Tirunelveli

News January 5, 2025

நெல்லையில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்!

image

நெல்லையப்பர் கோயிலில் இன்று(ஜனவரி 5) காலை 8:30 மணிக்கு மகா ம்ருத்யுஞ் மந்திர ஜெப வேள்வி நடக்கிறது. #தாழையூர்த்து அமேகா அரங்கில் மூட்டா 2ஆம் நாள் மாநாடு காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. #மார்கழி 3வது சனிக்கிழமையை முன்னிட்டு நவ கைலாய கோயில்களுக்கு காலை முதல் சிறப்பு பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

News January 5, 2025

நெல்லை அரசு விதை பண்ணையில் வேளாண் இயக்குநர் ஆய்வு

image

சென்னை வேளாண் இயக்குநர் பா.முருகேஷ் நேற்று(ஜன.4) திருநெல்வேலி மாவட்ட அரசு விதை பண்ணை கரையிருப்பில் ஆய்வு மேற்கொண்டார். கரையிருப்பு மாநில அரசு விதை பண்ணையில், நெல் ரகங்களில் வல்லுநர் விதையிலிருந்து ஆதார விதைப்பண்ணை அமைத்து மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதார விதை வழங்கப்பட்டு வருகிறது. விதைப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் நெல் ரகங்களின் மகசூல் உயர்த்துவதற்கு ஆலோசனை வழங்கினார்.

News January 5, 2025

பொங்கல் பண்டிகையொட்டி சிறப்பு ரயில்! இன்று ஆரம்பம்

image

பொங்கல் பண்டிகையொட்டி நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி ஜன.12,19,26 தேதிகளில் நெல்லையிலிருந்து பகல் 3.30 மணிக்கும், ஜன.13,20,27 தேதிகளில் தாம்பரத்திலிருந்து பகல் 3.30 மணிக்கும் இந்த ரயில் புறப்படுகிறது. நெல்லையிலிருந்து அம்பை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம் தடத்தில் இயக்கப்படுகிறது. இன்று(ஜன.5) காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.

News January 4, 2025

ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றம்

image

நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா இன்று காலை கொடியேற்றுடன் தொடங்கியது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் மற்றும் திரு நடன காட்சி சிவபெருமான் நடனமாடிய ஐந்து சபைகளில் ஒன்றான தாமிர சபையில் ஜன.13 அன்று நடைபெற உள்ளது.

News January 4, 2025

நெல்லையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 10ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது, இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

News January 4, 2025

ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றம்

image

நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா இன்று காலை கொடியேற்றுடன் தொடங்கியது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் மற்றும் திரு நடன காட்சி சிவபெருமான் நடனமாடிய ஐந்து சபைகளில் ஒன்றான தாமிர சபையில் ஜன.13 அன்று நடைபெற உள்ளது.

News January 4, 2025

முதல் பேரவை கூட்டத்திற்கு ஆளுநருக்கு அழைப்பு

image

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர் என் ரவியை நெல்லை மாவட்டம் ராதாபுரம் எம்எல்ஏ தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நேற்று நேரில் சந்தித்தார்.தொடங்கு ஆங்கில புத்தாண்டின் முதல் பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் ஆளுநர் ரவியை வருமாறு பேரவையின் உரையாற்ற அழைப்பு விடுத்துள்ளார்.

News January 4, 2025

யூரியா பயன்பாடு வேளாண்மை துறை எச்சரிக்கை

image

மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேசன் விடுதுள்ள அறிக்கை அரசு மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை விவசாயம் அல்லாமல் பிற தேவைகளுக்கு பயன்படுத்தினால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். முறையற்ற முகவர்களிடம் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான உரங்களை வாங்க கூடாது தரமற்ற போலியான உரங்களை விற்பனை செய்யக் கூடாது. விதிகள் மீறப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News January 4, 2025

நெல்லை சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடக்கம் 

image

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையொட்டி நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சேரன்மகாதேவி, அம்பை,தென்காசி, ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்டவைகள் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு வருகின்ற ஜனவரி 5ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. *ஷேர்*

News January 4, 2025

பொங்கல் பரிசு டோக்கன் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு எண் 

image

நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும்பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட அளவிலும் வட்ட அளவிலும் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறைகள் இருந்தால் பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறை எண் 9342471314 மற்றும் 1967 மற்றும் 1800 425 5901 என்ற எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். *ஷேர்*

error: Content is protected !!