Tiruchirappalli

News February 21, 2025

மீண்டும் ஒரு மொழிப்போர்-அமைச்சர் மகேஷ் எச்சரிக்கை

image

பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டம் குறித்து ஆராயும் போது அதில் புதிய கல்வித் கொள்கைகள் புகுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி இடைநிற்றலை 16 சதவிகித்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்துள்ளோம். மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாக ஒன்றிய அரசு காரணமாக இருக்கக் கூடாது. பி.எம்.ஸ்ரீ பள்ளி போன்ற திட்டங்களை கொண்டு வந்தோம் என மத்திய அமைச்சரின் கருத்து ஏற்புடையது அல்ல என அமைச்சர் அன்பில் தெரிவித்துள்ளார்.

News February 21, 2025

திருச்சி: பரபரப்பாகும் தமிழ் வாழ்க போஸ்டர்

image

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு இன்று திருச்சி மாநகரத்தின் தென்னூர், தில்லைநகர், புத்தூர், உறையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ் வாழ்க என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் ஹிந்தி எழுத்துக்களால் எழுதப்பட்டவை அடிக்கப்பட்டு மேலே தமிழ் வாழ்க என்ற போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளது.

News February 21, 2025

வீடு மனை தோஷங்களை நீக்கும் மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி!

image

திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் மன்னச்சநல்லூரில் அமைந்துள்ளது பூமிநாத சுவாமி கோயில். இங்கு சிவபெருமான் வாஸ்து கடவுளாக அருள்பாலிக்கிறார். சொந்த வீடு வாங்க,புதிய வீடு கட்டுமானம் தொடங்கியதும் வாஸ்து குறைகளால் ஏற்படும் தடங்கள்,நிலம் மனை விற்பதில் தடை,சொத்து வழக்கு பிரச்சனை உள்ளிட்ட 16 விதமான மண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வதற்கு சக்தி வாய்ந்த ஸ்தலமாக இது விளங்குகிறது.

News February 21, 2025

திருச்சி காவல் ஆணையர் தலைமையில் உறுதிமொழி

image

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு திருச்சி காவல் ஆணையர் தலைமையில், உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம். தமிழோசை உலகமெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். வளர்ப்போம் எனக் கூறப்பட்டது.

News February 21, 2025

வெளிநாட்டு வேலை மோசடி: காவல்துறை எச்சரிக்கை

image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் பற்றி திருச்சி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் முகவர்களால் வழங்கப்படும் விசாவை சரி பார்த்து, உன் விசாரணையோடு அணுக கூறியுள்ளது. மேலும் புகார் தெரிவிக்க 8939146100 தொலைபேசி எண்களை தொடர்புகொண்டோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குற்றப்பிரிவு (District Crime Branch) அலுவலகத்தில் நேரடியாகவோ புகார் தெரிவிக்கலாம்.

News February 21, 2025

வீட்டிற்குள் சடலமாக கிடந்த பெயிண்டர்

image

தெற்கு காட்டூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் ஜனகராஜ் (40) என்பவர் இருந்த வாடகை வீட்டின் கதவு கடந்த 2 நாட்களாக உள்பக்கமாக பூட்டப்பட்ட நிலையிலிருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் செல்வராஜ் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜனகராஜ் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 20, 2025

தென்னங்கீற்று வியாபாரி சாலை விபத்தில் பலி

image

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே துலுக்கம்பட்டியைச் சேர்ந்த தென்னங்கீற்று வியாபாரியான குழுமி (52), நேற்று காலை துலுக்கம்பட்டியில் இருந்து காரைப்பட்டி என்னும் ஊருக்கு பைக்கில் வியாபாரத்திற்காக செல்லும் போது பைக்கில் வைத்திருந்த தென்னங்கீற்றுகள் நழுவியதால் ஒரு கையால் அதனை சரி செய்தவாறு பைக்கை ஓட்டி சென்றபோது, சாலையோர மின்கம்பத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.

News February 19, 2025

சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்

image

திருச்சி அருகே உள்ள சமயபுரத்தில் அருள் புரிகிறாள் சமயபுரத்தாள். ஒருமுறை சந்நிதியில் வந்து நின்று, நம் மனக் குறைகளையெல்லாம் முறையிட்டு வேண்டினால் போதும், நம் துக்கங்களையெல்லாம் போக்குவாள் என்று பக்தர்கள் கூறுகின்றனர். “சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்” என்று சொலவடையும் உண்டு. இத்தலத்திற்கு நீங்கள் சென்றுள்ளீர்களா? என கமெண்ட் பண்ணுங்க. அம்மன் அருள் பெற SHARE பண்ணுங்க.

News February 18, 2025

திருச்சி சரக டிஐஜி அதிரடி உத்தரவு 

image

திருச்சி மாவட்டம் காவல் ஆய்வாளர்ளை திருச்சி சரக டிஐஜி வருண்குமார் பணியிட மாற்றம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி வையம்பட்டி காவல் ஆய்வாளராக பாலாஜி,மணப்பாறை அனைத்து மகளீர் காவல் ஆய்வாளராக கவிதா,மணப்பாறை காவல் ஆய்வாளராக ரகுராமன்,துவரங்குறிச்சி காவல் ஆய்வாளராக விஜய் கோல்டன்சிங்,ஆகியோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

News February 18, 2025

குழந்தை வரம் சுகப்பிரசவம் அருளும் திருச்சி தாயுமானவர் சுவாமி

image

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு கீழே அமைந்துள்ளது தாயுமானவ சுவாமி கோயில். தாயுமானவரை மனம் உருகி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்றும் கர்ப்பிணி பெண்கள் வாழைத்தார் வாங்கி தொட்டில் கட்டி வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என கூறப்படுகிறது. இங்கு சித்திரை பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவத்திற்கான மருந்து வழங்கப்படுவது விசேஷமாகும்

error: Content is protected !!