India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்டம் மானூரில் உள்ள அம்பலவான சுவாமி கோயிலில் 117 ஆண்டுகளுக்கு பின்னர் குடமுழுக்கு விழா இன்று(செப்.,8) வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில், திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலிக்கு திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த வேன், கங்கைகொண்டான் அருகே இன்று(செப்.,8) காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். 10 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வள்ளியூர் அருகே உள்ள சிவந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சரத்து பாபு(24). இவர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்படி ஆய்வாளர் கௌரி மனோகரி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி சரத் பாபுவை நேற்று(செப்.,7) போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.
திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் நாளை நெல்லையில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணிக்கு இட்டேரி பாலாஜி கோல்டன் சிட்டி சௌபாக்கியா விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க உள்ளார். இதனை போல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அவருடன் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று(செப்.06) வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வள்ளியூர், நாரணம்பாள்புரம், குலவனிகபுரம், சுத்தமல்லி ஆகிய பகுதிகளில் வீடு மற்றும் மனைகள் பெற்ற பயனாளிகள் விதிகளின்படி பணம் திருப்பி செலுத்தவில்லை. இவர்கள் நெல்லை வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தை அலுவலக நாட்களில் நேரில் தொடர்பு கொண்டு கணக்கினை நேர் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இன்று(செப்.,7) விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நெல்லை மாவட்டத்தில் 350 விநாயகர் சிலைகள் முறைப்படி அனுமதி பெற்று முக்கிய சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலை அமைப்பு குழுவினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு 5 வயது பெண்ணை பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்திய வழக்கில், திருநெல்வேலி போக்சோ நீதிமன்றம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 71 வயதான சின்ன முத்தையா என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி இன்று(செப்.06) தீர்ப்பளித்துள்ளது. போக்சோ பொறுப்பு நீதிபதி சுரேஷ்குமார் வழங்கிய இந்த தீர்ப்பு விசாரணைக்கு அரசு வழக்கறிஞர் உஷா ஆஜரானார்.
நெல்லை டி.ஐ.ஜி அலுவலகத்தில் சென்னை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட அளவிலான காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்.6) நடைபெற்றது. டிஐஜி மூர்த்தி நிரூபர்களிடம் கூறும் போது, நெல்லை சரகத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஜாதி மோதல்களை தடுக்க பள்ளிகளுக்கு காவல்துறை அதிகாரிகள் சென்று அறிவுரை கூறி வருகின்றனர் என்றார்.
பாலக்காட்டில் இருந்து நெல்லை வரை இயக்கப்பட்டு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டதால் கடந்த ஆக.19ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து மீண்டும் தூத்துக்குடி பயணிகள் ரயில் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நேற்று (செப்.5) அறிவித்துள்ளது.
நெல்லை ‘பிட்’ லைன் ட்ராக் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே பேசஞ்சர் ரயில் 25 தினங்களுக்கு ரத்து செய்யப்பட உள்ளது. காலை 8.15 மணிக்கு திருச்செந்தூரில் புறப்படும் முறையிலும், மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் திருச்செந்தூர் பேசஞ்சர் ரயில் வரும் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.