India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாங்குனேரியைச் சேர்ந்த சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சின்னதுரை Grindr ஆப் மூலம் பழகிய மர்ம நபர்கள் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்திற்கு இன்று வரவழைத்து அவரிடம் இருந்து செல்போனை பறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு சின்னத்துரையை பள்ளி வளாகத்தில் மாணவர்கள் தாக்கியது தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில்,தற்போது மீண்டும் தாக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஏப்.16] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பொன் ரகு இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
நெல்லை பெருமாள்புரம் சிதம்பர நகரில் உள்ள மாவட்ட தொழில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை 17ஆம் தேதி வியாழன் காலை 10:30 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கல்வி சான்றிதழ் ஆதார் அட்டை மற்றும் தங்களது சுய விவரங்களை வந்து பங்கேற்கலாம். மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார். *மறக்காம ஷேர் பண்ணுங்க
நெல்லை அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க பேருந்தில் டிஜிட்டல் முறையில் பணமில்லா பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறும் முறை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் டெபிட் கார்டை பயன்படுத்தி கியூ.ஆர் கோடு ஸ்கேன் செய்தோ ( G-PAY, PHONE PAY) போன்ற பரிவர்த்தனை செய்தோ பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறலாம் என கூறியுள்ளனர். SHARE!
நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று (ஏப்ரல்15) விடுத்துள்ள செய்திக்குறிப்பில்: அடுத்து வரும் நாட்களில் கோடை வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே அதற்கு ஏற்ப பொதுமக்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களை வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அதிகளவு தண்ணீர் பருக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பெயர் விவரம் மாவட்ட காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது கைபேசி எண் விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படும் நபர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
நெல்லை பயணிகள் கவனிக்க; கோடை விடுமுறையையொட்டி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே குறிப்பில் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் சேவை மே 11 முதல் ஜூன் 1 வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் நாகர்கோவில் – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் மே 11 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரையும், திருவனந்தபுரம் – தாம்பரம் ரயில் மே 11 முதல் ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளிலும் இனி மாணவர்களின் பைகளை சோதனை செய்ய நெல்லை மாவட்ட முதன்மை கல்வி துறை இன்று (ஏப்.15) உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் மாணவர் மற்றும் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில் ஏற்கனவே அரசு பள்ளிகளில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் இனி தனியார் பள்ளிகளிலும் சோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
நெல்லை பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் கிருஷ்ணகுமார் இன்று வெளியிட்ட செய்தியில், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் நோக்கில் ஏப்ரல்.1 முதல் ஏப்ரல் 30 வரை “வாடிக்கையாளர் சேவை மாதம்” எனும் நிகழ்வை தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம் சங்கரன்கோயில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 17.4.2025 அன்றுநடைபெறும். புதிய FTTH இணைப்பு சிம் கார்டுகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்யலாம் என கூறியுள்ளார்.*ஷேர்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மன்னார்புரம் விலக்கு பகுதியில் 3 வயது மதிக்கத்தக்க சிறுமி ஜெசிக்கா பாதுகாப்பற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த குழந்தைக்கு உரிமை கோர விரும்புவோர் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் 30 நாட்களுக்குள் அணுக வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.