India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மண்ணச்சநல்லூர் உத்தமர் கோயிலுக்கு சென்று வழிபட்டால், கல்வி, ஞானம் மற்றும் செல்வம் பெருகும் என்றும், மும்மூர்த்திகளும் தேவியர்களோடு அருள்வதால் இங்கு வழிபட்டால் குடும்ப ஒற்றுமை மேலோங்கி சகல தோஷங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது. மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருவதே இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இதனை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்!
திருச்சி கருமண்டபம் பகுதியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் தேவையான சஹர் உணவுகள், நோன்பு கஞ்சி, பழங்கள் மற்றும் குளிர் பானங்களை விநியோகிக்கும் விதமாக திருச்சியைச் சேர்ந்த ஆஷிக் ரகுமான் தலைமையிலான ரோபாட்டிக்ஸ் வடிவமைப்பாளர் குழுவினரால் உருவாக்கப்பட்ட நவீன ரோபோ மூலமாக குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்பட்டது. இது அங்கிருந்த மக்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. SHARE NOW!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் திருச்சி, வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று முதல் 31-ஆம் தேதி வரை 39 டிகிரி சென்டிகிரேடு முதல் 41 டிகிரி சென்டிகிரேடு வரை வெயிலின் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி பகல் வேளையில் வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொடுக்கும் பயிற்சி வரும் 01.04.25 முதல் 08.06.25 வரை ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான கட்டணம் ₹.1,500 + ஜி.எஸ்.டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அண்ணா விளையாட்டு அரங்கில் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மணப்பாறை ராக்கம்பட்டி கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சண்முகசுந்தரம் என்கிற கோபால் என்பவர் மீது மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.இந்நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை,திருச்சி கோர்ட்டில் நடைபெற்றது.இதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.15,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்
தமிழகத்தின் 4-ஆவது பெரிய நகரமாக விளங்கும் திருச்சியை தலைமையகமாக கொண்ட திருச்சிராப்பள்ளி மாவட்டம் வரலாறு, கலாச்சாரம், ஆன்மீகம், தொழில் என பல்வேறு வகைகளில் தமிழகத்தின் மிக முக்கிய மாவட்டமாக விளங்குகிறது. சுமார் 31 லட்சம் மக்கள் தொகை கொண்ட திருச்சி மாவட்டத்தில், ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகமாகும். மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு விகிதம் 85 சதவீதமாக உள்ளது. SHARE NOW!
‘பெல்’ நிறுவனத்தில் உதவி பொறியாளர் பிரிவில் மெக்கானிக்கல் 12, எலக்ட்ரானிக்ஸ் 8 என மொத்தம் 20 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பி.இ., / பி.டெக்., முடித்த 18-28 வயதுடையவர்கள் <
துவரங்குறிச்சியை அடுத்த லிங்கம்பட்டி அருகே உள்ள கிளாமரத்துக்குட்டு எனும் மலைப்பகுதியில் நேற்று இரவு சுமார் 11:30 மணி அளவில் தீப்பற்றி எரிய தொடங்கி, சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக மலையில் காய்ந்த சருகு, லெமன் வகை புற்கள் தீப்பிடித்து எறிந்தன. இத்தகைய நிலையில் இப்பகுதியில் அடிக்கடி தீப்பற்றி எரிவதாகவும், ஆகையால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாளாடி மற்றும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (மார்ச் 26) ஸ்ரீரங்கம் கீழவாசல் ரோட்டிலுள்ள ரயில்வே லெவல் கிராசிங் கேட்டில் பராமரிப்பு பணி மற்றும் சாலையில் வேகத்தடை அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் அங்குள்ள ரயில்வே கேட் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும். ஆகவே பொதுமக்கள் யாத்ரிநிவாஸ் அருகேயுள்ள சுரங்கப்பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்ங்க.
திருச்சி, வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், மார்ச் 26 முதல் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை, Madras Engineering Group & Centre பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. எனவே இப்பகுதியில் கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டத்தை தவிர்க்குமாறு ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். SHARE செய்யவும்..
Sorry, no posts matched your criteria.