India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை கப்பலில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது விஷவாயு தாக்கி ராஜஸ்தானை சேர்ந்த சந்திப் குமார், தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயலை சேர்ந்த ஜெனிசன் தாமஸ், நெல்லை மாவட்டம் உவரி பகுதியைச் சேர்ந்த சிரோன் ஜார்ஜ் ஆகிய 3 பேர் விஷவாயு தாக்கி மூச்சு திணறி உயிரிழந்தனர். உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
தசரா பண்டிகை தீபாவளி முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 26 மற்றும் அக்.3, 10, 17, 24 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12:30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். மறு மார்க்கத்தில் நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் செப்டம்பர் 25 அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயிலுக்கு இன்று முதல் முன்பதிவு தொடங்கியது.
பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி பல்வேறு கட்சிகள் சார்பில் காலை 9 மணி முதல் நடைபெறுகிறது.
காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுகுமார் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருநெல்வேலி சந்திப்பு சாலை குமரன் கோயிலில் இரவு 7:00 மணிக்கு மண்டல பூஜை நடக்கிறது.
நெல்லை மக்களே; 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11.10.2025 அன்று நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in இணையத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்பிக்கலாம். (தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்) *ஷேர்
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் அம்பாசமுத்திரம் வேலுச்சாமி திருமண மண்டபத்தில் வைத்து இன்று(செப்.17) காலை 11 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் ஆதார் பெயர் மாற்றம், திருத்தம், போன் நம்பர் இணைப்பு போன்ற சேவைகளை இதில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்றிரவு பாண்டிதுரை(29) என்பவர் 4வது நடைமேடையில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது வட மாநில வாலிபர் ஒருவர் இரும்பு கம்பியால் பாண்டித்துரையை தாக்கினார். தொடர்ந்து அந்த வாலிபர் அங்கு நின்று கொண்டிருந்த மேலும் 2 பேரை கம்பியால் தாக்கி விட்டு தப்பிச் சென்றார். 3 பேரை போலீசார் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பிய ஓடிய வடமாநில நபரை போலீஸ் தேடுகிறது.
நெல்லை மாவட்டத்தில் துணை தாசில்தார் நிலையில் உள்ள 11 பேரை இடமாற்றம் செய்து கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் புவனேஸ்வரி கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், நெல்லை டவுன் தண்ணி தாசில்தார் ரேகலா கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், நெல்லை கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் அனந்தபத்ரா தலைமை உதவியாளராகவும் மாற்றம்.
நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாதாந்திர தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு சிதம்பர நகரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முகாம் தொடங்கும். விருப்பமுள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி விளையாட்டு மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
தேசிய மேம்பாட்டு நிறுவனம் மூலம் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி செப். 21, 26-28 ஆகிய 4 நாட்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நெல்லை ஸ்ரீபுரம் ரோகிணி கோல்ட் அகாடமியில் நடக்கிறது. தகுதி தேவையில்லை. பயிற்சி முடித்தவர்களுக்கு இந்திய அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். கட்டணம் ரூ.8,200. விவரங்களுக்கு www.rohinigoldacademy.com இல் தொடர்பு கொள்ளவும்.
Sorry, no posts matched your criteria.