Tiruchirappalli

News April 4, 2024

திருச்சியில் செல்ஃபி எடுத்த மாவட்ட கலெக்டர்

image

திருச்சியில் வரை இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட செல்பி ஸ்டாண்டில் செல்பி எடுத்து, வாக்களிப்பது நமது தலையாய கடமை என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.அதில்,பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்ஸோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 4, 2024

திருச்சி: தேர்தல் பணிமனை திறப்பு

image

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையாவை வெற்றி பெற வைப்பது தொடர்பான, தேர்தல் பணிகள் மேற்கொள்வது மற்றும் ஆலோசனைகள் மேற்கொள்வதற்காக தேர்தல் பணிமனை நேற்று திறக்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சர் மனோகரன், முன்னாள் எம்பி குமார், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, முன்னாள் எம்பி ரத்தினவேல் ஆகியோர் கூட்டாக இணைந்து குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.

News April 4, 2024

திருச்சி: மது தராததால் பாரில் கத்தி குத்து

image

தென்னூர் பாரதி நகரை சேர்ந்த சுரேந்தர் தனது நண்பருடன் குப்பநத்ததில் உள்ள பாரில் நேற்று மது அருந்தி கொண்டிருந்தார்.அங்கு வந்த குப்பனத்தை சேர்ந்த ரவுடி தினேஷ்குமார் சுரேந்தரிடம் மது கேட்டுள்ளார்.அவர் கொடுக்க மறுக்கவே தகாத வார்த்தையால் திட்டியதுடன் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த சுரேந்தரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் தில்லை நகர் போலீசார் தினேஷை கைது செய்தனர்.

News April 4, 2024

திருச்சியில் நகை பணம் கொள்ளை

image

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் 5வது குறுக்கு தெருவை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ராஜேஷ் (31). இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டு நேற்று மாலை வந்த போது வீட்டின் பூட்டு திறந்து பீரோவிலிருந்த 4பவுன் தங்க நகைகள், ரூ.28ஆயிரத்தைத் திருடியது தெரியவந்தது. இதையறிந்த உறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்கள்.

News April 3, 2024

திருச்சி மாநகராட்சி ஆணையர் ஆய்வு

image

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம் 1, வார்டு 15, சஞ்சீவி நகரில் சமுதாய கூடத்தில், மாநகராட்சி ஆணையர் சரவணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு சுகாதாரம் குறித்து ஆய்வு செய்த ஆணையர் பராமரிப்பு குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தேவதானம் நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.

News April 3, 2024

மணச்சநல்லூர் அருகே தேர்தல் புறக்கணிப்பு

image

மண்ணச்சநல்லூர் அருகே பெரகம்பியில் உள்ள வனப்பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பெரகம்பி, எதுமலை கிராமத்தை இணைக்கும் சாலை ஒன்று உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக வாகனம் எதுவும் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இது பற்றி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் சாலை போடப்படாததால் அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக இன்று வீடுகளில் கருப்பு கொடி கட்டியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 3, 2024

திருச்சி கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

image

வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி வாக்காளர் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் இன்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் ஜாதி, மதம், இனம் பார்க்காது, தேர்தலில் வாக்களிப்பது நமது அன்றாட கடமை எனவும், பணம் வாங்கி ஓட்டளிக்க மாட்டேன் எனவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் தபால் பணியாளர்களுடன் பொதுமக்களும் பங்கேற்றனர்.

News April 3, 2024

திருச்சி அருகே அடையாளம் தெரியாத சடலம்

image

திருச்சி அருகே துறையூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பச்சைமலை மணலோடை பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக வந்த தகவல்படி காவல்துறையினர் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார் ?என விசாரிக்கின்றனர்.

News April 3, 2024

திருச்சி: முஸ்லிம் சொசைட்டி தலைவரிடம் ஆதரவு

image

திருச்சியில் உள்ள தி முஸ்லிம் லிட்டரரி சொஸைட்டியின் தலைவர் அகமது பிரதர்ஸ் உரிமையாளர் உமர் இக்பால்,
செயலாளர் கவிஞர் சையது ஜாபர் ஏற்பாடு செய்திருந்தால் நிர்வாகிகள் கூட்டத்தில் இன்று துரை வைகோ பங்கேற்றார். அதில் கலந்து கொண்ட துரை திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு ஆதரவு திரட்டினார்.

error: Content is protected !!