India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாட்டில் இருந்து ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட 600 கிறிஸ்தவர்களுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. 01.11.2025-க்கு பிறகு புனித பயணம் மேற்கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தை திருச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து, 28.02.2025-க்குள் சென்னை சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <

திருச்சி, உறையூர் பகுதியில் தயாரிக்கப்படும் பருத்தி சேலைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த சேலைகள் கைத்தறியால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. மேலும் தரமான நூல், சாயம், காவிரி நீர் ஆகியவையும் சேலை பிரபலமடையக் காரணமாகும். உறையூர் பருத்தி சேலை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி ஆகிறது. முன்னதாக மணப்பாறை முறுக்குக்கு 2023இல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இத்தகவலை SHARE பண்ணுங்க.

திருச்சி-பாலக்காடு ரயில் புறப்படும் இடம் பராமரிப்பு பணிகள் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – பாலக்காடு விரைவு ரயிலானது வரும் டிச.,23 மற்றும் 30 ஆகிய தேதிகளில், வழக்கமாக புறப்படும் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து புறப்படாமல், திருச்சி கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மதியம் 1:12 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான விருது பெற தகுதி உடைய நபர்கள், தங்களது விண்ணப்பத்தை வரும் 18ஆம் தேதிக்குள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி, சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் பிலால் (46). சரக்கு ஆட்டோ டிரைவரான இவர் நேற்று இரவு காந்தி மார்க்கெட் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். தலைமை தபால் நிலையம் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடிக்க இறங்கினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

முசிறி அடுத்த அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி பாப்பா (50). சம்பத்தன்று இவரது இளைய மகன் சுதாகர் தனது தாயிடன் சொத்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அதையடுத்து அவரது இடது கை கட்டை விரலை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.