Tirunelveli

News November 8, 2025

பொங்கல் – திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

image

திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் வருவதால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் படி சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திருநெல்வேலிக்கு வருவதால் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இதற்கான முன்பதிவு 11ம் தேதி முதல் காலை 8 மணிக்கு துவங்குகிறது. *SHARE

News November 8, 2025

நெல்லை: காவல் ஆணையர்கள் இருவருக்கு பதவி உயர்வு

image

நெல்லை மாநகர காவல் அலுவலக நிர்வாக அலுவலர் அற்புதராஜ் முதுநிலை நிர்வாக அலுவலர் பதவி உயர்வு பெற்று சேலம் சரக டிஐஜி அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இதேபோல் தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணிய பெருமாள், கோயம்புத்தூர் சரக டிஐஜி அலுவலகத்திற்கு முதுநிலை நிர்வாக அலுவலராக மாற்றம் செய்யபட்டார்.

News November 8, 2025

நெல்லை : EXAM இல்லாமல் வங்கி வேலை – APPLY NOW!

image

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 8, 2025

நெல்லை: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 8, 2025

நெல்லை: 5.66 லட்சம் SIR படிவம் விநியோகம்

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4ம் தேதி தொடங்கியது. மாவட்ட முழுவதும் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 1490 வாக்குச்சாடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக சென்று அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வழங்கி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 66 ஆயிரம் பேர்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யபட்டதாக ஆட்சியர் சுகுமார் தெரிவித்தார்.

News November 8, 2025

நெல்லையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கான முகாம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை (நவ.08) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற பல்வேறு சேவைகளை இந்த குறைதீர் கூட்டத்தில் விண்ணப்பம் அளித்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News November 8, 2025

நெல்லை: போஸ்டர் ஒட்டியதற்கு கொலை; கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

நெல்லை கொங்கன்தாம்பாறை சமுதாய நலக்கூடம் அருகே கண்ணீர் அஞ்சலி வால் போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் இசக்கி பாண்டி(23) என்பவர் 2013ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கபட்டது. பச்சாண்டி(39), இன்பராஜ்(39), முத்துக்குமார்(37) ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.1500 அபராதமும் விதித்து நெல்லை மாவட்ட 3 வது கூடுதல் அமர்வு நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

News November 8, 2025

நெல்லையில் ரூ.69 கோடியில் பிரம்மாண்ட நூலகம்

image

நெல்லையில் ரூ.69 கோடியில் காயிதே மில்லத் பெயரில் பிரம்மாண்ட நூலகம் அமைக்க திட்டமிடப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் ஐகிரவுண்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள இடத்தை அமைச்சர்கள், அதிகாரிகள் இதற்கு தேர்வு செய்தனர். இப்போது நூலகம் அமைக்க அரசு டெண்டர் விடுத்துள்ளது. அதில் 2 அடுக்கு கட்டடத்தில் படிப்பகம், மினி திரையரங்கம் மாற்றுத்திறனாளிகளுக்கு அறை, ஆய்வரங்கம் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளது.

News November 7, 2025

மாநகர இரவு காவல் சேவை அதிகாரிகள் எண்கள்

image

திருநெல்வேலி மாநகர பகுதியில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் உதவி சேவை பணிக்கான அதிகாரிகளை விவரங்களை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவுபடி மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களது கைபேசி எண் விபரங்களும் தரப்பட்டுள்ளன. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை இரவு தொடர்பு கொள்ளலாம்.

News November 7, 2025

முதன்மை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

image

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழி காட்டும் மையம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு இன்று முதல் நடைபெறுகிறது. குரூப் 2-வில் 50 காலிபணியிடமும். குரூப் 2ஏ-வில் 595 காலிபணியிடமும் அறிவிக்கப்பட்டுள்ளன. வாரந்தோறும் மாதிரி தேர்வும், மாநில அளவிலான முழுமாதிரி தேர்வுகளும் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் கூறினார்.

error: Content is protected !!