Tirunelveli

News October 10, 2024

50% மானியத்தில் நாட்டுக்கோழி குஞ்சுகள்: நெல்லை கலெக்டர்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் நேற்று(அக்.,9) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழ்மை நிலையில் உள்ள, கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவர் அணுகி விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

News October 10, 2024

வடகிழக்கு பருவமழை எப்போது?

image

தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதக சூழல் ஏற்பட்டுள்ளதாக நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். அடுத்த 4 தினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இன்று(அக்.,10) விடுத்துள்ள வானிலை பதிவில் தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த சில தினங்களாக நெல்லை மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.

News October 10, 2024

நெல்லை ரேசன் கடைகளில் வேலை! APPLY பண்ணுங்க

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் கீழ் இயங்கி வரும் ரேசன் கடைகளில், விற்பனையாளர் & கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், ;நெல்லை மாவட்டத்தில் 54 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>‘CLICK’ <<>>செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT.

News October 10, 2024

நெல்லையில் குவிந்த வருவாய் துறை அலுவலர்கள்

image

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் பெண் ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதும், ஒருமையில் வசை பாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. வருவாய் துறை அலுவலர் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக 17ஏ, பி குற்றச்சாட்டுகளை அதிக எண்ணிக்கையில் வழங்கியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, கலெக்டரை கண்டித்து நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களை சேர்ந்த வருவாய்துறை அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News October 10, 2024

நெல்லை, வள்ளியூர் வழியாக சிறப்பு ரயில்!

image

தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகை வரும் நிலையில், விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இந்த ரயில் திருநெல்வேலி, வள்ளியூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்ல உள்ளது. இந்த சிறப்பு ரயிலானது (06193, 06194) வருகின்ற 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் இயங்க உள்ளது.

News October 10, 2024

சரஸ்வதி பூஜை: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

image

சரஸ்வதி பூஜை மற்றும் நாளை மறுதினம் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக நெல்லை மொத்த பூ விற்பனை சந்தையில் நேற்று(அக்.,9) மாலை பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ பிச்சி மற்றும் மல்லி 600 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், நேற்று காலை 800 ரூபாயாகவும், மாலை ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்தது. இன்றும் விலை உச்சம் பெற வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

News October 10, 2024

நெல்லைக்கு வருகை தரும் முன்னாள் அமைச்சர்

image

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விக்கிரமசிங்கபுரம் நகரத்தில் இன்று (அக்.10) அதிமுக கொடியேற்ற நிகழ்ச்சி மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் நெல்லைக்கு வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாட்டினை நெல்லை புறநகர் மாவட்ட அதிமுகவினர் செய்து வருகின்றனர்.

News October 10, 2024

தேவர் ஜெயந்தி விழாவிற்கு அழைப்பு

image

நெல்லையில் வரும் 30ஆம் தேதி 117வது தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஜங்ஷன் வெற்றி விநாயகர் திருக்கோவிலில் 501 பால்குடம் மற்றும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் நேற்று (அக்.09) அழைப்பு விடுத்துள்ளார்.

News October 10, 2024

முதலிடம் பிடித்த முதல்நிலை காவலருக்கு பாராட்டு

image

திருநெல்வேலி மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் அரசு ஊழியர்களுக்கான 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் பங்கு பெற்று முதலிடம் பிடித்த முதல் நிலை காவலர் ரேணுகா தேவியை காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் நேற்று (அக்.09) நேரில் அழைத்து பாராட்டி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது காவலர்கள் உடன் இருந்தனர்.

News October 10, 2024

வள்ளியூர் கல்வி அதிகாரி திடீர் ட்ரான்ஸ்பர்

image

நெல்லை மாவட்டம் வள்ளியூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஷெர்லின் விமல் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மாவட்ட கல்வி அலுவலராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் விழுப்புரம் மாவட்டம் தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் சாய் சுப்புலட்சுமி நெல்லை மாவட்ட இடைநிலை கல்வி அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வி இயக்குனர் நேற்று (அக்.09) பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!