India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு தொழில் பள்ளிகள் (ஐடிஐ) தொடங்கவும் தொடர் அங்கீகாரம் பெறவும் புதிய தொழில் பிரிவுகளில் கூடுதல் அலகுகளை இணைக்கவும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. ஆட்சியர் அலுவலகத்தில் 40 துறைகள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கார்த்திகேயன் தலைமையில் இன்று மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.2.மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் காலை 10.00 மணி அளவில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடைபெறுகிறது.3.பாளை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் காலை 10 மணி அளவில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடைபெறுகிறது. *ஷேர்*

நெல்லை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராபர்ட் புரூஸ் இன்று(ஜன.10) பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. #காலை 9.45 மணிக்கு மாநகராட்சி பொங்கல் திருவிழாவில் பங்கேற்கிறார். #பிற்பகல் 3 மணிக்கு அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்கிறார். #மாலை 5 மணிக்கு பல் மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசனின் மூத்த சகோதரர் இல.கோபாலன் இன்று உயிரிழந்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற குழு தலைவர் நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவரது இல்லத்துக்கு சென்று குடும்பத்தினரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார். இதில் பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சொசைட்டி மைதானத்தில் பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபாடி போட்டி தொடர் நடைபெற உள்ளது. ஜனவரி 14 முதல் 17 வரை நடைபெற உள்ள இந்த அகில இந்த போட்டியில் பல்வேறு மாநில வீராங்கனைகள் கலந்துக் கொள்கின்றனர். பார்வையாளர்கள் அமரும் கேலரி வசதியுடன் நடைபெறும் இந்த போட்டிக்கான ஏற்பாடு முழுவீச்சில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

நெல்லை ஆட்சியர் அலுவகத்திற்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்ட நிலையில் அது புரளி என தெரியவந்தது. இந்நிலையில் மிரட்டல் விடுத்த பேட்டையை சேர்ந்த அப்துல்ரகுமான் என்பவரை போலீசார் கைது செய்தனர். பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 வழங்காததால் மது போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக விசாரனையில் தெரியவந்துள்ளது.

எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்ட அறிக்கையில் திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன சீட்டு வாங்குவதற்கு வரிசையில் நின்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக வெளியான செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாளையங்கோட்டை ஸ்ரீ இராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை காலை 4.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரைஸ்ரீ அனந்த ஸயன சேவை நடைபெறும். பின்னர் மாலையில் ஸ்ரீ இராஜ கோபாலன் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 5.00 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கன ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெல்லை காவல் சரகத்தில் சாதிய கொலைகள், ரவுடி கொலைகள், வரதட்சணை மரணங்கள் எதுவும் 2024ல் நடைபெறவில்லை. இங்கு 83 சதவீதம் ஆதாய கொலைகள் 2024 ஆம் ஆண்டு குறைந்துள்ளது. சரகத்தின் நான்கு மாவட்டங்களில் உள்ள 268 கல்லூரிகளிலும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என நெல்லை காவல் சரக துணைத் தலைவர் மூர்த்தி இன்று தெரிவித்துள்ளார்.

ரயில் பயணிகள் கவனத்திற்கு பராமரிப்பு பணிகள் காரணமாக
இன்று ( ஜன.9 ) வியாழன் & சனிக்கிழமை ஆகிய 2 நாட்களும் நெல்லை வழியாக செல்லும் ரயில் வண்டி எண்: 16321 / 16322,
கோயம்புத்தூர் – நாகர்கோவில்
நாகர்கோவில் – கோயம்புத்தூர் 2
மார்க்கத்திலும் கரூர் – விருதுநகர்
இடையே மாற்று பாதையில் இயக்க படுகிறது.
கரூர் – திருச்சி – காரைக்குடி- மானாமதுரை – விருதுநகர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. *ஷேர்
Sorry, no posts matched your criteria.