Tiruchirappalli

News April 3, 2024

திருச்சி: ஆக்ரோஷமான செங்குளத்தான் அருள்வாக்கு

image

திருச்சி புத்தூர் அடுத்த உறையூர் எல்லை காவல் தெய்வமாக விளங்கும் குளுந்தாளம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு செங்குளத்தான் கருப்பசாமி அரிவாள் மீது ஏறிய மருளாளி சுவாமி அருளுடன் வீதியில் ஆடி, பக்தர்களின் மனக்குறைகளைப் போக்க பரிகாரம் அருள் வாக்கு கூறினார். இதையொட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

News April 3, 2024

திருச்சி: நா.த.க பரப்பும் புதிய பிரச்சாரம்!

image

நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷை ஆதரித்து திருச்சி முழுவதும் அதன் நிர்வாகிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நோட்டீஸ் வழங்குதல், திண்ணைப் பிரச்சாரம் ஆகியவற்றை கடந்து தற்போது வாட்ஸாப் மூலம் “ஸ்டாப் ABCD” அதிமுக, பிஜேபி, காங்கிரஸ், மற்றும் திமுக, வேறு எந்த கட்சிகளும் வேண்டாம் நாம் தமிழர் கட்சிக்கே உங்கள் ஆதரவு என்று பரப்பி வருகின்றனர்.

News April 3, 2024

 திருச்சி: தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை?

image

திருச்சி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார். புதுகை- திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் 100 % வாக்களிக்கும் வகையில் அன்றைய தினம் அனைத்து நிறுவனங்களும், தேர்தல் அன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

News April 3, 2024

திருச்சி: வாகனசோதனையில் 17 வழக்குகள்

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி தொகுதியில் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் . இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் அரசியல் கட்சியினர் மீது இதுவரை 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திலிருந்து ,தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட வாகன சோதனையில், நேற்று வரை ,1 கோடியே 47 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News April 2, 2024

திருச்சி: இனோவா கார், 5 பவுன் பரிசு!

image

திருச்சி மக்களவைத் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோருக்கு இனோவா கார், தங்க செயின் பரிசு என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக வாக்குகள் பெற்றுத் தரும் நகர செயலாளருக்கு இனோவா காரும், வட்டச் செயலாளருக்கு 5 பவுன் நகையும் வழங்குவேன் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளதாக தகவல்.

News April 2, 2024

“மக்களுக்கும் எனக்குமான காதல் புனிதமானது”

image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து, இன்று(ஏப்.2) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, “திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியாவின் நுழைவு வாயிலாக தமிழ்நாடு இருந்திருக்கும்; தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும், எனக்கும் உள்ள காதல் சாதாரணமானது அல்ல; அதையும் தாண்டி புனிதமானது என பேசினார்.

News April 2, 2024

திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு.!

image

திருச்சி உறையூர் கல்லறை மேட்டு தெரு அருகில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தில் மதில் சுவர் கட்டப்படுவதை கண்டித்து, வீடு தோறும் கருப்பு கொடி ஏற்றி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறோம் என கல்லறை மேட்டு தெரு இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் மாநகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 2, 2024

திருச்சியில் கமல்ஹாசன் பிரச்சாரம்

image

திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளில் ம.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் செய்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

News April 2, 2024

திருச்சி:சுட்டெரிக்கும் கோடை வெயில்

image

திருச்சியில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 102.2°F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 2, 2024

திருச்சியில் பயங்கர விபத்து; இருவர் சம்பவ இடத்தில மரணம்

image

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பால்பண்ணை அருகே உள்ள மேம்பாலத்தில் சென்னையிலிருந்து கம்பம் நோக்கி 34 நபர்களுடன் சென்ற தனியார் ஆம்னி பேருந்து முன்பு தர்மபுரியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி செங்கல் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரி பின்புறம் மோதி இன்று விபத்துக்குள்ளானது பேருந்து ஓட்டுனர் ஓட்டுனரான சந்திரன் மற்றும் பேரனுடன் பயணித்த மூதாட்டி பழனியம்மாள் என இருவர் உயிரிழந்தனர்.

error: Content is protected !!