Tirunelveli

News January 8, 2025

பாளையங்கோட்டை அருகே பஸ் கவிழ்ந்து விபத்து!

image

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் அடுத்த நாகர்கோவில் பைபாஸ் ரோடு, இதயஜோதி நர்சிங் கல்லூரி அருகே இன்று(ஜனவரி 8) காலை தனியார் பஸ் ஒன்று திடீரென கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

News January 8, 2025

வண்ணார்பேட்டையில் ESI குறைதீர்க்கும் முகாம்!

image

நெல்லை ESI துணை இயக்குநர் மற்றும் குறைதீர்க்கும் அலுவலர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், நெல்லை துணை மண்டலம் சார்பில் ESI திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கு குறைகளை நிவர்த்தி செய்ய இந்த மாதத்திற்கான குறைத்தீர்க்கும் முகாம் இன்று(ஜன.8) மாலை 4 மணிக்கு வண்ணார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் பயனாளிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என்றுள்ளனர். SHARE IT.

News January 7, 2025

நெல்லை 5336 ரவுடிகள் மீது நடவடிக்கை 

image

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது என்றும், 2024 ஆம் ஆண்டில் 5336 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று தகவல் தெரிவித்துள்ளார். இதில் 23 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2023ஆம் ஆண்டை விட 2024ஆம் ஆண்டில் கொலை வழக்கு 21 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News January 7, 2025

8 பெட்டியில் இருந்து 16 பெட்டிகளாக மாற்றம்

image

திருநெல்வேலி – சென்னை எழும்பூர் (20666/65) வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக வருகிற 11.01.2025 முதல் மாற்றப்படுகிறது. எனவே கூடுதல் இருக்கைகள் அதே வண்டியில் காண்பிக்கப்படும். WL ஆக நீங்கள் முன்பதிவு செய்தாலும் CNF ஆகிவிடும். எனவே தேவை உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும். Without Food option கொடுத்தால் டிக்கெட் விலை 300 வரை குறையும் என தெற்கு ரயில்வே இன்று தெரிவித்துள்ளது.

News January 7, 2025

ராக்கெட் ராஜாவின் கூட்டாளி கைது

image

கோவை ரத்தினபுரி போலீசார் நேற்று முந்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 8 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடியான ராஜ்குமார் கோவையில் மெத்தபெட்டமின் விற்றபோது கைது செய்யப்பட்டார். இவர் திசையன்விளையை சேர்ந்த ராக்கெட் ராஜாவின் கூட்டாளி என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 7, 2025

தமிழக காவல்துறைக்கு நெல்லை முபாரக் கண்டனம்

image

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் எதிர்கட்சிகள் விவசாயிகள் நடத்தும் போராட்டங்களுக்கு போக்குவரத்து நெரிசல், சட்ட ஒழுங்கு பிரச்சனை என காரணத்தை கூறி அனுமதி மறுக்கும் காவல்துறை மாநில முழுவதும் திமுகவின் போராட்டங்களுக்கு ஒரே இரவில் மேடை அமைத்து போராட்டம் நடத்த அனுமதி அளித்தது எப்படி? காவல்துறையின் இத்தகைய பாரபட்சம் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

News January 7, 2025

தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்க எம்பி கோரிக்கை 

image

டெல்லியில் மத்திய அரசின் சார்பில் தேசிய அளவில் உரம் மற்றும் ரசாயன செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது .இதில் பங்கேற்ற நெல்லை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் தமிழ்நாடு விவசாயிகளின் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி பேசினார் .தொடர்ந்து தமிழக விவசாயிகளுக்கு உர மானியத்தை அதிகரிப்பதோடு தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

News January 7, 2025

நெல்லையில் தனித் தொகுதி? – கலெக்டர் பதில்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(ஜன.6) வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது, பகுஜன் சமாஜ் மாநில செயலாளர் தேவேந்திரன் நெல்லை மாவட்டத்தில் 5 தொகுதிகள் இருந்தபோதிலும் தனி தொகுதிகள் எதுவும் இல்லை எனவே தனி தொகுதிகளை உருவாக்க வேண்டும் என்றார். பதிலளித்த கலெக்டர் கார்த்திகேயன், தொகுதி மறு சீரமைப்பின்போது இது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தெரிவித்தார்.

News January 7, 2025

நெல்லை ஆட்சியர் அறிவிப்பு 

image

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களில் 69 சதவீதம் பேரின் ஆதாரங்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிதாக சேரும் வாக்காளர்களின் ஆதாரங்கள் பெறப்பட்டு வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று (ஜன.6) தெரிவித்துள்ளார்.

News January 7, 2025

கருப்பு வெறுப்பாகி போனதா?: நெல்லை முபாரக் கண்டனம்

image

சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டா அணிந்த பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்றிரவு(ஜன.6) வெளியிட்ட அறிக்கையில், ‘தோழமைக்கு அழகு அல்ல, கருப்பில் இருந்து பிறந்த கருப்பு சிவப்புக்கு கருப்பு வெறுப்பாகி போனதா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!