India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் நத்தமாங்குடியிலிருந்து லால்குடி நோக்கி வந்த நகர பேருந்து மேட்டுபட்டி அருகே வந்த போது எதிரே வந்த பேருந்திற்கு வழிவிட ஒதுக்கிய போது பேருந்து கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் காயம். அக்கம் பக்கத்தினரின் உதவியோடு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி மாநகரில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்கனவே 142 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நேற்று உறையூர் போலீஸ் நிலைய வளாகத்தின் பின்புறத்தில் கேட்பாரற்று கிடந்த 10 டூவிலர்களையும் , டூவீலர் நிறுத்துமிடத்தில் கேட்பாரற்று கிடந்த 12டூவீலர்கள் என 22வாகனங்களை உறையூர் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வரும் 2024-நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 22 ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலும், நாகை, குமரியில் மார்ச்.23ஆம் தேதியும் நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் வரும் 26 ஆம் தேதியும் தேர்தல் பரப்புரை மேற்க்கொள்ளப் போகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் 2024 ஐ முன்னிட்டு ,திருச்சி மாவட்டத்திற்கு தேர்தல் செலவின் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஸரந்தீப், சின்ஹா, முகேஷ் குமார் பிரமனே ஆகியோர் மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள, தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
திருச்சி நாடாளுமன்றத்தில் போட்டியிட ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் ராஜேந்திரன் என்பவர் தேர்தல் அலுவலரான ஆட்சியர் பிரதீப்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.டிஜிட்டல் இந்தியாவில் வேட்பாளர்கள் பணம் செலுத்த டிஜிட்டல் முறையை நடைமுறைபடுத்த வேண்டுமெனக் கூறி ஆதார் &வாக்காளர் அட்டை,ஓட்டுனர் உரிமம்,ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை தனது கழுத்தில் மாலையாக அணிந்து வந்து வினோத முறையில் வேட்புமனு தாக்கல் செய்தார்
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.
திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்தளத்தில் மருந்தகம் வைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்காக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளின் நிலை குறித்து இன்று திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் நேரில் ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
காட்டுப்புத்தூர், திருச்சி-நாமக்கல் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து லஞ்சம் வாங்கியதாக ரோந்து பணியில் ஈடுபட்ட வடிவேல்,செல்வம் ஆகிய 2 எஸ்.எஸ்.ஐ,-களையும், தலைமை காவலர் பாலச்சந்திரன்,முதன்மை காவலர் சாந்தமூர்த்தி,காவலர்கள் நந்தகுமார், அண்ணாமலை ஆகிய 4 காவலர்கள் என மொத்தம் 6 போலீசார்களை ஆயுதப்படைக்கு மாற்றி இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவு பிறப்பித்தார்.
திருச்சி தெற்கு மாவட்ட கூத்தைப்பார் முன்னாள் பேரூர் அதிமுக செயலாளர் S.குமார் நேற்று இயற்கை எய்தினார். இச்செய்தி அறிந்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் எம்பியுமான ப.குமார் இன்று நேரில் சென்று உடலுக்கு மாலை அணிவித்து, அவரது குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார். உடன் கூத்தைப்பார் பேரூர் செயலாளர் முத்துக்குமார் இருந்தார்.
Sorry, no posts matched your criteria.