India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது. அந்த வகையில் தமிழகத்தில் திருச்சி மாவட்டம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அது பொதுமக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. எனவே கட்டாயம் பொதுமக்கள் அனைவரும் ஏப்ரல் 19ம் தேதி அன்று வாக்குச்சாவடிக்கு சென்று தவறாமல் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
திருச்சிராப்பள்ளி காவிரி ஆற்றில் எம்.ஏ.எம் மேலாண்மை கல்லூரி மாணவ, மாணவிகள் உருவாக்கியுள்ள மணல் சிற்பத்தையும், தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளையும் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமார் இன்று பார்வையிட்டார்.
மேலும் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் வாசிக்க அதனை மாணவ, மாணவிகள் என அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் ஏப்ரல் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி இரவு 12 மணி வரை மூடப்படும். மேலும் மகாவீர் ஜெயந்தியான ஏப்ரல் 21, மே 1ஆம் தேதி ஆகிய நாள்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி குழுமணி அருகே அதிமுக பிரமுகர் அன்பரசனின் மனைவி, எட்டரை ஊராட்சி தலைவரான திவ்யா. அவரது வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறையினர் சோதனை செய்ததில் ரூ.1 கோடிக்கு மேல் பணம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து விசாரித்த வருமான வரித்துறையினர் இன்று திவ்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி என்ஐடியில் புத்தகத்தின் சக்தி மற்றும் பயோ மெடிக்கல் கருவிகள் எனும் சிறப்பு சொற்பொழிவு நேற்று நடந்தது. இதில் டிஆர்டிஒ பிரமோஸ் திட்ட முன்னாள் தலைவர் சுந்தர்ராஜன் பேசுகையில், சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி ஆகிய துறைகள் எந்த காலத்திலும் சுணக்கம் அடையாது. சிறந்த எதிர்காலம் உள்ள இந்த மூன்று துறைகளிலும், மாணவர்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
திருச்சி குழுமணி அருகே எட்டரையை சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்பரசன். இவரது மனைவி திவ்யா எட்டரை ஊராட்சி தலைவராக உள்ளார். நேற்றிரவு அவரது காரில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் வருமான வரித்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது காரில் சோதனை செய்ததில் ரூ.1 கோடிக்கு மேல் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல்செய்யப்பட்டது. இது குறித்து வருமான வரித்துறையினர் விசாரிக்கின்றனர்.
திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொட்டியம் ஒன்றியம் நத்தம், ஏலூர்பட்டி, ஆனைக்கல்பட்டி, வேந்தன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் டிஜிட்டல் வாகனம் மூலமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் இரட்டை இலை சின்னத்தில் டிஜிட்டல் மூலம் வாக்கு சேகரித்தார்.
திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையர் சரவணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக ஸ்ரீரங்கம் பகுதியில் கீதாபுரம் படித்துறையில் ரிவர் பண்ட் டெவலப்மெண்ட் பணியினையும் ஆணையர் ஆய்வு செய்து பணிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தார்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் தேர்த் திருவிழாவினை முன்னிட்டு (16.04.2024) செவ்வாய்க்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையானது 2024 – பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள் & பணியாளர்களுக்கு பொருந்தாது என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.