Tiruchirappalli

News January 22, 2025

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்

image

துபாயிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று (ஜன.22) இரவு திருச்சி வந்தது. இதில், வந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, ஆண் பயணி ஒருவரின் ஆடையின் உள்பகுதிகளில் பழுப்பு, மஞ்சள் நிற பேஸ்ட் வடிவில் 325 கிராம் தங்கத்தை 2 சிறிய கட்டிகளாக கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 22, 2025

இருதரப்பு மோதல் 6 பேர் கைது

image

ஸ்ரீரங்கம் அருகே காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, அன்று நள்ளிரவு அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நடமாடினர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. சிலர் காயமடைந்தனர். கதிரவன் (19) அளித்த புகாரின் பேரில் தமிழரசன், பிரசன்னா, கமலகண்ணன், கார்த்திக் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

News January 22, 2025

சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு

image

திருச்சி சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புகளை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் அறிவித்துள்ளார். இது தற்காலிகமாக 11 மாதங்கள் ஒப்பந்த பணியிடங்கள் ஆகும். இப்பணியிடங்கள் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் tiruchirappalli.nic.inஎன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யாலம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE IT

News January 21, 2025

சமயபுரம் கோவிலில் உண்டியல் காணிக்கைகள் விவரம்

image

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகளில் ரூ.66,39,618 ரூபாய் ரொக்கமும்,1 கிலோ 580 தங்கமும், 2 கிலோ 440 வெள்ளியும், 706 அயல் நாட்டு பணம்,116 அயல் நாட்டு நாணயங்களும், உபகோவில்களான ஆதிமாரியம்மன் கோவில் உண்டியல்கள் மூலம் ரூ.2,43, 747. ரொக்கமும், உஜ்ஜயினி ஓம்காளி அம்மன் கோவில் மூலம் 13,600 ரொக்கமும், போஜீஸ்வரர் கோவில் மூலம் .5,914 ரொக்கமும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.

News January 21, 2025

விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

திருச்சி ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு ஒருவர் என 38 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் “நீர்நிலை பாதுகாவலர் விருது”, ரூ.1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் 31.1.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் awards.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். SHARE IT 

News January 21, 2025

திருச்சியில் சீமான் ஆஜராக உத்தரவு

image

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்த நிலையில், அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி பாலாஜி முன்பு இன்று நடைபெற்றது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் சீமான் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். COMMENT & SHARE IT

News January 21, 2025

திருச்சியில் 1,400 கிலோ அரிசி பறிமுதல்

image

அரியமங்கலம் பகுதியில் நேற்று குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுதுறை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி, தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்ததில், அவர் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி வந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1,400 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர்.

News January 21, 2025

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகை

image

சிவகங்கையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். எனவே பாதுகாப்பு கருதி இன்று அவர் செல்லும் சாலையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முழுவதும் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். விதியை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News January 20, 2025

திருச்சியில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்

image

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்த நிலையில், சொந்த ஊருக்கு சென்று இருந்த மக்கள் பணி, கல்வி உள்ளிட்ட காரணங்களால் தங்கி உள்ள ஊர்களுக்கு புறப்பட்டனர். அதன்படி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் இன்று அதிகமாகவே காணப்பட்டது. இது மட்டுமல்லாமல் திருச்சி விமான நிலையத்திலும் நேற்று இரவு முதல் தற்பொழுது வரை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

News January 20, 2025

கத்தியை காட்டி பணம் பறிக்க முயற்சி: தர்ம அடி கொடுத்த மக்கள்

image

திருச்சி பெரிய கடைவீதி அருகே உள்ள பெரிய சௌராஷ்ட்ரா தெருவில் நேற்று இரவு தள்ளு வண்டியில்,வாழைப்பழம் விற்பனை செய்யும் வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க 2 வாலிபர்கள் முயன்றனர். அப்போது,அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பிறகு கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் வாலிபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!