India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் நேற்று 09.02.2025 திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் பயணி ஒருவர் தனது உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் பேண்டில் மறைத்து ரூ.42,81,498 மதிப்பிலான 494 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது:ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக வாக்குகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்தது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் வாங்கிய அனைத்து வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்காக மக்கள் அளித்த வாக்குகள்.ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என எல்லா கட்சிகளுமே தேர்தல்களில் வைப்புத் தொகையை இழந்துள்ளார்கள் என்றார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேலவாளாடி கணக்குபிள்ளை பண்ணையில்12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நன்னீர் மீன் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடைபெறுகிறது. இதில் திருச்சி, கரூர் மாவட்டத்திலிருந்து ஊரக இளைஞர்கள், மகளிர்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகள் போன்றோர் தங்களின் ஆதார் அட்டை, வங்கி புத்தக நகலுடன் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 11ஆம் தேதியான நாளை, மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கத்தில் சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடப்பதை முன்னிட்டு நாளை (பிப்.11) மாலை 3 மணிக்கு சமயபுரம் கோயில் நடை அடைக்கப்பட்டு, நாளை மறுநாள் (பிப்.12) காலை வழக்கம் போல் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும் என மாரியம்மன் கோயில் நிர்வாக தரப்பில் தெரிவித்துள்ளனர்.
திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் வசித்து வந்தவர் லட்சுமி (33) ரயில்வே ஊழியர். இவர் இன்று வீட்டில் உள்ள தண்ணீர் மோட்டார் சுவிட்ச் ஆன் செய்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
திருச்சி குடமுருட்டி பாலம் அருகே பறவைகள் பூங்கா இன்று திறக்கப்பட்டது. இதனை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அவர் சென்ற சில மணி நேரங்களிலேயே பறவைகள் பூங்கா மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஆர்வமாக வந்தவர்கள் சோகமாக திரும்பிச் சென்றனர். காலை 9 மணி முதல் ஆறு மணி வரை அனுமதி நேரம் என்பதால், 5 மணி ஆகிவிட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வேலூர் சம்பவத்தை தொடர்ந்து ரயில் பயணிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் விதமாகவும் பெண்கள் பயணம் செய்யும் பெட்டியில் பெண் காவலர்களை ரோந்துக்கு அனுப்பியும் திருச்சி இருப்புப் பாதை காவல் உட்கோட்டம் கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலைய நடைமேடைகளில் ரோந்து மேற்கொண்டு ரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில், தை மாதத்தில் திருத்தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான தைத்தேர் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான நாளை காலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து “ரங்கா ரங்கா”என கோஷமிட்டு நம் பெருமாலை வணங்கி செல்வர்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற குரூப்-2 முதன்மைத் தேர்வை 1459 பேர் எழுதியுள்ளனர். 3 மையங்களில் நடைபெற்ற தேர்வை காலையில் 740 பேரும், பிற்பகலில் 719 பேரும் எழுதினா். தோ்வு பணிகளுக்கென 3 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். இத்தேர்வை துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படையினர் கண்காணித்தனர்.
திருச்சி ரயில் நிலைய நடைமேடை எண் 5யில் சிறப்பு சார்பு ஆய்வாளர் சுப்பிரமணியன் கண்காணித்து கொண்டிருந்த போது நடைமேடையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஹஃபிஜில் காசி என்ற வாலிபர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களான – 18 கிலோ (107 பாக்கெட்) கடத்தி கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. கைது செய்து – 2500 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.