Tirunelveli

News September 22, 2024

அமைச்சர் உதயநிதிக்கு ராதாபுரம் முன்னாள் MLA பதில்

image

அதிமுக மீண்டு வர வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்த நிலையில் அவருக்கு ராதாபுரம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை இன்று தனது ‘X’ தளத்தில் பதிலளித்துள்ளார். அதில், திமுகவின் மீண்ட வரலாறை அமைச்சர் துரைமுருகன் போன்ற சீனியர்களிடம் இது பற்றி உதயநிதி கேட்டறிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News September 21, 2024

நெல்லையில் 2 இளம்பெண் உட்பட 3 பேர் மாயம்

image

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் கல்லூரி மாணவி ஒருவரும், கங்கைகொண்டான் மற்றும் பழவூரில் 2 இளம் பெண்கள் என மொத்தம் 3 பேர் மாயமானதால் அவர்களுடைய உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் அந்தந்த காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர் பகுதிகளில் இளம் பெண்கள் மாணவிகள் மாயமாகி வருவது வாடிக்கையாகி வருகிறது.

News September 21, 2024

ராதாபுரம் கால்வாய் பகுதியில் ராபர்ட் புரூஸ் MP ஆய்வு

image

திருநெல்வேலி மாவட்டத்தில், ராதாபுரம் கால்வாய் பிரியும் இடமான நிலப்பாறை பகுதியை நெல்லை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராபர்ட் புரூஸ் இன்று(செப்.,21) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக்காலத்திற்கு பின் கால்வாய் மற்றும் ஷட்டர் பராமரிப்பு பணிகள் தேவைப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து அப்பகுதி மக்களிடமும் கலந்துரையாடினார். MP உடன் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் சென்றனர்.

News September 21, 2024

4 ஆண்டுகளில் நெல்லை ரயில்வே கோட்டமாக மாறுகிறது

image

நெல்லை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங் நேற்று வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் நெல்லை ரயில்வே நிலையம் வருவாய் அடிப்படையில் B+ தரத்திற்கு உயர்ந்துள்ளது. நெல்லையை மையமாக வைத்து புதிய கோட்டம் அமைக்க உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 3 முதல் 4 ஆண்டுகளுக்குள் புதிய கோட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றார்.

News September 21, 2024

நெல்லை ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

image

மதுரை கோட்டை ரயில் வழித்தடத்தில் திண்டுக்கல் பகுதியில் பொறியியல் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. இதனால், நெல்லை வழியாக செல்லும் நாகர்கோவில் – மும்பை விரைவு ரயில் எண் 16352 வருகின்ற 26 மற்றும் அக்டோபர் 3 அன்று மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதுபோல் கன்னியாகுமரி – ஹவுரா அதிவிரைவு ரயில் 28 ஆம் தேதி விருதுநகர்,மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது.

News September 21, 2024

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆண்டவன் தண்டனை கொடுப்பான் – நயினார்

image

கடந்த 1951, 57,62 ஆண்டுகளில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடந்தது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு தேர்தலையும் ஒன்றாக நடத்த வேண்டும். திருப்பதி லட்டு தயாரிப்பின் போது விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்ட விவாகரத்தில் பாரபட்சம் இல்லாமல் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவருக்கு ஆண்டவன் தண்டனை கொடுப்பார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

News September 21, 2024

ரூ.4 கோடி விவகாரத்தில் சம்மன் அனுப்ப உத்தரவு

image

கடந்த பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி க்கு சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது. ஒரு வாரத்திற்கு முன்னதாக அவரது வாட்ஸ் அப், அவரது முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளது.

News September 21, 2024

100 யூனிட் இலவச மின்சாரம் மின்வாரியம் விளக்கம்

image

நெல்லை மின்வாரியம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தனித்தனி வீடுகளாக பயன்பாடுகள் இருந்தால் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் தொடரும். 2 மின் இணைப்புகள் பெற்று ஒரே குடும்பம் 2 மின் இணைப்புகளின் மின்சாரத்தை பயன்படுத்தினால் அந்த 2 மின் இணைப்புகளின் பயன்பாடுகளும் ஒன்றாக கணக்கீடு செய்யப்பட்டு 100 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கபடும். 2 மின் இணைப்புகளும் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும்.

News September 21, 2024

நெல்லை மாவட்டத்தில் 638 குளங்கள் வறண்டன

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1097 குளங்களில் 638 குளங்கள் தற்போது வரண்டு விட்டன. எனவே இதைப் பயன்படுத்தி விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளதால் வறண்ட குளங்களில் உடனடியாக தூர்வாறும் பணியை மேற்கொள்ள வேண்டும் என நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

News September 21, 2024

தேங்காய் கொள்முதலுக்கு மைசூர் செல்லும் வியாபாரிகள்

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள காய்கறி சந்தைகளுக்கு தேங்காய் வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. இது குறித்து தச்சநல்லூர் மார்க்கெட் தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறுகையில் தென்காசி, கடையநல்லூர், பொள்ளாச்சியில் இருந்து வரும் தேங்காய் வரத்து குறைந்து விட்டது. வறட்சி நீடிப்பதால் கிலோ ரூ.55 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் மைசூருக்கு சென்று லாரியில் தேங்காய் வாங்கி வர ஏற்பாடு செய்துள்ளோம் என்றனர்.

error: Content is protected !!