India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி பாலக்கரை போலீசார் நேற்று முதலியார் சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் 4 பேர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது. உடனே போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.3,75,000 மதிப்புள்ள 12,500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கையை முற்றிலுமாக தடுக்க தனிப்படைகள் உருவாக்கி சிறப்பு தீவிர வேட்டை மேற்கொண்டதில் முதற்கட்டமாக குற்றவாளிகளின் குற்ற செயல்களை கண்டறிந்து திருச்சி மாவட்டத்தில் 43வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட எஸ்.பி செ.செல்வநாகரத்தினம் நேற்று தகவல் தெரிவித்தார்.
TAHDCO சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் ( JEE Mains) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. உணவு, தங்குமிடம் மற்றும் 11 மாதங்கள் பயிற்சிக்கான செலவை CPCL ஏற்கும் . இப்பயிற்சிக்கு www.tahdco.com இணையத்தில் பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.
திருச்சி காவல்துறை பணியிடைப் பயிற்சி மையத்தில் நேற்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் காவல் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு துணை காவல் கண்காணிப்பாளர் சுதர்சன் தலைமை தாங்கினார். இந்த பயிற்சியில் நூற்றுக்கணக்கான திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ரயில்வே காவலர்களும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோஈலில் ஆதிப்ரஹ்மோத்சவம் என்று அழைக்கப்பட்டு பங்குனி திருவிழா வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி நம்பெருமாள் தினம்தோறும் பல்வேறு வாகனங்களில் புறப்பாடாகி சேவை செய்ய உள்ளார். 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் இறுதி நாளில் நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைவார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டு மனைப் பட்டா, பட்டா மாற்றுதல், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, வேலைவாய்ப்பு உரிமைத் தொகை, புகார் தொடர்பான மனுக்கள், இதர மனுக்கள் தொடர்பாக மக்களிடமிருந்து 664 மனுக்கள் பெறப்பட்டன.
மன்னார்புரம் அருகே நேற்று பாஜக சார்பில் நடந்த பொது கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிக்கொண்டிருந்தபோது தொண்டர்கள் கலைந்து சென்றதை தனியார் பத்திரிக்கையின் புகைப்பட கலைஞர் படம் பிடித்ததால் அவரையும், தொலைக்காட்சி ஒன்றின் நிருபரையும் அங்கிருந்த பாஜகவினர் தாக்கினர். இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்ட பாஜக.வினர் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எம்பி துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
வரும் 30ஆம் தேதியிலிருந்து திருச்சி – மும்பைக்கு ஏர் இந்தியா விமான சேவை தொடங்குகிறது. திருச்சி எம்.பி துறை வைகோ, டெல்லியில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகத்துக்குச் சென்று, உயர் அதிகாரிகளைச் சந்தித்து, திருச்சியிலிருந்து உள்நாட்டு விமானச் சேவைக்கான அவசியம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விமானச் சேவையைத் தொடங்கியுள்ளது.
துறையூர் பகுதி கோட்டத்தூரில் அண்ணா நகர் கிராமத்தில் வனத்தாயி ராமர் என்பவர் நேற்று காலை இயற்கை எய்தினார். இவருக்கு 109 வயது. இவர், இந்தப் பகுதியில் நான்கு தலைமுறைகளை கண்டு பெருமையாக வாழ்ந்தவர். இவருக்கு இந்த பகுதியில் இருக்கும் அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நம்ம திருச்சி மாவட்டத்தில் 109 வயது வரை வாழ்ந்த பாட்டி செய்தியை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஒரு பயணியின் உடைமையில் 5 கோடி மதிப்பிலான ஐந்து கிலோ ஹைட்ரோபோனிக் போதை பொருள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து போதை பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.