Tirunelveli

News September 13, 2024

நெல்லையில் பட்டா மாற்ற உத்தரவு பெற வாய்ப்பு

image

நெல்லை நகர் பகுதியில் வருவாய் பின் தொடர் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை முன்னிட்டு பட்டா பெயர் மாற்றத்துக்கான விசாரணை அறிவிப்பு கடிதம் நில உரிமையாளர்களின் வீட்டிற்கு வந்து வழங்கப்படும். அவர்கள் உரிமையை நிலைநிறுத்த, விசாரணை நாளன்று சம்பந்தப்பட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பித்து பட்டா மாற்ற உத்தரவுகளை பெற்று பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 13, 2024

ஓணத்தையொட்டி வாடாமல்லி பூவுக்கு திடீர் கிராக்கி

image

ஓணம் பண்டிகை கொண்டாட்டம் வருகிற ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் அத்தப் பூ கோலத்திற்காக நெல்லை மாவட்டம் பகுதியில் உள்ள மானூர் மற்றும் நெல்லை பூ விற்பனை சந்தைகளில் விவசாயிகளிடம் நேரடியாக பூ கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளனர். வாடாமல்லி பூ அதிகம் வாங்கப்படுவதால் கிலோ ரூ.20லிருந்து இன்று 60 ரூபாயாக கிடுகிடு என உயர்ந்துள்ளது.

News September 12, 2024

நெல்லை வந்த 1319 மெட்ரிக் டன் யூரியா

image

நெல்லை கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு இன்று(செப்.12) சரக்கு ரயில் மூலம் மொத்தம் 1.319 மெட்ரிக் டன் யூரியா உரம் வந்து இரங்கியது. தென்காசிக்கு 540 மெட்ரிக் டன் உரமும், நெல்லைக்கு 216.900 மெட்ரிக் டன் உரமும், தூத்துக்குடிக்கு 450 மெட்ரிக் டன் உரமும், குமரிக்கு 112.500 மெட்ரிக் டன் உரமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News September 12, 2024

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் கூட்டம்

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்ட குழு சார்பாக, கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு நாளை(செப்.,13) மாலை 5 மணிக்கு பாளை., LIC அலுவலகம் முன்பிருந்து இரங்கல் ஊர்வலம் தொடங்கி லூர்து நாதன் சிலை அருகில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இன்று நெல்லை கட்சி அலுவலகத்தில் அவரது படத்திற்கு வீரவணக்கம் செலுத்தினர்.

News September 12, 2024

பாலியல் தொல்லை: குழந்தைகள் நலக்குழுமம் விசாரணை

image

பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் 7ம் வகுப்பு மாணவர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து அவர்கள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. மேலும், அவர்கள் போக்சோ சட்டத்தில் நேற்று(செப்.11) கைது செய்யப்பட்டனர். இதனிடையே இச்சம்பவம் குறித்து நெல்லை குழந்தைகள் நலக் குழுமம் விசாரணை நடத்தி வருகிறது.

News September 12, 2024

விஐபிகளை அழைக்க முன் அனுமதி அவசியம்-சிஇஓ உத்தரவு

image

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் மத்தியில் கூறியதாவது; பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வெளி நபர்களை அழைப்பதற்கு முன், மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலரின் முன் அனுமதி பெறுவது அவசியம். முன் அனுமதி இல்லாமல் வெளி நபர்களை நிகழ்ச்சிகளுக்கு பேச அழைக்கக்கூடாது. இதில் கவனமாக செயல்பட வேண்டும் என்றார்.

News September 12, 2024

நெல்லையில் ஆசிரியர்கள் இருவர் போக்சோவில் கைது

image

பாளையில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் ராபர்ட், நெல்சன் ஆகிய இருவர் 7ம் வகுப்பு மாணவர்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலை ஏற்படுத்தியதாக நேற்று காவல் நிலையத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் பாளை போலீசார் வழக்கு பதிவு செய்து 2 ஆசிரியர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று(செப்.11) இரவு கைது செய்தனர்.

News September 12, 2024

டென்மார்க் போட்டியில் சாதித்த நெல்லை தீயணைப்பு வீரர்

image

நெல்லை மாவட்டம் நாஞ்சான்குளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(23). தீயணைப்பு படை வீரரான இவர் ஓட்ட போட்டிகளிலும் சிறந்த வீரராவர். அவர் இந்திய தீயணைப்பு படை சார்பில் தேர்வு செய்யப்பட்டு டென்மார்க்கு சென்று அங்கு தீயணைப்பு வீரர்களுக்காக நடைபெற்ற 200, 400, 800, 1500 மீட்டர் ஓட்ட போட்டியில் பங்கேற்று நான்கு போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளார். இவரை தீயணைப்பு படை வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

News September 11, 2024

நெல்லையில் ரேசன் சேவை குறைதீர் முகாம் அறிவிப்பு

image

பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 14-ஆம் தேதி அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. இதில் புதிய குடும்ப அட்டைகளின் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பம், கைப்பேசி எண் பதிவு மற்றும் புகார்கள் அளித்து பலன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News September 11, 2024

தொழில் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசியத் தொழில் பயிற்சி குழுமத்தால் ஜூலை 2025ல் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வில் பங்கேற்க தனித் தேர்வர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் பேட்டை என்ற முகவரியில் வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தெரிவித்தார்.

error: Content is protected !!