India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி பாபு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கதிர். இவர் கடந்த 17ஆம் தேதி அவரது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றதாக, கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இருசக்கர வாகனத்தை திருடியது தொடர்பாக மணியரசன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்து, அவரிடம் இருந்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (பிப்.28) காலை 10.30 மணிக்கு பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடு பொருட்கள், வேளாண்மை தொடர்பான கடனுதவிகள் மற்றும் மேம்பாட்டிற்கான நல திட்டங்கள் குறித்து தெரிவித்து பயனடையும் படி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரைச் சேர்ந்த கைதி ஒருவர் நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு காவல் பணியில் இருந்த பெரம்பலூர் காவல் நிலைய காவலர் ராஜா மருத்துவமனையில் இருந்த ஒரு செவிலியர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று இளம் ராஜாவை அதிரடியாக கைது செய்தனர்.
பெரம்பலூரைச் சேர்ந்த கைதி ஒருவர் நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு காவல் பணியில் இருந்த பெரம்பலூர் காவல் நிலைய காவலர் இளம் ராஜா மருத்துவமனையில் இருந்த ஒரு செவிலியர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று இளம் ராஜாவை கைது செய்துள்ளனர்.
சமயபுரம் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25.02.2025 அன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நம்பர் பிளேட் இல்லாத டூவிலரில் சாகசம் செய்து இந்த வீடியோவை இணையத்தில் வைரலானது. மேற்படி டூவிலரை ஆபத்தான முறையில் இயக்கிய நபர் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள்
8939146100 என்ற எண்ணிற்கு வாட்சப் மூலம் தெரிவிக்க திருச்சி மாவட்ட காவல் அலுவலகம் அறிவித்துள்ளது.
இன்று (பிப்.26) திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் குறித்தான விழிப்புணர்வு கூட்டம் மற்றும் முன்னாள் படை வீரர்களுக்கான சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கம் திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் சுய தொழில் வேலைவாய்ப்பு குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஏராளமான தொழில் முனைவோர்களும் கலந்து கொண்டனர்.
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் கிழக்கு மாநகரம் சார்பில் மாநகர செயலாளர் மதிவாணன் தலைமையில் பொதுமக்களிடையே தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து, காட்டூர் கடைவீதிகள் மற்றும் திருவெறும்பூர் கடைவீதிகள் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அப்பொழுது மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை குழந்தைகள் நலத்துறை மற்றும் இதயங்கள் அறக்கட்டளை சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான முதலாம் வகை நீரிழிவு நோய்க்கான நவீன இன்சுலின் சிகிச்சை வழங்கும் முகாம் நாளை (பிப்.27) காலை அரசு மருத்துவமனை தொடக்கநிலை இடையீட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாமென கூறப்பட்டுள்ளது.
சமயபுரத்தில் இருந்து ஆதி மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் நரசிங்கமங்கலம் வேப்பமரம் மண்டா பிடியில் படுத்திருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவல் நிலைய வருகை பதிவேடு கோப்புகள், குற்ற பதிவேடு கோப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்தார். மேலும் காவலர்கள் பணி குறித்து கேட்டறிந்து குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு நேர பணி குறித்து ஆலோசனை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.