India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் 157 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் மினிப் பேருந்துகளை இயக்க விரும்புபவர்கள் நடைமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம். ஒரு வழித்தடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் பெறப்படும் பட்சத்தில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதுதொடர்பான சந்தேகங்களுக்கு, சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.
திருச்சி உப்பிலிபுரம் பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் மூலம் பயணம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 35 பேருந்துகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் நடத்துனரிடம் உள்ள இயந்திரம் மூலம் ஏடிஎம் கார்டு அல்லது செல்போன் மூலம் ஸ்கேன் செய்து பணத்தை செலுத்தி டிக்கெட் பெற்று பயணம் செய்யலாம்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திருச்சியில் மட்டும் 61 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி உதவி தொகை (என்எம்எம்எஸ்) மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு திருச்சியில் நடந்தது. திருச்சி மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 8,216 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 8,078 மாணவ, மாணவிகள் நேற்று தேர்வுஎழுதினர். 138 பேர் தேர்வு எழுத வரவில்லை.
மு. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாளை பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு விழா மற்றும் மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது
MGR. இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் ராஜ்மோகன் ஏற்பாட்டில் நடைபெறுவதால் அது சமயம் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புஉதவி உதவி தொகை (என்எம்எம்எஸ்)மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புஉதவித்தொகை தேர்வு திருச்சியில் நேற்று நடந்தது. திருச்சிமாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 8,216 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 8,078 மாணவ, மாணவிகள் நேற்று தேர்வுஎழுதினர். 138 பேர் தேர்வு எழுத வரவில்லை.
2023ஆம் ஆண்டில் நாட்டில்பதிவு செய்யப்பட்ட தங்க கடத்தல் வழக்குகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களாகும். அந்த வகையில், 2024ஆம் ஆண்டு அதிக தங்கம், எலக்ட்ரானிக் உள்ளிட்டவை கடத்தி வரப்பட்டதாக தமிழகத்தில் திருச்சி விமான நிலையம் அதிக வழக்குகளை பதிவு செய்து முதல் இடத்தில் உள்ளது.
வாகன ஓட்டிகளின் நலன் கருதி திருச்சி போக்குவரத்து காவல்துறை நேற்று விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஐஎஸ்ஐ ஹெல்மெட் அணிதல், போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை விதிகளை மீறுவோர் மீது 8939146100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
திருச்சி தென்னூரில் மீர் ஹசனுல்லா ஷா தர்காவிற்கு சொந்தமான வக்ஃபு நிலத்தைப் பூங்கா அமைப்பதாக கூறி வக்ஃபு தீர்ப்பாய உத்தரவை மீறி திருச்சி மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பது கண்டனத்துக்குரியது. தர்கா இடத்தை மாநகராட்சி மூலம் அபகரிக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தை தர்கா நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.
கீழப்பளுவஞ்சியை சேர்ந்த வெள்ளையம்மாள். இவர் இதே பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்டவர்களுடன் இன்று மாலை அணிந்து சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற போது பஞ்சப்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வெள்ளையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிந்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.