Tirunelveli

News October 13, 2024

பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேரம் ரத்து

image

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மின் தடம் மாற்றி அமைக்கும் பணிகள் காரணமாக பாலக்காடு – திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 15ஆம் தேதி முதல் நவம்பர் 22ஆம் தேதி வரை திங்கள் கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் அக்டோபர் 31 தவிர மற்ற நாட்களில் தாழையூத்து – திருச்செந்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என நேற்று (அக்.12) அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

News October 13, 2024

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது

image

பனகுடியை சேர்ந்த பால ரதீஷ் என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும் வகைக்கு ஒரு லட்ச ரூபாய் பணத்தை விஜிலகுமார் என்பவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தை ஏமாற்றி உள்ளார். இதனால் பாலரதிஷ் நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசனிடம் புகார் அளித்தார். இந்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார்பணத்தை ஏமாற்றிய விஜிலகுமாரை இன்று கைது செய்தனர்.

News October 13, 2024

வீட்டை உள் வாடகைக்கு விட்டால் சட்டப்படி நடவடிக்கை

image

நெல்லை மாவட்ட காவல்துறை உங்கள் வீட்டை வாடகைக்கு கொடுக்கும்போது அந்த வீட்டில்அந்த நபர்கள் தான் குடியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வீட்டு உரிமையாளரின் அனுமதி இன்றி குத்தகைக்கு அல்லது வாடகைக்கு பெற்ற நபர் அவ்வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பது சட்டப்படி குற்றமாகும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இன்று தெரிவித்தனர்.

News October 12, 2024

நெல்லை மாவட்டத்தில் ரோந்து பணி காவல் அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று(அக்.12) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு திருநெல்வேலி ஊரகம், நாங்குநேரி, வள்ளியூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய உட்கோட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்திற்கு பொதுமக்கள் அவர்களை தொலைபேசியில் அழைக்கலாம் அல்லது 100 ஐ தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மாவட்டம் காவல்துறை அறிவித்துள்ளது.

News October 12, 2024

மாவட்ட பொறுப்பு அமைச்சர் நாளை நெல்லை வருகை

image

நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு நாளை காலை 10:30 மணிக்கு நெல்லைக்கு வருகிறார். அவருக்கு கே.டி.சி. நகர் பாலம் அருகே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளதால், கட்சியின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

News October 12, 2024

நெல்லை – செங்கோட்டை ரயில் போக்குவரத்தில் மாற்றம்

image

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் பாதை மின் தடம் மாற்றி அமைக்கும் பணி நடைபெறுவதால் சில ரயில்களின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி செங்கோட்டை முன்பதிவு இல்லாத ரயில் திருநெல்வேலியில் இருந்து அக்.15, நவ.17, 20, 21, 22 ஆகிய நாட்களில் மதியம் 1.50 மணிக்கு பதில் 2.40 மணிக்கு தாமதமாக புறப்படும் என தென்னக ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 12, 2024

ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி

image

அரசு ஆவின் நிறுவனம் சார்பில் வழங்கப்படும் பால் பாக்கெட்டுகளை லட்சக்கணக்கான மக்கள் தினமும் வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழாக்களை முன்னிட்டு ஆவின் பால் பாக்கெட்டுகளை ஆவின் நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்து செய்தியை பதிவிட்டு வழங்கி வருகின்றனர். இது பால் வாங்கும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

News October 12, 2024

நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று(அக்.,12) காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாபநாசத்தில் 14 மி.மீ, சேர்வலாறி 27 மி.மீ, மணிமுத்தாற்றில் 0.60 மி.மீ, கொடுமுடியாற்றில் 17 மி.மீ, நம்பியாற்றில் 4 மி.மீ, மாஞ்சோலை 12 மி.மீ, காக்காச்சி 19 மி.மீ, நாலுமுக்கு 29 மி.மீ ஊத்து 26 மி.மீ, சேரை., 2.20 மி.மீ, நாங்குநேரி1 மி.மீ, களக்காட்டில் 27 மி.மீ மழை பெய்துள்ளது.

News October 12, 2024

குலசை தசரா: திருநெல்வேயில் போக்குவரத்து மாற்றம்

image

தசரா திருவிழாவையொட்டி திருநெல்வேலி சாலை மார்க்கமாக வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வு நடைபெறும் நாட்களான இன்று(11.10.2024), நாளை(12.10.2024) மற்றும் 13.10.2024 ஆகிய 3 நாட்களில் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நேற்று(அக்.,11) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News October 12, 2024

நெல்லை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று(அக்.,12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மழையால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன் பாதுகாப்புடன் செல்வது நல்லது. SHARE IT.

error: Content is protected !!