Tirunelveli

News October 23, 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் பொழிந்த மழையளவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் பொலிந்த மழை அளவு அம்பாசமுத்திரம்- சேரன்மகாதேவி 7.40, மணிமுத்தாறு 0.80, நாங்குநேரி 5.00, பாளையங்கோட்டை- ராதாபுரம் 7.00, பாபநாசம் 4.00, திருநெல்வேலி 2.00, சேர்வலாறு அணை1.00, கனடியன் அணைக்கட்டு – களக்காடு 2.60, கொடுமுடியாறு அணை 9.00, மூலக்கரைப்பட்டி 1.00, நம்பியார் அணை 3.00, மாஞ்சோலை 4.00, காக்காச்சி 46.00, நாள் மூக்கு 52.00, உத்து 66.00 ஆகிய அளவுகளில் பதிவாகியுள்ளது.

News October 23, 2025

நெல்லை: ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் வேலை.,

image

நெல்லை மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. இன்றே கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு இங்கு <>கிளிக் செய்யவும்<<>>. இப்பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 23, 2025

நெல்லை: வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் சேர்ந்தவர் தங்கையா. இவர் களக்காடு அருகே சொந்தமாக இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் இறைச்சி கடைக்கு தனது இருசக்கர வாகனத்தில் தங்கையா சென்றுள்ளார். அப்பொழுது இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த தங்கையாவை நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தங்கையா பரிதாபமாக உயிரிழந்தார்.

News October 23, 2025

நெல்லை: மழைக்காலத்தில் இந்த App பயன்படுத்துங்க

image

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழை குறித்து விபரங்களை அறிந்து கொள்ள “டி என் அலர்ட்” என்ற செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த செயலியில் மழை மற்றும் வானிலை குறித்து 4 நாட்களுக்கு முன்னதாகவே தகவல்கள் வெளியாகும். பேரிடர் காரணமாக புகார்களை பதிவு செய்யவும் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இது உதவும்.

News October 22, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.22] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கணேசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News October 22, 2025

வேளாண்மை பட்டதாரிகளுக்கு புதிய வசதி

image

நெல்லை மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க வேளாண் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். திட்டத்தில் விண்ணப்பிக்க வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.

News October 22, 2025

நெல்லை: நிலம் வாங்க ரூ.5 லட்சம்., இத பன்னுங்க

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 % முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) தேனி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 22, 2025

நெல்லை : 5810 காலியிடங்கள் அறிவிப்பு

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>. ஷேர் பண்ணுங்க!

News October 22, 2025

நெல்லை – செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

image

இன்று காலை 10.05 மணிக்கு செங்கோட்டையில் புறப்படும் 56742 செங்கோட்டை – நெல்லை மதியம் 01.40 க்கு நெல்லையில் புறப்படும் 56743 நெல்லை – செங்கோட்டை ரயில்கள் இன்றும் (22.10.25,) நாளையும் (23.10.25) சேரன்மகாதேவி – நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும் நாளையும் சேரன்மகாதேவி வரை மட்டுமே இயங்கும்.

News October 22, 2025

நெல்லை: பைக் மோதி ஒருவர் பலி

image

விக்கிரமசிங்கபுரம் தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் சக்தி வடிவேல் (57) மரக்கறி கடை நடத்தி வந்தார். கடந்த 16 ம் தேதி இரவு விக்கிரமசிங்கபுரம் சந்தனமாரியம்மன்கோயில் அருகில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த ரோட்டில் பைக்கில் வந்த ஒருவர் சக்தி வடிவேல் மீது மோதியதில் பலத்த காயமடைந்தவர் சிகிச்சைக்காக பாளை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!