India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்; பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்று தேவையான இளைஞர்கள் இளம்பெண்களை தேர்வு செய்ய உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் தாங்கள் பயின்ற கல்வி சான்றுகளுடன் நேரில் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட நிர்வாகம் இன்று (அக்.9) வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ் வழியில் ஜப்பானிய மொழி கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஏதாவது ஒரு டிகிரி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். இந்த பயிற்சி காலம் மூன்று மாதம் ஆகும். பதிவு செய்வதற்கு கால அவகாசம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி ஆகும். இந்த வகுப்பானது டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் நேரில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
குலசேகரபட்டினம் தசரா விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வர். இதில் பங்கேற்க நெல்லை மக்களும் அதிகளவில் செல்வதுண்டு. இந்நிலையில், நெல்லையிலிருந்து செல்வோர் வாகனங்களை நிறுத்த தேவையான இட வசதி செய்யப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்கள், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வேடமணிவோர் உலோக ஆயுதங்களை எடுத்து வரக்கூடாது என அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் சத்யா காலணியில் கார்த்திக் என்பவர் வீட்டில் சட்டவிரோதமாக தயாரித்த நாட்டு வெடிகுண்டு வெடித்து வீட்டின் அருகில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வழக்கில் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ரயில்களை இயக்குவதில் லோகோ பைலட்டுகள், உதவி லோக பைட்டுகள், ரயில் மேலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த இந்த வகை தொழிலாளர்கள் ஓய்வு எடுப்பதற்காக ரூ.5 கோடி மதிப்பில் புதிய நவீன ஓய்வு விடுதி மதுரை ரயில்வே காலனியில் புதியதாக கட்டப்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்ட ரயில் டிரைவர்கள் எஞ்சின் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் தாழையூத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தாளையூத்து பஞ்சாயத்து தலைவர் ஆனார். இவரை கடந்த 2011 ஆம் ஆண்டு வெட்டிக்கொல்ல முயன்ற வழக்கில், பிரபல ரவுடி ஜேக்கப் உட்பட 6 பேர் குற்றவாளிகள் என நெல்லை மாவட்ட தீண்டாமை வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் நேற்று அறிவித்தார். தண்டனை விவரம் நாளை(அக்.,10) தேதி அறிவிக்கபடும் என்றார்.
நெல்லை மாவட்ட கல்லூரிகளில் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட பெண் காவலர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேற்று(அக்.08) நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசனைகளை வழங்கினார். ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு பெண் காவலர் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாரம் ஒருமுறை சென்று மாணவிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் ஊழியர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறி அதனை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் இன்று (அக்.9) கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டிப்பாக நடைபெறும் என அதன் மாவட்ட தலைவர் வட்டாட்சியர் சுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளராக திமுக மகளிர் தொண்டரணி மாநில துணை செயலாளரும் திருநெல்வேலியை சார்ந்தவருமான விஜிலா சத்யானந்த் இன்று (அக்.08) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து விஜிலா சத்யானந்துக்கு நெல்லை மத்திய மாவட்ட திமுகவினர் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் கடந்த 9ஆம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (அக்.08) வெளியிட்டுள்ள அறிக்கையில்; தொழிலாளர்களை கசக்கி பிழியும் சாம்சங் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படும் திமுக அரசு என குற்றம் சாட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.