Tiruchirappalli

News March 27, 2024

திருச்சியில் மாணவி செய்த விபரீத காரியம்

image

திருச்சி கீழ அம்பிகாபுரம் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் யுவஸ்ரீ (23). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் எம். ஏ முதுகலை ஆங்கில பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே மனமுடைந்த யுவஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் விசாரணை

News March 27, 2024

சென்னைக்கு இணையாக மாறும் திருச்சி

image

சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணிகள் தொடங்க உள்ளன.அதாவது திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மெட்ரோ தொடங்கப்பட உள்ளது. இதில் திருச்சியில் தொடங்கப்பட உள்ள மெட்ரோவில் மேப் வெளியாகி உள்ளது.அறிக்கையில், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் பெருந்திரள் மற்றும் துரித போக்குவரத்திற்கான விரிவான சாத்தியக்கூறு ஆகும்.

News March 27, 2024

திருச்சியில் சீமான் பிரச்சாரம் அறிவிப்பு

image

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் வரும் ஏப்ரல் 2-ம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளார். மேலும் அன்றையதினம் காலை கரூர் நாடாளுமன்ற தொகுதி மணப்பாறை பகுதியில் வேன் பிரச்சாரம் செய்கிறார். மாலை ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, பகுதியில் வாகன பிரச்சாரம் மேற்கொள்கிறார். மேலும் இரவு மலைக்கோட்டை பகுதியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் எனது தகவல் வெளியாகி உள்ளது.

News March 26, 2024

தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்து கொண்ட ஆட்சியர்

image

திருச்சி, திருவெறும்பூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப் குமார் அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ,துண்டு பிரசுரங்களை வழங்கி, பேரணியில் கலந்து கொண்டு சென்றார்.

News March 26, 2024

திருச்சி தொகுதியில் இதுவரை 12 வேட்பு மனுக்கள் தாக்கல்

image

திருச்சியில் ஒரே நாளில் முக்கிய அரசியல் கட்சிகளான திமுக கூட்டணியின் மதிமுக வேட்பாளர், அதிமுக, அமமுக., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் இந்த அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள், சுயேச்சைகள் என ஒரே நாளில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி திருச்சி தொகுதியில் இது வரை 12 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News March 26, 2024

திருச்சியில் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை.!

image

திருச்சியில் கடந்த 2019ம் ஆண்டு ஏர்போர்ட் பகுதியில் டிபன் கடை நடத்தி வந்த உமா சத்தியா என்பவர் சிவசண்முகம் என்பவரை தனது கடைக்கு வரக்கூடாது என்று சொன்னதால், ஆத்திரமடைந்த சிவசண்முகம் உமாவை கத்தியால் குத்தி படுகொலை செய்தார். இதுகுறித்த வழக்கு, இன்று திருச்சி 3வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சிவசண்முகத்திற்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

News March 26, 2024

திருச்சி எஸ்.பி-யின் முக்கிய அறிக்கை

image

தமிழ்நாட்டில் வருகின்ற 19.4.2024 நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தல் பணிக்காக முன்னாள் ராணுவ வீரர்கள், முன்னாள் காவல்துறையினர், முன்னாள் தீயணைப்பு துறையினர், முன்னாள் சிறை துறையினர் ஆகியோர் வருகின்ற 17/4/2024 முதல் 19/4/2024 வரை 3 நாட்கள் தேர்தல் பணியாற்ற விரும்புவோர், தங்கள் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விருப்பத்தினை தெரிவிக்க திருச்சி மாவட்ட எஸ்பி இன்று தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

திருச்சியின் மெட்ரோ வழித்தடங்கள் அறிவிப்பு!

image

திருச்சியின் மெட்ரோ வழித்தடங்கள் நேற்று வெளியிடப்பட்டது. சமயபுரம் முதல் வயலூர் வரை செல்லும் வழித்தடத்தில் 17 நிறுத்தங்கள் இடம் பெற்றுள்ளன. துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை செல்லும் வழித்தடத்தில் 16 நிறுத்தங்களும் வழி 1 – சமயபுரம் முதல் வயலூர் (18.7 கி.மீ)
வழி 2 – துவாக்குடி முதல் பஞ்சப்பூர் (26 கி.மீ) வழி 3 – ஜங்ஷன் முதல் பஞ்சப்பூர் (23.3 கி.மீ) அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2024

திருச்சி மாவட்டத்தில் 33,809 பேர் 10 வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள்

image

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கிய நிலையில் திருச்சி மாவட்டத்தில் 16,983 மாணவர்களும், 16,826 மாணவிகளும் என மொத்தம் 33,809 பேர் தேர்வு எழுதுகின்றனர். 169 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதில் 63பேர் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுகின்றனர். திருச்சி மத்திய சிறைச்சாலையை சிறு கைதிகள் 9 பேர் 10வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். 

News March 26, 2024

திருச்சியில் எம்.எல்.ஏ அறிக்கை!

image

திருச்சி எம்எல்ஏ இனிகோ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், பாஜகவுக்கு தமிழக மக்கள் வாக்களித்தால் அது பெரும் அவமானம் எனச் முதல்வர் ஸ்டாலின் விளாசி உள்ளதாக கூறினார் . ஒருவேளை மீண்டும் மோடியே ஆட்சிக்கு வந்து விட்டால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும் என முதல்வர் கூறியதை நினைவு கூர்ந்துள்ளார்.

error: Content is protected !!