Tiruchirappalli

News February 24, 2025

மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை!

image

மணப்பாறை, கல்பட்டி சத்திரம் வனத்துறை மற்றும் மாவட்ட வன அலுவலர் இன்று எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார். அதில் மணப்பாறை உள்ளடக்கிய வனப்பகுதிகளுக்குள் அத்து மீறி நுழைவது மது அருந்துவது ஆடு, மாடு மேய்ப்பது தேன் எடுப்பது தீப்பந்தம் எடுத்துச் செல்வது வனப்பகுதி, தனியார் நிலங்களில் வேட்டையாடுவது மயில்களுக்கு மருந்து வைப்பது, சூதாட்டம் நடத்துவது, போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என எச்சரித்துள்ளார்.

News February 24, 2025

மக்களிடமிருந்து குவிந்த 435 மனுக்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றுதல், ஜாதி சான்று, இதர சான்று, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட உதவிகள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களிடமிருந்து 435 மனுக்கள் பெறப்பட்டன….

News February 24, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் விவசாயிகள் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 24, 2025

மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்க அழைப்பு

image

முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு, ராணுவத்தில் கணவனை இழந்த கை பெண்கள் ஆகியோருக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பிப்ரவரி 26 ஆம் தேதி திருச்சி கலையரங்கத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பித்து பயன் பெறலாம் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News February 24, 2025

மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.24) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களாக வைத்திருந்தனர். இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் இருக்கும் இடத்திற்கு தேடி வந்து அவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு நேரில் சந்தித்து பேசினார்.

News February 24, 2025

திருச்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், அவர்கள் தலைமையில் மாநகராட்சி மேயர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா, துணை ஆணையர் பாலு, மண்டலத் தலைவர் துர்காதேவி,  செயற்பொறியார்கள், உதவி ஆணையர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டனர்.

News February 24, 2025

கல்லூரி மாணவர்களிடம் விற்க முயன்ற கஞ்சா பறிமுதல்

image

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் நேற்று ஆக்ஸ்போர்ட் இன்ஜினியரிங் கல்லூரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தோஷ்குமார், ருக்குமன் ஆகிய இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தனர். உடனே போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து, ரூபாய் 2000 மதிப்புள்ள 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News February 24, 2025

புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பாக அன்னதானம்

image

அதிமுகவின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பாக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் திருச்சி அரசு மருத்துவமனை அருகே பொதுமக்களுக்கு அன்னதானத்தை மாவட்ட செயலாளர் சீனிவாசன் வழங்கினார். இதில் கவுன்சிலர் அரவிந்தன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

News February 24, 2025

திருச்சியில் மினி பஸ் இயக்க விண்ணப்பிக்கலாம்

image

திருச்சியில் 157 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் மினிப் பேருந்துகளை இயக்க விரும்புபவர்கள் நடைமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம். ஒரு வழித்தடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் பெறப்படும் பட்சத்தில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதுதொடர்பான சந்தேகங்களுக்கு, சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.

News February 24, 2025

திருச்சி: அரசு பேருந்துகளில் டிஜிட்டல் பண பரிமாற்றம் அறிமுகம்

image

திருச்சி உப்பிலிபுரம் பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் மூலம் பயணம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 35 பேருந்துகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் நடத்துனரிடம் உள்ள இயந்திரம் மூலம் ஏடிஎம் கார்டு அல்லது செல்போன் மூலம் ஸ்கேன் செய்து பணத்தை செலுத்தி டிக்கெட் பெற்று பயணம் செய்யலாம்.

error: Content is protected !!