Tiruchirappalli

News April 24, 2025

திருச்சி: ஐ.ஐ.எம்-இல் நூலக பயிற்றுநர் பணி

image

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மையியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்) நூலக பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்ற 28 வயது பூர்த்தியடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.23,000 வழங்கப்படும். இங்கு <>க்ளிக் <<>>செய்து வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஐஐஎம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. (SHARE பண்ணுங்க)

News April 24, 2025

அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

image

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 24, 2025

இரு தரப்பினர் இடையே மோதல் -ஒருவர் கொலை

image

திருச்சி தேவதானம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மாலை இருதரப்பினர் இடையே முன்விரோதம் காரணமாக, தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் 2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இந்த தாக்குதலில் தாராநல்லூரைச் சேர்ந்த கருக்குவேல் என்பவர் உயிரிழந்துள்ளார் . இதுகுறித்து திருச்சி கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 23, 2025

திருச்சி: ஐ.ஐ.எம்-இல் நூலக பயிற்றுநர் பணி

image

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மையியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்) நூலக பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்ற 28 வயது பூர்த்தியடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.23,000 வழங்கப்படும். www.iimtrichy.ac.in என்ற இணையதளத்தில் வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஐ.ஐ.எம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 23, 2025

திருச்சி – தாம்பரம் இடையே கோடை விடுமுறை சிறப்பு ரயில் இயக்கம்

image

கோடை விடுமுறையை ஒட்டி தாம்பரம் – திருச்சி இடையே ஏப்-29ம் தேதி முதல் ஜூன் 29-ம் தேதி வரை இரு மார்க்கத்திலும் வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து காலை 5:35 க்கு புறப்படும் ரயில் மதியம் 12:30 க்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்திலிருந்து மதியம் 3:45 க்கு புறப்படும் ரயில் இரவு 10:40 க்கு திருச்சி வந்தடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 23, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட திட்ட அலகில் முன்னேற்றத்தை நாடும் வட்டார திட்டத்தின் கீழ், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான ஒரு காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.55,000 வழங்கப்படும். விண்ணப்பங்களை மே.15-ம் தேதிக்குள் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டுமென திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE IT

News April 23, 2025

பாலக்காடு – திருச்சி ரயில்கள் ரத்து

image

பராமரிப்பு பணிகள் காரணமாக பாலக்காடு – திருச்சி விரைவு ரயில் வரும் 24,26,29 ஆகிய தேதிகளில் திருச்சி – கரூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது பாலக்காடு – கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல திருச்சி – பாலக்காடு விரைவு ரயிலானது வரும் 25ஆம் தேதி பாலக்காடு திருப்பூர் இடையே ரத்து செய்யப்பட்டு திருச்சி – திருப்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 23, 2025

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த திருச்சி எம்.எல்.ஏ

image

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் தமிழ்நாடு அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிறிஸ்தவ மக்களின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் தெரிவித்துள்ளார்.

News April 23, 2025

திருச்சி: நவீன எரிவாயு தகன மையம் மூடல்

image

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் 4-வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் இயங்கி வரும் நவீன எரிவாயு தகன மையம் நாளை (24.04.24) முதல் மே.3-ம் தேதி வரை 10 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது. தகன மேடைகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்யும் பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக 10 நாட்களுக்கு உடல்களை எரியூட்ட இயலாது என மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News April 23, 2025

திருச்சி அங்கன்வாடி பணியாளராக கடைசி வாய்ப்பு

image

ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையத்தில் 17 அங்கன்வாடி பணியாளர்கள், 17 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 262 அங்கன்வாடி உதவியாளர்கள் இடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது. இதற்கு, அதிகாரபூர்வர் <>இணையத்தில்<<>> விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.24) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!