Tirunelveli

News October 25, 2024

“தவெக மாநாடு பெரும் அரசியல் புரட்சியை ஏற்படுத்தும்”

image

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு வருகின்ற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் நெல்லையிலிருந்து ஏராளமான தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இது குறித்து தமிழக வெற்றிக் கழகம் நெல்லை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் புல்லட் ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த மாநாடு பெரும் அரசியல் புரட்சியை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

News October 25, 2024

நெல்லையில் சதத்தை தாண்டிய மழைப்பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (அக்.25) காலை முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் இன்று மாலை 4 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 106.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக நாங்குநேரி பகுதியில் 51 மில்லி மீட்டர் மழையும் ராதாபுரத்தில் 15.60 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

News October 25, 2024

நெல்லைக்கு வருகை தந்த கவர்னரை வரவேற்ற ஆட்சியர் 

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா நாளை காலை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று (அக்.25) நெல்லை வந்தார். நெல்லை வருகை தந்த கவர்னரை நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். கவர்னர் வருகையை முன்னிட்டு நெல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

News October 25, 2024

நெல்லை மாநகர பகுதியில் 15 நாள் தடை உத்தரவு பிறப்பிப்பு

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா உத்தரவின் படி நெல்லை மாநகர பகுதியில் இன்று (அக்.25) நள்ளிரவு முதல் வரும் நவம்பர் 8ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொது இடங்களில் கூடுதல், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம், தர்ணா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 25, 2024

மன்னிப்பு கடிதம் கொடுத்த தூர்தர்ஷன் – சபாநாயகர்

image

ஆளுநர் ஆர்.என்.ரவியை திருப்திபடுத்துவதற்காக தூர்தர்ஷன் இயக்குனர் தமிழ்த்தாய் வாழ்த்தில் 2 வரிகளை விட்டு விட்டு படித்திருக்கலாம். யாரையோ திருப்தி படுத்துவதற்காக என்னை பற்றி தவறான தகவலை பகிர்ந்த நிலையில் என்னிடம் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் இயக்குனர் மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளார் என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (அக்.25) நெல்லையில் தெரிவித்துள்ளார்.

News October 25, 2024

தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்

image

தமிழகத்தில் உருது மொழி வழி பள்ளிகள் குறைந்து வரும் நிலையில் அதனை மேலும் குறைக்கும் வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தில் 4 உருது பள்ளிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

News October 25, 2024

நெல்லை: மழைக்கால அவசர உதவி எண்கள் அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் மழைக்கால அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மழைக்கால அவசர உதவிக்கு மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தை 1077, 04622501012 மற்றும் மாவட்ட காவல்துறையை 04622562500 என்ற எண்ணிலும் மாநகர காவல் துறையை 04622562651 என்ற எண்ணிலும் தீயணைப்பு மீட்பு பணிகள் 04622572099 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 25, 2024

நெல்லையில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை  தகவல்

image

நெல்லை வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (அக்.25) பிற்பகல் விடுத்துள்ள வானிலை தகவல்: கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழை முதல் அதிகனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

News October 25, 2024

நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்கு பங்கேற்பதற்காக இன்று (அக்.25) மாலை விமானம் மூலம் வரவுள்ள ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகே அனைத்திந்திய மாணவர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் வண்ணாரப்பேட்டை பகுதியில் ஏ.சி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

News October 25, 2024

நெல்லை கலெக்டர் மீது அரசு ஊழியர்கள் புகார்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அரசு அலுவலர்களிடம் தொடர்ந்து கண்ணிய குறைவாக நடந்து வருவதாக வருவாய் துறை ஊழியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே அவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்திய நிலையில் இன்று (அக்.25) தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நெல்லை தனி துணை ஆட்சியரிடம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

error: Content is protected !!