Tirunelveli

News January 7, 2025

நெல்லை GH மாநில அளவில் 3வது இடம்!

image

நெல்லை அரசு மருத்துவமனையில், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கடந்த 2024 இறுதி வரை மொத்தம் 59 உறுப்புகளும், 42 திசுக்களுக்கு தானமாக பெறப்பட்டுள்ளது. மேலும், உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாநில அளவில் 3வது இடத்தில் இருப்பதாகவும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் நேற்று(ஜன.6) பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

News January 7, 2025

நெல்லையில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள்

image

#நெல்லையில் இன்று(ஜனவரி 7) காலை 10.30 மணிக்கு திருநெல்வேலி மாநகராட்சி பிரதான அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. #நெல்லை மத்திய மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் காலை 10 மணிக்கு வண்ணாரப்பேட்டையில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

News January 7, 2025

நெல்லை ஜங்ஷன் அருகே மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

image

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த 14வயது மாணவர் தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று(ஜன.6) இரவில் மாணவரின் தாய் வெளியே சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தாயார் திரும்பி வந்து பார்த்தபோது மாணவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சந்திப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2025

சலவை துணியில் இருந்த ரூ.64,000 பணம் 

image

திருநெல்வேலி மாவட்டம்,  அம்பாசமுத்திரத்தில் சலவைக்கு போடப்பட்ட பேண்டில் இருந்த 64 ஆயிரம் ரூபாயை சலவை தொழிலாளி உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மறதியால் இது போன்று பணம் மற்றும் விலை உயர்ந்தப் பொருட்களை துணியில் வைத்து விடுகின்றனர். எனக்கு அந்த பொருட்கள் மீது ஆசை இல்லை. ஏன்னென்றால் அவை உரிமையாளருக்கு சொந்தமானது எனக் கூறிய சலவை தொழிலாளிக்கு பாராட்டு.

News January 7, 2025

சைபர் கிரைம்; குற்றவாளிகளிடம் ரூ.7 கோடி வரை முடக்கம்

image

நெல்லை மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.7 கோடி வரை முடக்கி வைக்கப்பட்டதாக மாவட்ட எஸ்பி சிலம்பரசன் இன்று தெரிவித்துள்ளார். சமீபகாலமாக மொபைல் செயலிகள் மூலமாகவும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழலில் மாவட்ட காவல்துறையின் இந்த நடவடிக்கை மக்களுக்கு ஆறுதலை தந்துள்ளது.

News January 6, 2025

நெல்லை மாவட்டத்தில் எஸ்பி கூறிய தகவல்

image

நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்பி சிலம்பரசன் இன்று ஜன 6)கூறியதாவது, நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நடக்கவிருந்த 17 கொலைகள் காவல்துறையினர் துரித மற்றும் முன்னெச்சரிக்கைகளால் தடுக்கப்பட்டுள்ளது. 85 குற்றவாளிகள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த,ஆண்டில் மட்டும் 10 ஆண்டுக்கு மேல் தலைமறைவாக இருந்த நபர்கள் உட்பட 2249 பிடியாணைகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

News January 6, 2025

ஆளுநரை கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்

image

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ஆர்என். ரவி தனது உரையை புறக்கணித்து சென்றார். எனவே பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஆளுநரையும் கள்ளக்கூட்டணி வைத்திருப்பதாக அதிமுக பாஜக கட்சிகளை கண்டித்தும் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை(ஜன.6) வண்ணாரப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் இன்று அறிவித்துள்ளார்.

News January 6, 2025

நெல்லை மாவட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை விபரம்

image

நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்பி சிலம்பரசன் இன்று (ஜன 6) கூறியதாவது, நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 13 கொலை வழக்குகளில் 23 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொலை முயற்சி வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆறு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கொள்ளை வழக்குகளிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

News January 6, 2025

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி

image

கொலை முயற்சி வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும்,கொலை வழக்குகளில் 106 எதிரிகள் கைது செய்யப்பட்டு 69 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 2024-ல்ஜாதி ரீதியான கொலைகள் எதுவும் நடக்கவில்லை என்றும்,17 கொலைகள் காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் தடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று (ஜன.06) தெரிவித்தார்.

News January 6, 2025

மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி இதுதான்

image

நெல்லை மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதியாக நெல்லை சட்டமன்ற தொகுதி உள்ளது. இங்கு 3 லட்சத்து 2715 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 616 பேர் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 16 பேர் இதர வாக்காளர்கள் 83 பேர் உள்ளனர் என கலெக்டர் கார்த்திகேயன் இன்று தெரிவித்தார்.

error: Content is protected !!