India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதய ராஜ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திமுக பிரச்சாரம் செய்யும் இடங்களில் பொதுமக்கள் சிறப்பு வரவேற்பு அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் 2.73 லட்சம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டமும், வெளிநாட்டு முதலீடு இருக்கும் மூலம் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகி, அதன் வெளிப்பாடு இந்த வரவேற்பு என்றார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் மற்றும் திருச்சி பாராளுமன்ற தேர்தல் பார்வையாளர் தினேஷ்குமார் ஆகியோர் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், 2ம் கட்டமாக வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்புவதற்காக குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணியை தொடங்கி வைத்தனர்.
புத்தானத்தம் மேற்கு தெருவில் உள்ள அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா நடத்திட போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து நடந்த பேச்சு வார்த்தை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
தாமினாட்டில் கல்லக்குடி உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மார்ச் 23ஆம் தேதி அறிவித்தது. அதன்படி இந்த கட்டண உயர்வு இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கட்டண உயர்வு முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
புத்தனா நத்தம் மேற்கு தெருவில் உள்ள காளியம்மன் கோவில் அருகில் மாநில நெடுஞ்சாலை உள்ளதால் சாலை விரிவாக்க பணிகளுக்காக கோயிலை நெடுஞ்சாலை துறை சார்பில் அகற்றிக் கொள்ள கூறப்படுவதாக தெரிய வருகிறது இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடத்த போலீஸ் மற்றும் வருவாய் துறையில் அனுமதிக்கவில்லை இதை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீஸ் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
தொட்டியம் மதுரை காளியம்மன் பங்குனி திருவிழா 02.04.2024 முதல் 9.04.2024 வரை நடைபெற இருப்பதால் திருவிழாவிற்கு சுமார் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வர இருப்பதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களது உடைமைகள் மற்றும் பொருள்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் கூட்ட நெரிசலில் ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறா வண்ணம் விழிப்புணர்வுடன் இருக்க தொட்டியம் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனை ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் மற்றும் முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் அணியின் ஆதரவாளர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
திருச்சி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து நேற்று இரவு திருச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக அமைப்பு செயலாளர் சாருபால தொண்டைமான், பாஜக உறுப்பினர் காளீஸ்வரன் உட்பட 700 பேர் மீது தில்லைநகர் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சியில் பாஜக கூட்டணி கட்சியான அமமுக வேட்பாளர் செந்தில் நாதனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரப்பரை மேற்கொண்டார். அப்பொழுது, திருச்சி இழந்த பெருமையை மீட்டெடுக்க தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் செந்தில்நாதனுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றா. தேஜகூ வேட்பாளர் வெற்றி பெற்றால் திருச்சி வளர்ச்சியடைவது உறுதி எனக் கூறினார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 25 நபர்களுடன் சட்ட விரோதமாக ஒன்று கூடி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினர். மேலும், அனுமதி பெறாத வாகனங்களில் ஊர்வலமாக சென்று சட்டவிரோதமாக வாக்குகள் சேகரித்ததாக வேட்பாளர் ராஜேஷ், தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரபு உள்ளிட்ட 25 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.