Tirunelveli

News October 12, 2024

நெல்லை – செங்கோட்டை ரயில் போக்குவரத்தில் மாற்றம்

image

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் பாதை மின் தடம் மாற்றி அமைக்கும் பணி நடைபெறுவதால் சில ரயில்களின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி செங்கோட்டை முன்பதிவு இல்லாத ரயில் திருநெல்வேலியில் இருந்து அக்.15, நவ.17, 20, 21, 22 ஆகிய நாட்களில் மதியம் 1.50 மணிக்கு பதில் 2.40 மணிக்கு தாமதமாக புறப்படும் என தென்னக ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 12, 2024

ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி

image

அரசு ஆவின் நிறுவனம் சார்பில் வழங்கப்படும் பால் பாக்கெட்டுகளை லட்சக்கணக்கான மக்கள் தினமும் வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழாக்களை முன்னிட்டு ஆவின் பால் பாக்கெட்டுகளை ஆவின் நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்து செய்தியை பதிவிட்டு வழங்கி வருகின்றனர். இது பால் வாங்கும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

News October 12, 2024

நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று(அக்.,12) காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாபநாசத்தில் 14 மி.மீ, சேர்வலாறி 27 மி.மீ, மணிமுத்தாற்றில் 0.60 மி.மீ, கொடுமுடியாற்றில் 17 மி.மீ, நம்பியாற்றில் 4 மி.மீ, மாஞ்சோலை 12 மி.மீ, காக்காச்சி 19 மி.மீ, நாலுமுக்கு 29 மி.மீ ஊத்து 26 மி.மீ, சேரை., 2.20 மி.மீ, நாங்குநேரி1 மி.மீ, களக்காட்டில் 27 மி.மீ மழை பெய்துள்ளது.

News October 12, 2024

குலசை தசரா: திருநெல்வேயில் போக்குவரத்து மாற்றம்

image

தசரா திருவிழாவையொட்டி திருநெல்வேலி சாலை மார்க்கமாக வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வு நடைபெறும் நாட்களான இன்று(11.10.2024), நாளை(12.10.2024) மற்றும் 13.10.2024 ஆகிய 3 நாட்களில் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நேற்று(அக்.,11) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News October 12, 2024

நெல்லை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று(அக்.,12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மழையால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன் பாதுகாப்புடன் செல்வது நல்லது. SHARE IT.

News October 12, 2024

பாளை., அரசு மருத்துவமனையில் சரஸ்வதி பூஜை விழா

image

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை நேற்று(அக்.,11) கொண்டாடப்பட்டது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் பொங்கல் வழங்கப்பட்டது.

News October 12, 2024

Telegram விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்: நெல்லை POLICE

image

Telegram App-ல் வரும் Part time job, Online job, Work from Home போன்ற விளம்பரங்களின் உண்மை தன்மையை அறியாமல் நம்பி ஏமாறாதீர்கள். சிறிய வேலைகளுக்கு பணம் கொடுப்பதுபோல் நடித்து பெரிய டாஸ்க் உள்ளதாகவும், அதற்கு பெரிய தொகையை முதலீடு செய்யுமாறு கூறி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். நீங்கள் பாதிக்கப்பட்டால் cybercrime.gov.in/ -ல் புகார் அளிக்கலாம் என நெல்லை மாவட்ட காவல்துறை வலியுறுத்தியுள்ளது. SHARE IT.

News October 12, 2024

நெல்லை மாவட்ட காவல்துறை வலியுறுத்தல்

image

Telegram App-ல் வரும் Part time job, Online job, Work from Home போன்ற விளம்பரங்களின் உண்மை தன்மையை அறியாமல் நம்பி ஏமாறாதீர்கள். சிறிய வேலைகளுக்கு பணம் கொடுப்பது போல் நடித்து பெரிய டாஸ்க் உள்ளதாகவும், அதற்கு பெரிய தொகையை முதலீடு செய்யுமாறு கூறி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ ல் புகார் அளிக்கலாம் என நெல்லை மாவட்ட காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

News October 11, 2024

திருநெல்வேலி எஸ்பி எச்சரிக்கை

image

வீட்டின் உரிமையாளரிடமிருந்து வீட்டை வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ பெற்று மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News October 11, 2024

அருங்காட்சியகத்தில் போட்டிகள் அறிவிப்பு

image

அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான திறன் திருவிழா வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கவியரங்கம், நடனம், பேச்சு ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். விருப்பமுள்ளவர்கள் 11ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என அரசு அருங்காட்சியக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!