Tiruchirappalli

News January 15, 2025

திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்

image

திருவள்ளுவர் தினத்தையொட்டி திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள அய்யனின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தி, குறள் வாசித்தார். அப்போது மாநகரச் செயலாளர் மு. மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் பாபு உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

News January 14, 2025

திருச்சியில் மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறு: ஒருவர் கொலை

image

இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடையில் மது பிரியர்கள் குவிந்தனர். மேலும் நாளை திருவள்ளூர் தினம் என்பதால் டாஸ்மாக் கடைக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டிருப்பதால் கூடுதலாக கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சேதுராமன் பிள்ளை காலனி அருகே மேம்பாலம் அருகே  உள்ள மதுபான கடையில் மது வாங்குவதில் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

News January 13, 2025

திருச்சி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று பொது மக்களுக்கு பாலியல் தொடர்பான பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்க சேவை மையத்தை இன்று மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் திறந்து வைத்தார். இதன் மூலம் பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை 89391 – 46100 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்கலாம். இந்த நிகழ்வில் தனிப்பிரிவு காவல் கட்டுப்பாட்டு ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 13, 2025

ஸ்ரீரங்கம் கோவிலில் மார்கழி 29ஆம் நாள் நிகழ்வுகள்

image

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் ஒவ்வொரு திருக்கோலத்தில் ஆண்டாள் நாச்சியார் உற்சவர் எழுந்தருளி வந்த நிலையில் இன்று 29வது நாள் நிகழ்வுகள் நடைபெற்றது. இதனை ஒட்டி இன்று பரமபத நாதர் சன்னதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், உற்சவர் பெற்றம் மேய்த்துண்ணும் பெருமான் திருக்கோலத்தில் காட்சியளித்தனர். இதனைக் காண திரளான பக்தர்கள் வருகை தந்தனர்..

News January 13, 2025

தொட்டியம்: டூவீலர் மீது வேன் மோதி ஒருவர் பலி

image

தொட்டியம், திருச்சி-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஜன.12) டூவீலரில் சென்ற கொண்டிருந்த செல்வராஜ் என்பவர் மீது நாமக்கல் நோக்கிச் சென்ற வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வேன்  ஓட்டுநர் மாரிமுத்து என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

News January 13, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு, தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கு <>www.tahdco.com<<>> என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்துகொள்ளலாம். மேலும் தகவலுக்கு திருச்சி தாட்கோ மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 12, 2025

திருச்சி: பி.எஸ்.என்.எல் ஆலோசனை குழுவின் முதல் கூட்டம்

image

திருச்சி வணிக பகுதியின் தலைமை அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல் ஆலோசனை குழுவின் முதல் கூட்டம் திருச்சி எம்.பி துரை வைகோ தலைமையில் நடைபெற்றது. இதில் கரூர் எம்.பி எஸ்.ஜோதிமணி, பெரம்பலூர் எம்.பி கே.என்.அருண் நேரு புறநகர் தெற்கு மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு பி.எஸ்.என்.எல் நெட்வொர்க் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

News January 12, 2025

முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடக்க உள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழா குறித்த முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 12, 2025

இரண்டாவது நாளாக நடைபெற்ற கபடி போட்டிகள்

image

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் திண்டுக்கல் மாரியம்மன் கோவில் திடலில் நேற்று கபடி போட்டிகள் தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் போட்டிகள் நடைபெற்றன. அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறியவர்கள் இந்த போட்டிகளில் கலந்துகொண்டு விறுவிறுப்பாக விளையாடினர். பின்னர் இதில் தகுதி பெறுபவர்கள் அடுத்த சுற்று செல்வார்கள். மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News January 12, 2025

மணப்பாறை விபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு

image

மணப்பாறை அடுத்த செவலூர் செல்லும் சாலையில் கடந்த 9ஆம் தேதி அவ்வழியே சென்ற டூரிஸ்ட் வாகனம் அதே வழியில் வந்த இருவர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!