Tiruchirappalli

News March 29, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

image

திருச்சி ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரமங்கலம் கிராமத்தில் கடந்த 29.08.2019 ஆம் தேதி சற்று மனநிலை சரியில்லாத 15வயது குழந்தையை கொண்டு சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய நபர் தொடர்பான வழக்கு, திருச்சி மகிழா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிபதி ஸ்ரீவத்சன், சம்மந்தப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 பணமும் செலுத்துமாறு தீர்ப்பு வழங்கினார்.

News March 28, 2025

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை!

image

திருச்சி- புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள தமிழக அரசின் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.25,000 வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள நபர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை அணுகி கூடுதல் தகல்வல்களை தெரிந்து கொள்ள அருவுறுத்தப்படுகின்றனர். இதனை வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு பகிரவும்…

News March 28, 2025

திருச்சியில் 485 மாணவர்கள் பொது தேர்வு எழுதவில்லை

image

தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் திருச்சி கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மொத்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 21173 ஆகும். அதில் இன்று நடைபெற்ற தேர்வில் 20688 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் ஆண்களில் 323 பேர் பெண்களில் 162 பேர் என மொத்தம் 485 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

News March 28, 2025

நீச்சல் பயிற்சி ஏப்ரல் 1 தொடக்கம்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருச்சி பிரிவின் சார்பாக வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நீச்சல் பயிற்சி ஆரம்பிக்கப்படவுள்ளது 8 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் ஆண் பெண் இருவருக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது ஏப்ரல் 1 முதல் 12 வரை முதல் வரை முதல் பேஜ் ஆரம்பமாக உள்ளது திருச்சி மாவட்ட விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

News March 28, 2025

திருச்சி: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல்

image

திருச்சியை சுற்றியுள்ள கல்லூரிகளின் பட்டியல்: ▶தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (திருச்சி) ▶ஏ.ஏ. அரசு கலைக் கல்லூரி (முசிறி) ▶டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி (குளித்தலை) ▶அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (லால்குடி, மணப்பாறை, திருவெறும்பூர், இனாம்குளத்தூர்) 12ஆம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகள் இந்த கல்லூரிகளின் பட்டியலை பயன்படுத்தி கொள்வதோடு உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News March 28, 2025

திருச்சி மக்களே உஷார் – யாரும் வெளிய வராதிங்க!

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் 102.2 – 105.8 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News March 28, 2025

திருச்சியில் ஓராண்டில் 8 ஆயிரம் தெரு நாய்களுக்கு கருத்தடை

image

திருச்சி மாநகரத்தில் மக்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கும், தெரு நாய்களை கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் நாய்களுக்கான 4 கருத்தடை மையங்கள் மூலம், நடப்பு 2024-25 நிதியாண்டில், 8 ஆயிரத்து 345 தெரு நாய்களுக்கு ரூ.1.38 கோடி செலவில் கருத்தடை செய்யப்பட்டு, ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2025

திருச்சி: சகல தோஷமும் நீங்க அருளும் மும்மூர்த்திகள்

image

மண்ணச்சநல்லூர் உத்தமர் கோயிலுக்கு சென்று வழிபட்டால், கல்வி, ஞானம் மற்றும் செல்வம் பெருகும் என்றும், மும்மூர்த்திகளும் தேவியர்களோடு அருள்வதால் இங்கு வழிபட்டால் குடும்ப ஒற்றுமை மேலோங்கி சகல தோஷங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது. மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருவதே இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இதனை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்!

News March 27, 2025

திருச்சி: குளிர்பானம் விநியோகிக்கும் ரோபோ

image

திருச்சி கருமண்டபம் பகுதியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் தேவையான சஹர் உணவுகள், நோன்பு கஞ்சி, பழங்கள் மற்றும் குளிர் பானங்களை விநியோகிக்கும் விதமாக திருச்சியைச் சேர்ந்த ஆஷிக் ரகுமான் தலைமையிலான ரோபாட்டிக்ஸ் வடிவமைப்பாளர் குழுவினரால் உருவாக்கப்பட்ட நவீன ரோபோ மூலமாக குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்பட்டது. இது அங்கிருந்த மக்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. SHARE NOW!

News March 27, 2025

திருச்சி மாவட்டத்தில் சுட்டெரிக்கு வெயில்!

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் திருச்சி, வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று முதல் 31-ஆம் தேதி வரை 39 டிகிரி சென்டிகிரேடு முதல் 41 டிகிரி சென்டிகிரேடு வரை வெயிலின் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி பகல் வேளையில் வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!

error: Content is protected !!