India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை ‘பிட்’ லைன் ட்ராக் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே பேசஞ்சர் ரயில் 25 தினங்களுக்கு ரத்து செய்யப்பட உள்ளது. காலை 8.15 மணிக்கு திருச்செந்தூரில் புறப்படும் முறையிலும், மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் திருச்செந்தூர் பேசஞ்சர் ரயில் வரும் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், நவராத்திரி கொலு பண்டிகை முன்னிட்டு வருகின்ற 21ஆம் தேதி முதல் அக்.6ம் தேதி வரை சென்னையில் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் நெல்லை மாவட்ட சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன விருப்பமுள்ளவர்கள் https://exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
அதிமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று(செப்.06) காலை ரயில் மூலம் நெல்லைக்கு வருகிறார். நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் காலை 5 மணிக்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதிமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
இன்று(செப்.06) காலை ரயில் மூலம் நெல்லைக்கு வருகிறார். நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் காலை 5 மணிக்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உதவி காவல் கண்காணிப்பாளர்கள் துணை கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர் நிலுவையில் உள்ள வழக்கு விரைந்து முடிக்கவும் ரவுடிகள் மீது அதிரடி நடவடிக்கைகளை தொடரவும் கஞ்சா கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று(செப்.05) விடுத்துள்ள அறிக்கையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக சுற்றுப்புற சூழலை நீர்த்துப் போக செய்யும் மத்திய அரசின் சட்ட வரைவுகளை அனைத்து மாநில அரசுகளும் ஜனநாயக சக்திகளும் வலுவாக எதிர்க்க வேண்டும். தமிழக அரசும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ரயில் எண்: 06070 திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து இன்று(செப்.05) மாலை 18.45 மணிக்குப் புறப்படும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த ரயில் குறித்த நேரத்தில் புறப்பட இயலாமல் நாளை(செப்.06) நள்ளிரவு 2 மணி அளவில் (7 மணி 15 நிமிடங்கள் தாமதமாக) புறப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் சனிக்கிழமை விநாயகர் சிலைகளை முக்கிய இடங்களில் பிரதிஷ்டை செய்து வைத்து வழிபட அனுமதி கோரி மாவட்ட காவல் துறைக்கு மனுக்கள் குவிந்து வருகின்றன. இவற்றை காவல்துறையினர் பரிசீலித்து உரிய நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர். இதுவரை குமார் 325 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள குறிப்பன்குளம் வெடிமருந்து தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பணியில் இருந்த 4 தொழிலாளிகள் சிக்கிக்கொண்டனர். இதில் கண்ணன், விஜய் ஆகிய 2 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், படுகாயமடைந்து சிகிச்சைக்காக பாளை., அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் செல்வம் என்பவர்(செப்.,1) உயிரிழந்தார். இன்று பிரசாந்த் என்பவரும் உயிரிழந்தார்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 7ஆம் தேதியும், கேரளாவில் ஓணம் பண்டிகை வரும் 15ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி சென்னையில் இருந்து கேரளாவிற்கு சில சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தென்காசி – செங்கோட்டை வழியாக 2 சிறப்பு ரயில்களை இன்று(செப்.,5) அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.