India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சிராப்பள்ளி காஜாமலை குழந்தை ஏசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில் பொதுமக்கள் வாக்களிப்பதை இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் காதர் மொய்தீன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில்,
இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40-க்கு 40 இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும். மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றார்.
திருச்சி கிராப்பட்டி தனியார் பள்ளியில் வாக்கு சாவடி எண் 212ல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தனது வாக்கினை செலுத்தினர். அருகில் உள்ள 214, 215வது வாக்கு சாவடியில் இயந்திர பழுது காரணமாக அரை மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை, எவ்வளவு நேரம் ஆகும் எனக் கூறுங்கள் என தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மா.பிரதீப்குமார் காஜாமலை ஜம்லியாதஸ் சாதிக் மெட்ரிகுலேசன் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் அங்கிருக்கும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு பதிவு மையத்தில் ஏதும் குறைபாடு உள்ளதா என கேட்டறிந்தார். ஆட்சியர் வாக்குப்பதிவு செய்து பின்பு பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் இன்று தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில், திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி எம்பி சிவா தனது வாக்கை பதிவு செய்தார். மேலும் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்து சென்றார்.
திருச்சியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலையிலேயே தனக்கு வாக்குள்ள திருச்சி பாராளுமன்ற தொகுதி, திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியான தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
தமிழ்நாடு தேர்தல் ஆணையம், பைக் டாக்சி நிறுவனமான ரேபிடோ உடன் இணைந்து இலவச பைக் டாக்சி சேவையை வழங்குகிறது. தமிழ்நாட்டின் கோவை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட 5 நகரங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இந்த இலவச சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி செல்லும் வாக்காளர்கள் ரேபிடோ செயலியில் பைக் டாக்சி புக் செய்து “VOTENOW” என்ற Code ஐ பயன்படுத்தினால் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்ய முடியும்.
தென்னூர் அண்ணா நகர் பாரதி நகர் சேர்ந்தவர் மணிகண்டன் (18), பிளஸ்டூ படித்துள்ளார்.இந்நிலையில் இவருக்கு விபத்து ஏற்பட்டு அதில் இடது கையில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மணிகண்டனுக்கு அடிக்கடி கடுமையான வயிற்று வலி வந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மணிகண்டன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர் .
கோடை வெயிலை சமாளிக்க, இன்று காலை வயலூர் ரோடு, பிஷப்ஹீபர் கல்லூரி சாலை, சீனிவாசா நகர், பகுதிகளில், நொங்கு ,மற்றும் நொங்கு தண்ணீர் , விற்பனை சூடு பிடித்துள்ளது, 10 ரூபாய்க்கு,2, 20 ரூபாய்க்கு, 5என்று விற்றாலும், ஆரோக்கியமான குளிர்ச்சி தரும், பொருள் என்பதால், மக்கள் விருப்பமுடன் வாங்கிச் செல்கின்றனர். காலையி 9 மணிக்கு கொண்டுவரும் நொங்கு, மதியம் 2மணிக்குள் விற்று விடுகிறது.
Sorry, no posts matched your criteria.