Tirunelveli

News October 30, 2025

நெல்லை: லஞ்சம் பெற்ற 2 அதிகாரிகளுக்கு சிறை

image

திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த கோமதிநாயகம் 2009ல் வீடு கட்டி மின் இணைப்பிற்கு விண்ணப்பித்தார். உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், வணிக உதவியாளர் உதயகுமார் ரூ.7500 லஞ்சம் கேட்டனர். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர். வழக்கு திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சுப்பையா இருவருக்கும் 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தார்.

News October 30, 2025

நெல்லை மாநகரில் ஒருவர் குண்டாசில் கைது

image

திருநெல்வேலி டவுன் கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வானமாமலை (43). இவர் பண பிரச்சனை காரணமாக பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தி வந்தார். இதையடுத்து துணை போலீஸ் கமிஷனர் பிரசன்ன குமார் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவையடுத்து வானமாமலை இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News October 29, 2025

நெல்லை மாணவியை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்

image

பஹ்ரைனில் நடைபெற்ற 3-வது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற நெல்லையை சேர்ந்த தடகள வீராங்கனை எட்வினா ஜேசனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். மேலும் சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டுக்கு பெருமைச் சேர்த்துள்ள எட்வினா ஜேசனைபாராட்டி மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்து தெரிவித்தார்.

News October 29, 2025

நெல்லை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில் www.tnesevai.tn.gov.in என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 29, 2025

நெல்லை மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

image

நெல்லை மாநகர ஊர்க்காவல் படைக்கு நவம்பர் 22 ஆம் தேதி ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது குறித்து நெல்லை மாநகர கமிஷனர் சந்தோஷ் காதி மணி வெளியிட்ட செய்தி குறிப்பில்; பாலை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வரும் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை ஆண்கள் 60 பேர், பெண்கள் ஐந்து பேர் என 65 பேர் தேர்வு செய்யப்பட உள்ளன என அறிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

News October 29, 2025

திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்: பாபநாசம் அணை 143/64.96%, மணிமுத்தாறு அணை 118/70.72%, சேர்வலாறு அணை 156/57.68%, வடக்கு பச்சையாறு அணை 49.20/ 4.68%, நம்பியார் அணை 22.96/21.21%, கொடுமுடியாறு அணை 52.50/88.25% ஆகா உள்ளது. சில அணைகளில் மட்டும் நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.

News October 29, 2025

நெல்லை: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

image

நெல்லையில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தை வைத்திருப்போருக்கு SHARE பண்ணுங்க

News October 29, 2025

நெல்லையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை பிற்பகல் 4 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கு நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தலைமை தங்குகிறார். இந்த கூட்டத்தில் அனைத்து எரிவாயு நபர் அவர்கள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயனடையலாம். *ஷேர் பண்ணுங்க

News October 29, 2025

நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் வேலை

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள மத்திய கருவிகளுக்கான சர் சி வி ராமன் மையத்தில் 2 தொழில்நுட்ப உதவியாளர்கள், 2 திட்ட உதவியாளர்கள் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். கல்வித்தகுதி மற்றும் விபரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தகுதி உடையவர்கள் சுயக்குறிப்புடன் அக்.29ம் தேதி காலை 10 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நேர்காணலில் பங்கேற்கலாம். SHARE

News October 29, 2025

புயல் காரணமாக நெல்லை ரயில் ரத்து!

image

மோன்தா புயல் காரணமாக இணை ரயில் ரத்து செய்யப்பட்டதால் நெல்லை வழியாக இயக்கப்படும் பெங்களூர் சிட்டி நாகர்கோவில் விரைவு ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது. இதுபோல் நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக பெங்களூருக்கு செல்லும் 30ஆம் தேதி விரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. எனவே இந்நாளில் ரயிலில் பயணம் செய்ய முன் பதிவு செய்தவர்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.*ஷேர்

error: Content is protected !!