India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடை ஒன்று ஏலத்திற்கு வருகிறது. இந்த ஏலமானது மாநகராட்சி ஆணையாளர் அல்லது அதிகாரம் பெற்ற மாநகராட்சி அலுவலரால் மேலப்பாளையம் மன்ற அலுவலகத்தில் வைத்து டிசம்பர் 5ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
நெல்லையில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் திருத்த முகாம், வாக்குச்சாவடிகளில் நடைபெறுகின்றன. மாலை 4 மணிக்கு நேரு கலையரங்கில் கூட்டுறவு வார விழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்கிறார். மாணவர்கள் கலைத் திருவிழா போட்டிகள் காலை 10 மணி முதல் மாலை வரை சாப்டர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளைகளில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்து அதனை உறுதிப்படுத்தினர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. படிப்படியாக இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும் என்றார்.
நெல்லையிலிருந்து சென்னை வரும் வந்தே பாரத் ரயிலில் இன்று(நவ.16) காலை வழங்கிய உணவில் வண்டுகள் இருப்பதை கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட சாம்பாரில் இருந்த வண்டுகளை காண்பித்து ரயில்வே ஊழியர்களிடம் பயணிகள் முறையிட்டுள்ளனர். இதனை அறியாத பயணிகள் சிலர், கடுகு என நினைத்து உண்டதாக வேதனை தெரிவித்தனர். இதுதொடர்பாக ரயில்வே ஊழியர்கள் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டது.
மூலக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் சலூன் கடைக்கு நேற்று(நவ.15) 4 வயது சிறுமிக்கு முடி வெட்டுவதற்காக அவருடைய தந்தை அழைத்து வந்தார். சிறுமியை முடிவெட்டுமாறு கூறிவிட்டு தந்தை வெளியே சென்று உள்ளார். இதை வாய்ப்பாக பயன்படுத்திய கணேசன் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கணேசனை தேடி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் 39 மாவட்டங்களிலும் தேர்தல் பணியாற்றிய மாவட்ட தேர்தல் அலுவலர் முதல் உதவியாளர் வரை அனைத்து பிரிவு அலுவலர்களுக்கும் 171 கோடி மதிப்பூதியம் அனுமதி வழங்கி தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 5 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட நெல்லை மாவட்டத்திற்கு ரூ.4 கோடியே 89 லட்சத்து 95 ஆயிரம் கிடைக்கும் என நேற்று தெரிவிக்கப்பட்டது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நாளை(நவ.17) நெல்லைக்கு வருகை தருகிறார். பாளையில் புதிதாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட பொருதை ஆஸ்பத்திரியை திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து பாளை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு நடத்துகிறார். நாளைக்கு வருகை தரும் அமைச்சர் மா. சுப்பிரமணியத்திற்கு வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
மேலப்பாளையம் அலங்கார் திரையரங்கின் காம்பவுண்ட் சுவருக்குள் 2 மர்ம நபர்கள் இன்று அதிகாலை 3 பாட்டில்களில் அடைத்து கொண்டு வந்த பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர். யாருக்கும் எந்த காயமும் இல்லை. திரையரங்கிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமராவை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மேலப்பாளையம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
நெல்லை மேயர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், தாமிரபரணி நதியை மாசுப்படுத்துவது நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் இழைக்கும் அநீதியாகும். ஆகவே மாநகர பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்கள் வளாகத்தில் உருவாகும் கழிவு நீரை சுத்திகரித்து மறு சுழற்சிக்கு உட்படுத்தவேண்டுகிறேன். விதிகளுக்கு முரணாக செயல்படுவோர் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.
முன்னீர்பள்ளத்தை அடுத்த கருங்குளத்தில் டாஸ்மாக் கடை அருகே பைக்கில் வந்த வாலிபர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று அறிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்த முன்னீர் பள்ள போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை செய்யப்பட்ட நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.