India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன், தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும் இன்று (ஆக.04) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பாளை கேடிசி நகரில் கடந்த 27ம் தேதி ஐடி ஊழியர் கவின் ஆணவ கொலை செய்யப்பட்டார். கவின் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு தேசிய பட்டியலின ஆணையம் இன்று நெல்லை வந்துள்ளது. ஆணைய தலைவர் கிஷோர் மக்குவானா நெல்லையில் இரண்டு நாள் முகாமிட்டு இந்த வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொள்கிறார். மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடமும் ஆலோசனை நடந்து வருகிறது.
காவல்கிணறு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இது திருநெல்வேலியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஊர் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். காவல்கிணறு என்ற பெயர் வரக் காரணம், அந்தக் கிணறு ஒரு காலத்தில் ஊருக்கு காவல் தெய்வமாக இருந்திருக்கிறது. அதனால் தான் அதற்கு காவல் கிணறு என்று பெயர் வந்தது.
திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம், அம்பாசமுத்திரம் டவுன் சோனா மஹால், ராஜவல்லிபுரம், கோடகநல்லூர் கலந்தபனை ஆகிய பகுதிகளில் நாளை(ஆக.05) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம் நடைபெறும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில்; நெல்லை மாவட்டத்தில் அரசு கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனையில் “மதி சிறு தானிய உணவகம்” நடத்துவதற்கு விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக் குழு ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம். வரும் 8ம் தேதிக்குள் திட்ட இயக்குனர், ஊரக வாழ்வாதார இயக்ககம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், நெல்லை என்ற முகவரியில் மனுவை அனுப்பி வைக்க வேண்டும்.
நெல்லை மாவட்ட மக்களே.. சாதாரண மக்களும் அரசிடம் கேள்வி கேட்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் RTI சட்டம். இதை பயன்படுத்தி ஒரு திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.. திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்பதை அதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். அதற்கு எந்த துறையில் யாரிடம் கேட்பது என்பது நிறைய பேருக்கு குழப்பம் ஏற்படும்.இந்த <
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தில் பயறு வகை விதைகள், காய்கறி விதைகள், பழச்செடிகள் தொகுப்பு பெற வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இத்திட்டத்தின் கீழ் விதைகளை இல்லங்களில் நடவு செய்ய ஏதுவாக இடம் உள்ளவர்கள் மற்றும் உழவர் பெருமக்கள் பயன்பெற உழவன் செயலியில் அல்லது https://tnhorticulture. tn. gov. in என்ற வலைதளம் மூலமாகவோ பதிவு செய்து பயன்பெறலாம். என கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித
➡️நெல்லையில் 132 மையங்களில் 36,011 பேர் நாளை குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்வது கட்டாயம்
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை
➡️ இதனை தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு SHARE செய்யவும்!
நெல்லை மாவட்டத்தில் 449 தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 – 65 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம்.
நெல்லை மாவட்டத்தில் புத்த மதத்தினர், சமண மதத்தினர் மற்றும் சீக்கிய மதத்தினர் புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவி கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் நவம்பர் மாதம் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.