Tiruchirappalli

News February 18, 2025

திருச்சி அருகே வரதட்சனை கொடுமை: கணவருக்கு 7 ஆண்டு சிறை

image

திருச்சி இ.பி.காலனியை சோ்ந்த சங்கா்-கோமதி தம்பதி இடையே வரதட்சனை தொடர்பாக கடந்த 1.11.20 ஆம் ஆண்டு ஏற்பட்ட சண்டையில், சங்கர் தாக்கியதில் கோமதி கோமா நிலைக்கு சென்றார். இந்த வழக்கில் திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மீனாசந்திரா நேற்று தீர்ப்பளித்தார். அதில், சங்கருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும், கோமதிக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

News February 18, 2025

திருச்சி: அரசு உதவி வழக்கறிஞர் தேர்வு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசு உதவி வழக்கறிஞர் கிரேடு நிலை 2 க்கான முதல்நிலை தேர்வு வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் இத்தேர்வை இரண்டு தேர்வு மையங்களில் 481 பேர் எழுத உள்ளனர். இதற்காக முதன்மை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை அலுவலராக ஆர்டிஓ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு, சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

News February 18, 2025

மாத்தூர் அருகே அண்ணன், தங்கை உயிரிழப்பு

image

மாத்தூர், சோதிராயன்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (18), அவரது தங்கை 16 வயது மாணவி, இவர் அதிகம் செல்போன் பயன்படுத்துவதை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் நேற்று அதிகாலை அவர், வீட்டில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். அவரை காப்பாற்ற அவரது அண்ணனும் கிணற்றில் குதித்துள்ளார். இதில் இருவரும் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 18, 2025

திருச்சி புதிய டைடல் பூங்கா அடிக்கல் நாட்டு விழா

image

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில், 403 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.58 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் ஆறு தளங்களுடன் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொலிக் காட்சி வாயிலாக இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

News February 18, 2025

அரசு தேர்வு குறித்து ஆட்சியர் தகவல்

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Assistant Public Prosecutor Grade II (Preliminary) தேர்வு வரும் 22.02.2025 சனிக்கிழமை முற்பகலில் நடைபெற உள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் 481 தேர்வர்கள் இத்தேர்வினை எழுத உள்ளனர். இந்த தேர்விற்கு 9 மணிக்கு பின்னர் வரும் நபர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

News February 18, 2025

மக்களிடமிருந்து குவிந்த 492 மனுக்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.17) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாற்றுதல், ஜாதி சான்று, இதர சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடம் இருந்து 492 மனுக்கள் பெறப்பட்டன.

News February 18, 2025

திருச்சி: பள்ளியை மூடக்கோரி வழக்கு – ரூ.1.50 லட்சம் அபராதம்

image

திருச்சியை சேர்ந்த அரவிந்த் என்பவர் திருச்சி மேல அம்பிகாபுரத்தில் மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே இயங்கும் பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பள்ளியை மூட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வழக்கை தொடர்ந்து உள்ளதால் மனுதாரருக்கு ரூபாய் 1.50 லட்சம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

News February 17, 2025

பயணிகளுக்கு திருச்சி ரயில்வே அறிவுரை

image

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அலுவலகம் பொதுமக்களின் நலன் கருதி சமீபத்தில் டெல்லியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலி விபத்து மற்றும் பல்வேறு பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி இன்று (பிப்.17) முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரயில் பயணிகள் படிக்கட்டில் நின்று பயணம் செய்வதும், ஓடும் ரயிலில் இறங்குவதும் ஏறுவதும் கூடாது எனவும் விலை மதிக்க முடியாத உயிரை இழக்க வேண்டாம் என அறிவித்துள்ளது.

News February 17, 2025

மன அமைதி தரும் திருச்சி தாயுமானசுவாமி கோயில்

image

திருச்சியில் அமைந்துள்ள தாயுமானசுவாமி கோயில், பண்டைய பாண்டியர்களால் கட்டப்பட்டது. இங்கு இறைவன் தாயுமானசுவாமி என்ற பெயரில் வழிபடப்படுகிறார். கோயிலின் அற்புதமான கட்டிடக்கலை மற்றும் சிவனின் தாயுமானசுவாமி வடிவம் பற்றிய புராணக்கதைகளால் இத்தலம் பெரும் புகழ் பெற்றுள்ளன. மன அமைதி, நோய் தீர பக்தர்கள் இங்கு வழிபட்டு செல்கின்றனர்.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!