Tirunelveli

News September 14, 2024

TNPSC Exam: நெல்லையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

பாளை., அம்பை, சேரை., நெல்லை பகுதிகளில் 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 20 ஆயிரத்து 223 பேர் இன்று(செப்.,14) TNPSC குரூப் 2, 2A முதல் நிலைத் தேர்வு எழுதுகின்றனர். இதையொட்டி மாவட்டம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேர்வு நடக்கும் இடத்திற்கும், தேர்வு முடிந்த பின் செல்வதற்கு ஏதுவாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். SHARE IT.

News September 14, 2024

நெல்லையில் 17 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் அடைப்பு

image

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வருகிற 17ஆம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் அவற்றுடன் இணைந்து மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

News September 14, 2024

கால்நடை கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம்

image

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 4 ஆவது சுற்று ‘புருசெல்லாசிஸ்’ நோய் தடுப்பூசி பணி வருகிற 18ஆம் தேதி தொடங்கி அக்.,15 வரை நடைபெற உள்ளது. இந்த நோயை தடுக்க 4 to 5 மாத வயதுடைய கெடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி ஒரு முறை செலுத்துவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை பெற இயலும் என தெரிவித்துள்ளார்.

News September 14, 2024

நெல்லை ஜங்ஷனில் கூடுதலாக 2 நடைமேடைகள்

image

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் பழமையான ரயில் நிலையம் ஆகும். இங்கு 5 நடைமேடைகள் உள்ள நிலையில், மேலும் 2 நடைமேடைகள் அமைக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து தற்போது பணிகள் தொடங்கியுள்ளன. இதில் முதற்கட்டமாக அங்குள்ள தளம் சமன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபமாக நெல்லை ஜங்ஷன் 2 ஆம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

News September 14, 2024

நெல்லையில் 103 டிகிரி வெப்பம் பதிவு

image

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இரண்டாவது கோடை காலம் போல அக்னி நட்சத்திர நாட்களை நினைவுபடுத்தும் வகையில் வெப்பம் உயர்ந்து வருகிறது. நெல்லை, பாளையங்கோட்டை வட்டாரத்தில் இன்று(செப்.13) அதிகபட்ச வெப்ப பதிவு 103 டிகிரியாக உயர்ந்தது. சுட்டெரித்த வெயில் காரணமாக சாலைகளில் செல்பவர்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.

News September 13, 2024

ராதாபுரம் முன்னாள் MLA இன்பதுரை காட்டம்!

image

பேச்சிபாறை பெருஞ்சாணி சித்தாறு 1 & 2 அணைகளில் மொத்தம் 3300 மி.க. அடிக்கு மேல் நீர் இருந்தால் ராதாபுரம் கால்வாயில் நீர் திறக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் 6000 மி.க அடி நீர் இருந்தும், சபாநாயகரே மனு அளித்தும் கூட நீர் திறக்காத தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என முன்னாள் ராதாபுரம் அதிமுக MLA இன்பதுரை இன்று தனது ‘X’ தளத்தில் தெரிவித்துள்ளார்.

News September 13, 2024

5 நாட்கள் மனித உரிமை ஆணையம் விசாரணை

image

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட மலை கிராமங்களில் பிபிடிசி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு வழங்கி வெளியேற்ற முற்பட்ட நிலையில், அது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வருகின்ற 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மாஞ்சோலை காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர்களிடம் நேரில் விசாரணை மேற்கொள்ள உள்ளது என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 13, 2024

நெல்லை – தூத்துக்குடி ரயில் நேரத்தை மாற்றி அமைக்க கோரிக்கை

image

மதுரை தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தாவிடம் நேற்று எம்எல்ஏ சண்முகையா கொடுத்த மனுவில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து காலை 7:30 மணிக்கு தூத்துக்குடி புறப்படும் ரயில் நேரத்தை காலை 7:10 மணிக்கும், தூத்துக்குடியில் இருந்து காலை 8:40 மணிக்கு புறப்படும் நேரத்தை 8:10 ஆகவும் மாற்றி இயக்க வேண்டும். மாணவர்கள் அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள் என்றார்.

News September 13, 2024

திருநெல்வேலி ரயில் நிலையம் சாதனை

image

மத்திய ரயில்வே துறையின் பாராட்டை பெற்றுள்ளது திருநெல்வேலி ரயில்வே நிலையம். கடந்த ஒரே ஆண்டில் ரூ.138 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ள நெல்லை சந்திப்பு ரயில் நிலையம், கூடுதல் அங்கீகாரம் NSG-2 பிரிவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. ரூ.47 லட்சம் பயணிகள் நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து பயணித்துள்ளனர். அதிக வருவாய் ஈட்டியதை தொடர்ந்து சந்திப்பு ரயில் நிலையம் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

News September 13, 2024

நெல்லையில் பட்டா மாற்ற உத்தரவு பெற வாய்ப்பு

image

நெல்லை நகர் பகுதியில் வருவாய் பின் தொடர் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை முன்னிட்டு பட்டா பெயர் மாற்றத்துக்கான விசாரணை அறிவிப்பு கடிதம் நில உரிமையாளர்களின் வீட்டிற்கு வந்து வழங்கப்படும். அவர்கள் உரிமையை நிலைநிறுத்த, விசாரணை நாளன்று சம்பந்தப்பட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பித்து பட்டா மாற்ற உத்தரவுகளை பெற்று பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!