India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 84 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், ஒரு வாக்குச்சாவடி கூட மிகவும் பதற்றமானது இல்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
திருச்சி எம் ஐ இ டி பொறியியல் கல்லூரியில் நேற்று ,மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பாக புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல்களின் வணிக ரீதியான பயன்பாடுகள் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது .எம் ஐ இ டி கல்வி நிறுவனங்களின் தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் நவீன் சேட் வரவேற்றார், இதில் துணைத் தலைவர் முத்துக்குமரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .
திருச்சி, திருவானைக்கோவில் அமைந்திருக்கும் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோயில் திரு தேரோட்டம் வரும் 8ம் தேதி நடைபெற இருப்பதால், அதை முன்னிட்டு 245ஆம் ஆண்டு மண்டகப்படி விழாவில் அபிஷேகம் நடைபெற்றது. அதுசமயம் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் வீதி விழா வந்தார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தும் வகையில், திருச்சி இந்திரா கணேசன் கல்லூரியில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்கள் கலந்து கொண்ட இருசக்கர வாகன பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பிறகு, செய்தியாளர்களிடம் பேசியது, கடந்த 20 ஆண்டுகளாக என்னென்ன திருச்சிக்கு தேவை என்பதை ஆராய்ந்து இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறேன்.6 சட்டமன்ற தொகுதிகளிலும்,6 மக்கள் பிரதிநிதி அலுவலகங்கள் திறக்கப்படும். திருச்சியிலும், புதுக்கோட்டையில் ஐடி பார்க் மற்றும் பசுமை பூங்கா அமைக்கப்படும் என்றார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருச்சி விமானநிலையத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி, அருள்மிகு ஸ்ரீ பீளிக்கான் முனீஸ்வரர் ஆலயத்தின் 41ம் ஆண்டு திருவிழாவையொட்டி 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து நகர்ப்புறங்களில் ஊர்வலமாக வந்து ஸ்ரீ அங்காள ஈஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.
முகூர்த்த நாளான இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இன்று 265 பேருந்துகளும், நாளை 350 பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் உப கோயிலான நந்திகேஸ்வரர் திருக்கோவிலில் மராமத்து பணிகள் நடைபெற்று குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு 1ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. பின்னர் நேற்று காலை ராஜகோபுரம், செவ்வந்தி, விநாயகர், ஆஞ்சநேயர், நந்திகேஸ்வரர் சந்ததிகளுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப் குமார், இன்று 80 வயதிற்கு மேற்பட்டவர்களை அவர்களது இல்லத்திலேயே வாக்குப்பதிவு செய்யும் நிகழ்வை, திருச்சி பொன் நகர் பகுதியில் உள்ள முதிய வாக்காளர் இல்லத்திற்கு நேரில் சென்று ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும், வாக்குப்பதிவு செய்யும் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.