India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லையில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் நடந்து முடிந்து 80 நாட்கள் ஆகிறது. சுவாமி மற்றும் அம்பாள் தேர் வெயிலிலும் மலையிலும் சேதம் அடைந்து வருவதாக கடந்த 6ஆம் தேதி Way2News-இல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று (செப்.8) சுவாமி அம்பாள் தேருக்கு பைபர் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் பலர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
அரசு கல்லூரி ஆசிரியர் கழக செயலாளர் சுரேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “12,000 நிரந்தர ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய இடங்களில், 4,500 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். பல புதிய கல்லூரிகளில் முதல்வர் தவிர அனைத்து ஆசிரியர்களும் நிரந்தரம் அல்லாத ஆசிரியர்களாக இருக்கின்றனர். எனவே, ஆசிரியர் நியமனம் குறித்த நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடித்து, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
அம்பாசமுத்திரம் நகராட்சி பகுதிகளில் நாளை(செப்.09) காலை 7 மணி முதல் பல்வேறு இடங்களில் நெல்லை தொகுதி எம்.பி ராபர்ட் ப்ரூஸ் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். அம்பாசமுத்திரம் ஆர்.எஸ். காலனியில் பயணத்தை தொடங்கும் அவர் பெரியகுளம் தெரு, ராமலிங்க தெரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று தெற்கு ரத வீதி தங்கம்மன் கோயில் தெருவில் நன்றி அறிவிப்பு பயணத்தை முடிக்கிறார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று(செப்.09) அம்பையில் உள்ள வசந்த மஹாலில் நடைபெற உள்ளது. அம்பை நகர மன்ற தலைவர் நகர செயலாளர் பிரபாகரன் பாண்டியன் வரவேற்கிறார். இதில் அனைத்து திமுக நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டுமென நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் நேற்று கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை(செப்.09) தொடங்கி வைக்க உள்ளார். அதனை தொடர்ந்து பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், விவசாயிகள் நடப்பு பருவத்திற்கு தேவையான விதை, உரம், சிங் சல்பேட், தக்கை பூண்டு உள்ளிட்ட பொருட்களை அடைத்து விரிவாக்க மையங்களிலும் பெறுவதற்கு ஏடிஎம் கார்டு, கூகுள் பே போன்ற மின்னணு சாதன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த வசதியை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான இடு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருநெல்வேலியில் இன்று(செப்.08) பல்வேறு ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.5,372.72 கோடி மதிப்பீட்டில் 20,252 பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநில வல்லுநர் குழுவால் 9,961 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணகுமார் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் வேளாண்மை உற்பத்தி ஆணையம் மற்றும் செயலர் உத்தரவின் படி சென்னை வேளாண்மை இலக்குகள் ஆலோசனை படியும் திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் மின்னணு பண பரிவர்த்தனை மூலமாக விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் பெற வசதி செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறைக்காக சென்னை, கோவை, பெங்களூரு, திருப்பூர் பகுதிகளிலிருந்து நெல்லை மாவட்டத்திற்கு ஏராளமான பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் விடுமுறை முடிந்து இன்று(செப்.,8) மாலை தங்கள் பணியிடங்களுக்கு திரும்புகின்றனர். இதனை கருத்தில் கொண்டு முக்கிய பகுதிகளுக்கு தேவைக்கேற்ப சிறப்பு பஸ்கள் இயக்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
சுகன்யான் திட்டத்தில் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் ராக்கெட்களில் பயன்படுத்தப்படும் சி.இ.20 கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை ஓட்டம் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 5வது கட்டமாக 1700 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டு நேற்று இதற்கான கவுண்டவுன் ஆரம்பிக்கப்பட்டு சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடந்ததாக இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.