India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு பொதுத் தேர்வு தொடங்கியது. ஏற்கனவே பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் நேற்று இவர்களுக்கு தொடங்கியது. முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் ஆலோசனைப்படி கல்வி மாவட்ட அதிகாரிகள் தலைமை ஆசிரியர்கள் தேர்வு மையங்களில் ஆய்வு செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 53.55 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழை அளவான 23.50 மில்லி மீட்டர் மழையை விட 130 சதவீதம் அதிகமாகும். நடப்பு செப்டம்பர் மாதத்தில் 16 ஆம் தேதி வரை 2.33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது என ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்த்திகேயன் பேசுகையில், “நீர்வழிப் பாதையில் குப்பையை கொட்டி அடைப்பு ஏற்படுத்துபவர்கள் மீது நீர்வளத்துறை சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்படும். அந்த புகார் மனுவை பெற்று சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நெல்லையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், நெல்லை ரயில் நிலையம் உலக தரத்திற்கு ரூ.300 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. விமான நிலையத்திற்கு இணையான தரத்தில் வசதிகள் கிடைக்கும் நெல்லை சென்னை இடையே கூடுதல் ரயில்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நெல்லை எக்ஸ்பிரசில் கூடுதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என்றார்.
நெல்லை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் நீடிக்கின்றன. இதனால் பல்வேறு குடும்பங்கள் ஆதரவின்றி மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே வாகனங்களை ஓட்டுபவர்கள் அதிவேகமாக செல்லாமல் மிதமான வேகத்திலேயே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கோட்டை கருங்குளத்தில் நேற்று(செப்.,21) மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் குழந்தை திருமணம் மிகவும் குறைந்துள்ளது. குழந்தை திருமணம் நடக்கிறதா என தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று(செப்.,20) நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண் பொறியியல் துறையில் சார்பில் வேளாண்மை இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் பவர் டில்லரை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பயனாளிக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற கால நிலை தாங்கும் நகர செயல்திட்டம் வெளியிட்டு விழாவில், மத்திய அமைச்சர் டோகன் சாஹீ கலந்து கொண்டு திருநெல்வேலி மற்றும் 7 நகரங்களுக்கான கால நிலை தாங்கும் நகர செயல் திட்டத்தை வெளியிட்டார். தொடர்ந்து சிறந்த மாநகராட்சியாக திருநெல்வேலி மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்குரிய விருதினை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ராவிடம் மத்திய அமைச்சர் வழங்கினார்.
நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத நபர்கள் சுய விவரங்களை கேட்டு ஸ்காலர்ஷிப் தருவதாக கூறி மோசடி நடைபெற்று வருகிறது. மோசடி பற்றி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், இது போன்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்டால் புகார் அளிக்கவும் என தெரிவிக்கப்பட்டது.
வீரளபெருஞ்செல்வி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துக்குட்டி நாராயணன் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்துவுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்துள்ளது. இதில் முத்துக்குட்டி நாராயணனை கடந்த 2020ஆம் ஆண்டு வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேச்சிமுத்து அவருடைய மகன்கள் கந்தசாமி, முருகன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Sorry, no posts matched your criteria.