India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை, தூத்துக்குடி மண்டலங்களில் உள்ள வைணவ திருக்கோவில்களுக்கு புரட்டாசி மாத சிறப்பு ஆன்மீக சுற்றுலாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட மூத்த குடிமக்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான விண்ணப்பங்களை அறநிலையத்துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து நிரப்பி இணை ஆணைய அலுவலகத்தில் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை – ஈரோடு இடையே இயக்கப்படும் ரயில் திண்டுக்கல் அருகே ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் 23ம் தேதி வரையும் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரையும் அக்டோபர் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரையும் ஈரோடு திண்டுக்கல் இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் அம்பை, நெல்லை வழியாக செல்வதால் அப்பகுதி பயணிகள் ரயில்வே அறிவிப்புக்கு ஏற்க அமைத்து கொள்ளுமாறு கோட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவி பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 18ஆம் தேதி மற்றும் 19 ஆகிய இரண்டு நாட்கள் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறையினர் இன்று (செப்.17) தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வெயில் தாக்கம் தொடர்ந்து கோடை போல் உச்சம் பெற்று வருகிறது. விஜயநாராயணம், திசையன்விளை, பாளையங்கோட்டை வட்டாரங்களில் மாலை 5 மணிக்கு தாண்டிய பிறகும் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இன்றைய அதிகபட்ச வெப்ப பதிவு 102 டிகிரியாக உயர்ந்தது. இதனால் சாலைகளில் சென்றவர்கள் மிகுந்த அவதி அடைந்தனர். பிற்பகலில் அனல் காற்று வீசியது.
சனி, ஞாயிறு விடுமுறையுடன் இன்று (செப்.17) மிலாடி நபி விடுமுறையை சேர்த்துக் கொண்டாடுவதற்காக நேற்றும் விடுமுறை எடுத்துக் கொண்டு நெல்லை மாவட்டத்திற்கு வந்தவர்கள் இன்று சென்னை திரும்புகின்றனர். வழக்கமான பஸ்கள், ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்டு கூட்டம் நிரம்பி வழிகிறது. சில ஆம்னி பஸ் கட்டணம் 3000 ரூபாயை கடந்துள்ளது. அதிலும் ஒரு சில இருக்கைகளே உள்ளன.
ராதாபுரத்தில் தமிழக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதுவிலக்கு விவகாரத்தில் முதலமைச்சரும் திருமாவளவனும் நாடகம் ஆடுவதாக மத்திய இணை மந்திரி முருகன் கூறினார். மதுவிலக்கு என்பது ஒரு கட்சியின் கொள்கை. அவர்கள் மாநாடு நடத்தலாம் அதில் தப்பு இல்லை. பிரதமர் மோடி இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வந்தால் தமிழகம் அதற்கு தடையாக இருக்கா இருக்காது என்றார்.
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் சார்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு மற்றொரு சூரிய மின்சார சாதனை மாநிலம் 6401 MW உச்ச மின் உற்பத்தியுடன் தனது முந்தைய சாதனையை தாண்டியுள்ளது. இந்த சாதனை நிலையான ஆற்றலுக்கான தமிழ்நாட்டின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பசுமையான எதிர்காலத்தை நோக்கி தமிழ்நாடு செல்வதாக தெரிவித்துள்ளது.
வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் ரோடு ஆஞ்சநேயர் கோயில் அருகே இன்று பைக், பஸ், கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் விபத்து தடுப்பு பிரிவு போலீசார் & தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்ற விபத்தில் பலியான 4 பேரின் உடல்களை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு சென்ற ரூ.4 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். சிபிசிஐடி போலீஸ் விசாரிக்கின்ற நிலையில், பிடிபட்ட 3 பேர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்றதாக வாக்குமூலம் அளித்திருந்தனர். இந்நிலையில் ரயில்வே கேண்டின் உரிமையாளர் முஸ்தபா என்பவர் தனது பணம் என தெரிவித்திருந்தார். விசாரணையில் அவருக்கு உரியது இல்லை என தெரிய வந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஜூன், ஜூலை 2024 தொடக்கக்கல்வி ஆசிரியர் பற்றிய தேர்வு எழுதிய முதல், 2ம் ஆண்டு மாணவர்கள் தேர்வு முடிவுகளை அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தனிதேர்வர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த பயிற்சி நிறுவனங்களிலும் நாளை பிற்பகல் 3 மணி முதல் தெரிந்து கொள்ளலாம். மறு கூட்டல் மற்றும் ஒளிநகல் பெற விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு 23ஆம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.