிறார் எனக்கூறி, அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளார். நெல்லை சந்திப்பு போலீசார் வழக்கு பதிந்து முருகராஜ் & வளர்மதியை கைது செய்துள்ளனர்.
பேட்டையில் கடந்த 2 ஆம் தேதி, இந்து முன்னணியினர் இந்துக்களின் உரிமையை மீட்க வேண்டும் எனக்கூறி உரிமை மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இந்துக்களின் நிலத்தை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடுவதாக கோஷமிட்டனர். இது தொடர்பாக போலீசார் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உட்பட 6 பேர் மீது நேற்று(அக்.,4) வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தாமிரபரணி கழிவுநீர் தடுப்பது குறித்து மாநகராட்சியில் நேற்று(அக.,4) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேயர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அப்போது, மாநகராட்சி சார்பில் தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு தேவைப்படும் இடங்களில் கழிவுநீர் வடிகட்டும் அமைப்புகளை ஏற்படுத்தி கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் வகையில் பணியை விரைவாக மேற்கொள்ள என கலெக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு தினமும் 24 மணி நேரமும் பல மாநில ரயில்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில், பிளாட்பார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தற்போது 5 பிளாட்பாரங்கள் உள்ள நிலையில் 6 மற்றும் 7வது பிளாட்பாரம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக இங்கு ஏற்கனவே செயல்பட்ட குட்செட் அறைகள் அகற்றப்பட்டுள்ளன.
திருநெல்வேலி புறநகர் பகுதியில் அதிமுக பொதுக்கூட்டம் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகின்ற 20 ஆம் தேதி புறநகர் மாவட்ட பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நெல்லைக்கு வருகை தர உள்ளார்.
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக நெல்லை துணை மண்டலம் சார்பில் பயனாளிகளுக்கான குறை தீர்க்கும் முகாம் வருகிற 9ம் தேதி மாலை 4 மணிக்கு இஎஸ்ஐ துணை மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே இஎஸ்ஐ பயனாளிகள் குறை எதுவும் இருந்தால் முகாமில் பங்கேற்று நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வானிலை முன்னெச்சரிக்கை வழங்குவதற்காக டிஎன் அலர்ட் என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் இருப்பிடம் சார்ந்த வானிலை, முன்னெச்சரிக்கை செய்திகளை தமிழிலேயே அறிந்து கொள்ள முடியும். நெல்லை மாவட்டத்தில் பேரிடர் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. இதில், கட்டணமில்லா தொலைபேசி எண் 1077இல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் இணையதள மோசடி மூலம் 8 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக வந்த 500 புகார்களில் 200 வங்கி கணக்குகளில் இருந்த ரூபாய் 10.5 கோடியை சைபர் க்ரைம் போலீசார் முடக்கி உள்ளனர். இதில் சுமார் 20 லட்சம் மீட்கப்பட்டு பணத்தை இழந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்றவர்களின் பணத்தை மீட்டுக் கொடுக்கும் பணியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல தனி வட்டாட்சியர் ஜெயலட்சுமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் இன்று(அக்.04) மாலை பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அந்தத் துறையைச் சேர்ந்த பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவர் நெல்லை தாலுகாவில் தாசில்தாராக ஒரு வருடம் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.