India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை(ஆரஞ்ச் அலெர்ட்) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியே செல்லும் மக்கள் முன் பாதுகாப்புடன் செல்வது நல்லது. SHARE IT.
நெல்லை மானூர் அருகே சுப்பையாபுரத்தை சேர்ந்தவர் பத்மகுமார். இவரது மூத்த சகோதரி அனிதா(40). தம்பியிடம் சொத்தில் அனிதா பங்கு கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி சுப்பையாபுரத்தில் உள்ள தம்பி வீட்டுக்கு வந்த அனிதா, யாரும் இல்லாத நேரத்தில் பீரோவில் இருந்த 25 பவுன் நகையை திருடியுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் நேற்று(அக்.,10) வழக்குப் பதிந்து அனிதாவை கைது செய்தனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இணைந்து மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் 15 ஆம் தேதி தொடங்கி மாவட்டத்தின் 11 வட்டாரங்களிலும் நடத்துகிறது. முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறன் குழந்தைகள் தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் கொண்டு வரவேண்டும் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் உத்தரவின் படி காவல்துறை சார்பில் போலீஸ் அக்கா திட்டத்தின் கீழ் இன்று ஒரே நாளில் 54 கல்லூரிகளுக்கு காவல்துறை பெண் அதிகாரிகள் நேரில் சென்று மாணவிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினர். கலந்துரையாடலின் போது எந்தவித பிரச்சனையும் இருந்தாலும் தயக்கம் இன்றி தொலைபேசியில் தெரிவிக்கலாம் என கூறினர்.
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா எடுத்துள்ள உத்தரவு அறிக்கையில், நெல்லை மாநகரில் முன் அனுமதி இல்லாமல் ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா, போராட்டங்கள் நடத்தவும் முன் அனுமதியின்றி பொது இடத்தில் கூடவும் இன்று நள்ளிரவு முதல் 15 தினங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
நெல்லை ரயில் நிலையத்தில் ரயில் பாதை மின் தடம் மாற்றி அமைக்கும் பணி நடப்பதால் திருச்செந்தூரில் இருந்து மாலை 04.25 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் – நெல்லை முன்பதிவில்லாத ரயில் (06676) அக். 15 முதல் நவ. 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி (அக்.31) தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் தாழையூத்து முன்னாள் பஞ்சாயத்து தலைவரான கிருஷ்ணவேணியை கொலை செய்ய முயன்ற வழக்கில் ஆறு குற்றவாளிகளும் குற்றவாளிகள் என ஏற்கெனவே நீதிமன்றம் அறிவித்திருந்தது. இன்று அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டதில், குற்றவாளிகள் அனைவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.7.6 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் நேற்று(அக்.,9) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழ்மை நிலையில் உள்ள, கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவர் அணுகி விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதக சூழல் ஏற்பட்டுள்ளதாக நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். அடுத்த 4 தினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இன்று(அக்.,10) விடுத்துள்ள வானிலை பதிவில் தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த சில தினங்களாக நெல்லை மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் கீழ் இயங்கி வரும் ரேசன் கடைகளில், விற்பனையாளர் & கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், ;நெல்லை மாவட்டத்தில் 54 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
Sorry, no posts matched your criteria.