India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான, சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, நாளை 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கியும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 17.01.25ஆம் தேதி அரசு விடுமுறை நாளாகவும், இந்த விடுமுறையை ஈடு செய்ய 25.01.25ஆம் தேதி பணி நாளாகவும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
மணப்பாறை ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் கடன் தொல்லையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இன்று அதிகாலை அவரது வீட்டின் பூஜை அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடன் தொல்லையால் மூன்று குழந்தைகளின் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி நரசிம்மன் தெருவைச் சேர்ந்தவர் பெலிக்ஸ் ரிமண்ட். இவரது மகன் ஆலன் ரெனிஸ். உறையூரில் உள்ள ஒரு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஜன.5 சிக்கன் குழம்பு சாப்பிட்டுள்ளார். அதையடுத்து அவருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பெற்ற சிறுவன் நேற்று (ஜன8) உயிரிழந்தார். இதுகுறித்து காந்திமார்கெட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில், தனித்திறமைகளை கொண்டு, பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில், திருநங்கையர் தினம் அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15 தினத்தன்று திருநங்கைகளுக்கான ‘முன் மாதிரி விருது’ வழங்கப்படவுள்ளது. இதற்கு<
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் இன்று எண்ணப்பட்டன. அதன்படி ரொக்கம் ரூ.1,21,20,970, தங்கம் 1 கிலோ 40 கிராம், வெள்ளி 6 கிலோ 625 கிராம், அயல்நாட்டு நோட்டுக்ள் 241, அயல்நாட்டு நாணயங்கள் 361 ஆகியன பெறப்பட்டு கோயில் கணக்கில் வர வைக்கப்பட்டன. இதில் அறங்காவலர் குழுத்தலைவர் இளங்கோவன், இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய விமானப் படையினரால் நடத்தப்பட உள்ள அக்னிவீரவாயு தேர்வில் கலந்து கொள்வதற்கு ஜன.7 முதல் ஜன.27 வரை இணையவழி மூலமாக பதிவு செய்யலாம். 22.03.2025 முதல் இத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு உதவும் வகையில், தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என திருச்சி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டியைச் சேர்ந்த நாச்சரம்மாள் என்ற மூதாட்டி அப்பகுதியில் உள்ள பாறைக்கு இன்று குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற மணப்பாறை போலீசார் மூதாட்டி இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக க.ஜோஷி நிர்மல்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் கூறுகையில், மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் தமிழக முதல்வர் ஆணைக்கேற்ப, போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்திட அதிக முக்கியத்துவம் தரப்படும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். SHAREIT
கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தூர், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் மது குடித்தவாறு சென்று மதுபாட்டிலை சாலையில் வீசிச்சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டு அவரது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வாகனத்தில் மது குடித்துவிட்டு செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி செல்வ நாகரத்தினம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தூர், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் மது குடித்தவாறு சென்று மதுபாட்டிலை சாலையில் வீசிச்சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டு அவரது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வாகனத்தில் மது குடித்துவிட்டு செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி செல்வ நாகரத்தினம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.