India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் முக்கிய சாலையான கருமண்டபம் அருகே பொன்னகர் பகுதியில் உள்ள சாலையின் நடுவே உள்ள சிக்னல் கம்பம் நடுவில் கீழே விழும் நிலையில் உள்ளது. இதையறிந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனால் எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் துரித நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் இன்று (பிப்.25) கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி, புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. கொட்டப்பட்டு சிறைச்சாலை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை, உகாண்டா, ஆஸ்திரேலியா, சீனா, பல்கேரியா போன்ற பல்வேறு நாட்டு விசாரணை கைதிகள் உள்ளனர். இந்த சிறப்பு முகாமில் உள்ள இலங்கையை சேர்ந்த தங்க ராஜா மகன் சுகந்தன் என்பவர் தன்னை விடுதலை செய்யக்கோரி நேற்று முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
திருச்சி கிழக்கு எம்எல்ஏ. இனிகோ, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் குறித்து இன்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,உலகின் எட்டு அணிகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றன. சமீபத்தில் நடந்த இந்தியா- பாகிஸ்தான் போட்டியில், பாகிஸ்தான் தோல்வி தோல்வி கண்டாலும், கோலியின் சதத்திற்கு பாகிஸ்தான் ஆரவாரம் செய்தனர். இரு நாடுகளுக்கிடையே சகோதரத்துவம் வளர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.
திருச்சி மாநகராட்சி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்சி மாநகராட்சியின் செயல்பாடுகள் எப்படி என்பது குறித்த பொதுமக்களின் கருத்துக்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்ய கூறப்பட்டுள்ளது. மேலும் www.sbmurban. org/feedback என்ற இணையத்தில் சென்று மொபைல் நம்பரை உள்ளீடு செய்து திருச்சியில் நீங்கள் வசிக்கும் பகுதியில் தூய்மை செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை பற்றி கருத்துகளை பதிவு செய்யலாம்
இன்று (பிப்.25) தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பாக மூன்றாவது மொழி முகமூடி அணிந்து விழித்தெழுந்து என்ற தலைப்பில் இந்திய அரசின் மும்மொழிக் கொள்கைத் திட்டத்தையும் புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தையும் எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி ரயில் நிலையம் அருகில் நடத்தப்பட்டது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாளர் இலக்குவன் அவர்கள் தலைமை ஏற்றார்.
திருச்சி மாவட்ட காவல்துறை பொதுமக்களின் நலன் கருதி இன்று (பிப்.25) முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், குற்ற சம்பவங்களை தடுக்க வீடு, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் பொதுவெளி மற்றும் சாலை போன்றவை தெரியும்படி CCTV கேமராக்கள் பொருத்தவும். குற்ற சம்பவங்கள் தொடர்பான தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100 அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கவும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து ரயில் நிலையங்களில் உள்ள இந்திய எழுத்துக்களை தார் பூசி அழிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இது போன்ற சம்பவங்கள் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடைபெறாமல் இருக்க, திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில் நிலையத்தில் சிறப்பு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொட்டியம் தோளூர்பட்டியை சேர்ந்தவர் உமாராணி.இவருக்கும் பாலசுப்பிரமணியன் என்பவருக்கும் திருமணமாகி 3 மகன்கள் உள்ளன. இந்நிலையில்,4வது முறையாக உமாராணி கர்ப்பமாகி உள்ளார். திடீரென,நேற்று அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தொட்டியம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெறும்பூர் அருகே ஆசை வார்த்தைகளால் பகவதிபுரத்தைச் சேர்ந்த முகமது அலி (37) என்பவர் பள்ளி மாணவியிடம் 2 வருடமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான வேன் டிரைவரை திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் குண்டூரை சேர்ந்த சாஹிர் நேற்று தனது மனைவியுடன் தனது டூவீலரில் புதுக்கோட்டை திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது குண்டூர் அருகே வந்தபோது அதே வழியில் பாலாஜி என்பவர் டூவீலரில் வந்து வேகமாக ஷாகிர் டூவீலர் மீது மோதினார். இதில் மூன்று பேரும் காயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.