Tirunelveli

News September 10, 2024

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி

image

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே தெற்கு கும்பிழம்பாடு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(40 ). பாஜக நெல்லை தெற்கு மாவட்ட பொருளாதார பிரிவு தலைவரான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் வேலை பார்க்க வந்த 35 வயது பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நேற்று(செப்.09) ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், போலீசார் வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

News September 10, 2024

நெல்லையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

பாளை., ஜான்ஸ் கல்லூரி வளாகத்தில் வரும் 21ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 5 ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2, டிப்ளமோ, டிகிரி, ஐடிஐ போன்ற கல்வித் தகுதி உடைய அனைவரும் பங்கேற்கலாம். 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான வேலை நாடுனர்களை தேர்வு செய்ய உள்ளனர் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News September 10, 2024

நெல்லையில் நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பஸ்!

image

புரட்டாசி மாத சனிக்கிழமைகளான செப்.,21,28 மற்றும் அக்.,5,12 ஆகிய 4 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலம் ஏற்பாடுகளை செய்துள்ளது. சனிக்கிழமைகளில், காலை 7 மணிக்கு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு நவ திருப்பதிகளுக்கு சென்று இரவில் மீண்டும் புதிய பேருந்து நிலையம் வந்து சேரும். இதற்கு பேருந்து நிலையத்தில் முன்பதிவு நடைபெறுகிறது.

News September 10, 2024

பாளையில் முதலமைச்சர் கோப்பை போட்டிகள்

image

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று(10.9.24) காலை 10:30 மணி அளவில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைக்க உள்ளனர்.

News September 9, 2024

நெல்லையில் காலாண்டு தேர்வு ஏற்பாடுகள் மும்முரம்

image

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு வரும் 19 ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுபோல் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் 20ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் செய்து வருகிறார்.

News September 9, 2024

நெல்லையில் 669 பேருக்கு ரூ.54.28 கோடி வங்கிக் கடன்

image

பாளையங்கோட்டை ஜவகர் கலையரங்கில் இன்று(செப்டம்பர் 9) நடைபெற்ற நிகழ்ச்சியில் 669 பயனாளிகளுக்கு வங்கி கடன் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ரூ.54.28 கோடி மதிப்பில் சபாநாயகர் அப்பாவு வழங்கினார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 17 பேருக்கு இணை மானியம் ரூ.47.93 லட்சம் வழங்கப்பட்டது.

News September 9, 2024

TNPSC, SSC, UPSC, RRB-க்கு இலவச பயிற்சி!

image

TNPSC, SSC, UPSC, RRB முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ள விரும்பும் தமிழ்நாட்டை சேர்ந்தோருக்கு, அரசு சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாமல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் சேர விரும்புவோர் www.cecc.in இணையதளத்தில் நாளை முதல் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News September 9, 2024

சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

image

அதிமுக எம்எல்ஏக்களை அவதூறாக பேசியதாக, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மீது அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று(செப்.,9) விசாரணைக்கு வந்த நிலையில் செப்டம்பர் 13 ஆம் தேதி சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவிட்டு நீதிபதி ஜெயவேல் வழக்கை ஒத்திவைத்தார்.

News September 9, 2024

நெல்லை அருகே 3 வயது சிறுவன் கொடூர கொலை

image

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி கிராமத்தில் சஞ்சய் என்ற 3 வயது சிறுவன் சாக்கு மூட்டையில் கட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகன் விபத்தில் இறந்ததற்கு சிறுவனின் வீட்டினர் செய்வினை வைத்ததே காரணம் என நினைத்து எதிர்வீட்டு பெண் தங்கம்மாள் சிறுவனை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 9, 2024

Way2News எதிரொலி – கூண்டு அமைக்கும் பணி தொடக்கம்

image

நெல்லையில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் நடந்து முடிந்து 80 நாட்கள் ஆகிறது. சுவாமி மற்றும் அம்பாள் தேர் வெயிலிலும் மலையிலும் சேதம் அடைந்து வருவதாக கடந்த 6ஆம் தேதி Way2News-இல் செய்தி வெளியானது. இதன்  எதிரொலியாக நேற்று (செப்.8) சுவாமி அம்பாள் தேருக்கு பைபர் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் பலர் நன்றி தெரிவித்து வருகின்றனர். 

error: Content is protected !!