Tirunelveli

News October 15, 2024

பொதுமக்கள் பிரச்னைகளை தெரிவிக்க இலவச எண்கள்!

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்கள் பிரச்னைகள் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு இலவச எண்கள் அறிவிக்கப்பட்டு அதன் பலகை நேற்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வைக்கப்பட்டது. இதில் ஊராட்சி, மாநகராட்சி, மின்சாரம், குடும்ப அட்டை, மகளிர் பேரிடர் உதவி, முதல்வரின் முகவரி என தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 15, 2024

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உதவி கமிஷனர் நியமனம்

image

திருப்பத்தூர் நகராட்சி கமிஷனர் நாராயணனை திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக இடமாற்றம் செய்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இவர் விரைவில் திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக பொறுப்பேற்க உள்ளார். தற்போது திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனர் பதவி காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 15, 2024

14 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: உதவி ஆணையர்

image

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் முருகப் பிரசன்னா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், நெல்லை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத டுடோரியல் கல்லூரி, டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட், வர்த்தக நோக்கில் நடத்தப்படும் ஆங்கில மீடியம் பிரைமரி, நர்சரி பள்ளி உள்ளிட்ட 14 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 72 பயனாளிகள் பயன்பெறுவர் என்றார்.

News October 15, 2024

பருவமழை: மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!

image

திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அலையின் சீற்றம் இன்று(அக்.,15) மாலை முதல் நாளை நள்ளிரவு வரை மிக அதிகமாக காணப்படும். ஒவ்வொரு அலையும் 18 – 22 நொடி நேரம் வரை இருக்கவும், 1.2 – 2 மீட்டர் உயரம் எழும்பவும் வாய்ப்புள்ளது. எனவே கடற்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 15, 2024

நெல்லையில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

image

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவது குறித்து ஒவ்வொரு மாதமும் 2 ஆவது சனிக்கிழமை நெல்லை மாவட்ட, வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த மாதம் வருகிற 19ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

News October 15, 2024

மழை பாதுகாப்பு: மின் சேவை தொடர்பு எண்கள் அறிவிப்பு

image

சூறைகாற்று, இடி, மின்னல், மழை, நேரங்களில் மின்பாதைகள், மின்கம்பங்கள், மின்சாதனங்கள், மரங்கள் அருகிலேயோ அல்லது அதற்கு கிழோ பொதுமக்கள் நிற்க வேண்டாம். மேலும், மின்சாரம் சம்பந்தமான சேவைக்கு, மின்தடை நீக்கும் மைய எண்களான 94987 94987, 94458 59032, 94458 59033 & மின் நுகர்வோர் சேவை மைய எண் 94458 59034 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News October 15, 2024

மூன்னீர்பள்ளம் அருகே 2 பேருக்கு அரிவாள் வெட்டு

image

நெல்லை கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் ராமசாமி(24). இவரது நண்பரான தங்க மாரியப்பன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் அதேபகுதியில் உள்ள அம்மன் கோயிலில் தசரா விழா நடத்தியுள்ளனர். நேற்று(அக்.,14) மாலையில் வசூலான பணம் குறித்து ஒரு பிரிவினர் கணக்கு கேட்கவே, அப்போது ஏற்பட்ட தகராறில் ராமசாமி, தங்க மாரியப்பன் ஆகியோரை 5 பேர் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News October 15, 2024

விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 18ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் காலை 11 மணிக்கு நடைபெறும். இதில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ள ஆட்சியர் கார்த்திகேயன் அழைப்பு விடுத்துள்ளார்.

News October 15, 2024

திருநெல்வேலி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் இன்று (அக்.14) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெபராஜ் தலைமையின் கீழ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் காவலர்களின் தொடர்பு எண்ணும் வெளியிடப்பட்டு பொதுமக்கள் இவர்களை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

News October 15, 2024

நெல்லை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மனு

image

திருநெல்வேலி மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு பல்வேறு கட்டங்களாக போராடி வருகின்றனர். ஆனாலும் கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் இன்று (அக்.14) தூய்மை பணியாளர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் தங்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க மாநகராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தும்படி கேட்டுக் கொண்டனர்.

error: Content is protected !!