Tirunelveli

News August 12, 2025

பல் பிடுங்கிய வழக்கில் 4வது முறையாக எஸ்பி ஆஜராகவில்லை

image

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கு பொதுவாக மாதத்திற்கு ஒரு வாய்தா என்ற அடிப்படையில் நீதிமன்ற விசாரணை நடந்து வந்தது. ஆனால் கடந்த ஜூலை மாதத்தில் 2 வாய்தாக்களும், நடப்பு மாதத்தில் இதுவரை 2 வாய்தாக்களும் நடந்துள்ளன. மேலும் ஒரு வாய்தா விசாரணை இதே மாதத்தில் நடைபெற உள்ளது. ஆனால் பல்வீர்விங் 4வது முறையாக நேற்று நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News August 12, 2025

நெல்லை: VOTER LIST உங்க பெயர் ? CHECK பண்ணுங்க!

image

நெல்லை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த <>தளத்தில் <<>>உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் பண்ணவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News August 12, 2025

நெல்லை: `கூலி` பட TICKET அதிக கட்டணம் வசூலா?

image

நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் நெல்லையில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் நாளை மறுநாள் (ஆகஸ்ட்.14) வெளியாகிறது. இதற்கான முன்பதிவும் நம் நெல்லை மாவட்டத்தில் துவங்கி உள்ளது. தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் கட்டணம் வசூலித்தால் அதற்கான தகுந்த ஆதாரத்துடன் நெல்லை தாசில்தார் (0462-2333169) அல்லது இங்கு <>க்ளிக்<<>> செய்து புகாரளியுங்க. SHARE பண்ணுங்க!

News August 12, 2025

நெல்லை – பாளை தென்னிந்தியாவின் OXFORD!

image

நெல்லை மற்றும் பாளை ஆகிய இரண்டும் தாமிரபரணி ஆற்றால் பிரிக்கப்பட்ட “இரட்டை நகரங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. ஆன்மிக சிறப்புகள் நிறைந்த நெல்லையப்பர் கோயில் திருநெல்வேலியில் உள்ளது. பாளையங்கோட்டை பல்வேறு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களை கொண்டிருப்பதால், “தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு” என்று அழைக்கப்படுகிறது. இரு நகரங்களும் கலாசாரம், ஆன்மிகம், கல்வி என பல துறைகளில் கெத்தாக உள்ளது. SHARE பண்ணுங்க!

News August 12, 2025

நெல்லை மாவட்டத்தில் 8 மாதங்களில் 17 பேர் கொலை

image

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட பகுதியில் மட்டும் இந்த ஆண்டு 8 மாதங்களில் 17 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில் வள்ளியூர் உட்கோட்டத்தில் மட்டும் 6-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. சமீபத்தில் ராதாபுரம் பகுதியில் பிரபுதாஸ் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News August 11, 2025

நெல்லை மாநகரில் 8 மாதங்களில் 11 கொலைகள்

image

நெல்லை மாநகரில் கடந்த 8 மாதங்களில் 11 கொலைகள் நடந்துள்ளன. கே.டி.சி.நகரில் நடந்த கவின் ஆணவக்கொலை மற்றும் நெல்லை டவுனில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. போலீசார் கூறுகையில், பெரும்பாலான கொலைகள் திடீர் மோதல்களால் நிகழ்ந்தவை, முன்விரோதமோ பழிக்குப்பழியோ இல்லை. குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு, கொலைகள் குறைந்துள்ளதாகவும், பல கொலைகள் தடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

News August 11, 2025

நெல்லையில் வயிற்றுவலி தீர்க்கும் வேப்பிலைப் பிரசாதம்

image

கங்கைகொண்டான் அருகே வடக்கு செழியநல்லூரில் சயன வனதுர்கை, வைஷ்ணவி துர்கை அம்பாள் கோயில் உள்ளது. இங்கு மகாலிங்க மரம் மற்றும் வேப்ப மரத்தின் அடியில் கிழக்கு நோக்கி சயன கோலத்தில் 8 கரங்களுடன் பெண் குழந்தையை அணைத்தபடி காட்சிதருகிறாள் துர்கை. இங்குள்ள வேப்ப மரத்தின் இலையை அரைத்து சாறு எடுத்துக் குடித்தால், வயிற்றுவலி பாதிப்புகள் நீங்கும். இங்கு தாழம்பூ குங்குமத்துடன், வேப்பிலை பிரசாதமாக வழங்கப்படுகிறது.

News August 11, 2025

திருநெல்வேலி காங்கிரஸ் எம்பி இன்று திடீர் கைது

image

பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு துணை போகும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து இன்று ஆகஸ்ட் 11 டெல்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி நடத்தினர். இதில், நெல்லை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராபர்ட் புரூஸ் கலந்து கொண்டார். எம்பிக்கள் உடன் அவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டார்.

News August 11, 2025

நெல்லை: உள்ளூரில் வேலை… இன்றே கடைசி நாள்.. Apply

image

நெல்லை மாவட்ட மருத்துவத்துறையில் செவிலியர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்ட 45 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8, 10, 12ம் வகுப்பு, B.Pharm, B.Sc, BDS, D.Pharm, Diploma, DMLT, M.Sc, Nursing படித்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 11 மாத ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் இப்பணிகளுக்கு தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். இன்றே கடைசி நாள் என்பதால் <>க்ளிக்<<>> செய்து உடனே விண்ணப்பியுங்கள்..

News August 11, 2025

நெல்லையில் பள்ளிக்கு விடுமுறை…

image

நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் உள்ள திலகர் வித்யாலயா பள்ளி நிர்வாக குழு தலைவர் ராகவன் மறைவையொட்டி, இன்று (ஆகஸ்ட்-11) மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பள்ளி நிர்வாகம் இன்று வெளியிட்டது. விடுமுறைக்கான நாள் மற்றொரு நாளில் ஈடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!